சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…

தேவையான பொருள்கள்:

வெள்ளரிக் காய் – 2
பயத்தம் பருப்பு – 1/4 கப்
மாங்காய் – ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை –  சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு –  தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் (விரும்பினால்)

vadaiparuppu.JPG 

செய்முறை:

  • பயத்தம் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிய வைக்கவும்.
  • வெள்ளரிக் காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அத்துடன் ஊறவைத்த பயத்தம் பருப்பு, மிகப் பொடியாகக் கீறிய மாங்காய்த் துண்டுகள், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • விரும்பினால் இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் கலக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பானகம் | நீர்மோர்