பிப்ரவரி 2009


எல்லாரும் எனக்கு friend தான். எல்லாருக்கும் நானும் friend தான். இதுல எல்லாம் எனக்கு சந்தேகமே இல்லை.

அதனால நான் யாருக்கும் yaari வழியா Friend Request எல்லாம் அனுப்பலை. [எனக்கே என் பேர்ல ரெண்டு வந்திருக்கு :(] இந்த மாதிரி இணையச் சேவைகள்ல எனக்கு நம்பிக்கையும் இல்லை; நேரமும் இல்லை. அதனால accountம் இல்லை.

Again, நான் யாருக்கும் அனுப்பலை. எனக்கு யாராவது அனுப்பினாலும் திறக்கமாட்டேன். காலைலேருந்து வர கடிதங்களைப் படிச்சு நடந்ததைப் புரிஞ்சுக்க இவ்ளோ நேரமாச்சு. Sorry!

இப்படி ஒரு பதிவை நான் எழுதமுடியும்னு நினைச்சுக்கூட பார்த்தது இல்லை. ஜனவரி மாசத்துக்கும் சென்னைக்கும் எனக்கும் எந்த வருஷமும் சம்பந்தமில்லை. அப்பா மட்டும் வருஷா வருஷம் வேணும்கற புக் பேர் கேட்டு தவறாம புக்ஃபேர் போய் வாங்கிவைப்பார். வீட்டில் விசேஷம் வந்த காரணத்தால மட்டுமே இந்த வருஷம் ஒருமாதிரி சாத்தியமாச்சு.

கணவருக்கும் பெண்ணுக்கும் ஸ்ரீரங்கத்திலேருந்து பல்லவன்ல சென்னை வந்து உடனே அன்னிக்கு விமானத்திலேயே மும்பை திரும்பியிருந்தா ஒரு நாள் லீவ் மிச்சமாகியிருக்கும். ஆனா அவங்க புத்தக ஆசை ஒரு நாள் சென்னைல தங்க அனுமதிச்சது.

நானும் அவ்ளோ ஒன்னும் விருப்பமில்லாத மாதிரி “சரி, ஆனா நீங்க பின்னாடி நின்னுகிட்டு நான் எடுக்கற புக்குக்கெல்லாம் கமெண்ட் அடிச்சிண்டே இருக்கக் கூடாது.”

“நீயும் புக் பின்னாடி பின்னாடி திருப்பி நான் எடுக்கற புக்குக்கெல்லாம் விலையைப் பாத்துண்டே இருக்கக் கூடாது.”

சரின்னு ஒத்துண்டாலும் ஒரே நொடில முழிச்சுகிட்டேன். “நல்ல கதையா இருக்கே, நீங்க வருஷம் முழுக்க வாங்கிகிட்டே இருக்கீங்க. நான் எப்பவாவது கிரி டிரேடர்ஸ் போனாதான்..”

பேச்சு தொடர்ந்ததுல அப்பா முடிவான முடிவுக்கு வந்துட்டாரு. அப்பாவுக்கு எங்க திருமணம் எந்த சொர்க்கத்துல நிச்சயமாச்சுன்னு தெரியாது. ஆனா எப்பவும் விவாகரத்து இந்த மாதிரி இடங்கள்ல நிச்சயம் ஆயிடுமோன்னு ஒரு டென்ஷன்ல இருந்துகிட்டேயிருப்பார்.

‘இந்தப் பிரச்சினையே வேணாம். சேர்ந்துபோனா நேரம் பத்தாது. புக்ஃபேர் வாசல் வரைக்கும் சேர்ந்து போகலாம். அங்கேர்ந்து பிரிஞ்சு நீங்க உங்க பொண்ணோட, நான் என் பொண்ணோட,” என்று கட்சி கட்டிவிட்டார். பொதுவாகவே ஷாப்பிங்னா அப்பாவைக் கூட்டிண்டு போறது எங்கக் குடும்பத்துல பெண்களின் தந்திரம். நம்ப உடைமைகள், குட்டீஸ் எல்லாம் பொறுமையா பாத்துப்பார். செலக்ஷன்ல எவ்வளவு படுத்தினாலும் ரசிச்சுப் பார்த்துண்டிருப்பார். கடைசியில (திவசம் மாதிரி) திருப்தின்னு சொல்லணுங்கறது தான் அவருக்கு முக்கியம்.

