கேரள மாநில உணவு. ஆனால் நாகர்கோயில் கன்யாகுமரி பக்க சைவ வேளாளர் அல்லது சைவப் பிள்ளைமார் உணவு என்று இங்கே சொல்கிறார்கள். தெரியவில்லை.

vaazai_senai_eriseri1.JPG

தேவையான பொருள்கள்:

வாழைக்காய் – 2
சேனைக் கிழங்கு – 250 கிராம்
நேந்திரங்காய் – 1 (விரும்பினால்)
தேங்காய் – 1
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணை – தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிது
பச்சரிசி – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

vaazai_senai_eriseri2.JPG

செய்முறை:

  • சேனைக் கிழங்கையும் வாழைக்காயையும் தோல்சீவி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (கை கறையாகி இருக்கும். எண்ணை தடவி, பின் சோப் போட்டுத் தேய்த்தால் கறை போய்விடும்.)
  • தேங்காயத் துருவிக் கொள்ளவும்.
  • முதலில் சேனையை நன்கு இருமுறை கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் அரை வேக்காடு(மட்டும்) வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.
  • புளியைக் நீர்க்க கரைத்து அடுப்பில் வாணலியில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், வாழைக்காய், பாதி வேகவைத்த சேனை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,  உப்பு சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும்.
  • மிளகை மிக மென்மையாக அரைத்து அத்துடன் சேர்க்கவும். [இப்போது கை அரிக்க ஆரம்பிக்கிறதா? 🙂 சொல்ல மறந்துவிட்டேன். சேனையின் உபயம். கையை சோப்புப் போட்டு கழுவியபின் மீண்டும் கைகளுக்கு தேங்காய் எண்ணை தடவிக் கொண்டு, பின் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.]
  • மிளகின் பச்சை நெடி அடங்கியதும், தேங்காய்த் துருவலில் பாதி, பச்சரிசி சேர்த்து நன்றாக அரைத்து, எரிசேரியில் சேர்க்கவும்.
  • மீதிப் பாதி தேங்காய்த் துருவலை 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் நன்கு சிவக்க வறுத்து, சேர்த்துக் கொதிக்கவிட்டு, தளர்வான கூட்டு பதத்தில் இறக்கவும்.
  • இறுதியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணணயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பரிமாறவும்.

* வாழை, சேனை, நேந்திரங்காய் மூன்றும் சம அளவில் எடுத்துச் செய்யலாம். அல்லது ஏதாவது இரண்டில் மட்டும் செய்யலாம்.

* சிலர் ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பும் சேர்த்துத் தாளிப்பார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தயிர் சாதம்.

சப்பாத்தி, இட்லி, தோசை என்றெல்லாம் யாராவது அடுக்கினால் நம்ப வேண்டாம். படு அபத்தமாக இருக்கும். 🙂