இத்தனை  திட்டமிட்டும் நடக்கலை. 😦 கணவருக்கு கடுமையா ஜுரம். ரூமுக்கு வந்ததும், தான் வரலைன்னு சொன்னா பரவாயில்லை. பொண்ணையும், “போகவேண்டாம், நான் உனக்கு அப்புறம்.. ” என்று கண்ணடித்ததில் (என்ன லஞ்சமோ) “நான் வரலை, நீ டாமினேட் பண்ணுவ” ன்னு டிவிபக்கம் போயிட்டா. எதிர்பார்த்தபடியே அப்பா, “பாவம், உடம்பு சரியில்லாம இருக்கும்போது நாம எப்படி போறது? நீ வேணா போயிட்டு வா. அவர் ஜுரத்துல தூங்கிட்டா நான் பொண்ணைப் பாத்துக்கணும்”னு பின்வாங்கினார். மாமானார்கள் ஒழிக! ஏற்கனவே பல்லவன்ல செங்கற்பட்டு வரும்போதே தேசிகன் ஃபோன்– ‘இன்னிக்கு(13/1) லீவில்லைன்னு நினைச்சிருக்கோம். ஆனா லீவ்நாள்தான். 11:30க்கே புக்ஃபேர் ஆரம்பிச்சுட்டாங்க. நான் இங்கதான் இருக்கேன்’னு சொன்னதுல வேற காண்டாயிருந்தேன்.
 

இந்தச் சென்னைமாநகரத்துல நமக்குத் துணையே இல்லாம லூசு மாதிரி தனியா புக்ஃபேர் போகணுமான்னு வெறுத்து, நகம் கடிச்சு, நாலைஞ்சு பேரை யோசிச்சு, ஒரு தோழியைத் தேர்ந்தெடுத்து (தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், அவளுக்கும் ரங்கமணியை ஒத்த சிந்தனை. என் புத்தகங்களைப் பாத்தாலே முதுகுவலி வரமாதிரி இருக்குன்னு முனகுற ஆசாமி. தமிழ், இலக்கியம், இலக்கியவாதிகள் பக்க சிந்தனை எதுவும் கிடையாதுன்னு (தப்பா) நினைச்சு, கூட வந்தா ரங்கமணியை மிஸ் பண்ற ஃபீல் வராதேன்னு) ஃபோன் பண்ணினேன். ஆஃபிசுல பிடுங்க ஆணியே இல்லாம மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டிருந்தவ, ‘done-ன்னு குஷியா கத்திண்டு கிளம்பினா. மக்கள் பார்த்துகிட்டிருக்கும்போதே, ‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க’ ட்யூனை விசிலடிச்சுண்டே கிளம்பிட்டேன். மேற்குமாம்பலம் ஸ்டேஷன்ல சந்திச்சு அங்கேருந்து ஆட்டோல சேர்ந்துபோக பிளான். அடேயப்பா ஸ்டேஷன் எவ்ளோ மாறியிருக்கு.

உள்ளே நுழையும்போதே பட்டிக்காட்டான் பாக்கறமாதிரி பேனர் எல்லாம் பாத்துகிட்டே வந்தேன். தோழி யாரையோ பாத்து பரவசமா பேசி அனுப்பிட்டு வந்தா. தெரிஞ்சவங்களா இருக்கும்னு நினைச்சா, ‘அவங்களைத் தெரியுமா, லதா ராமகிருஷ்ணன்னு பேரு. டெலிஃபோன்ஸ்ல இருந்தாங்க; எழுதுவாங்க’.

‘தெரியும், திண்ணை வார்த்தைல எல்லாம் எழுதுவாங்க’ன்னு சொல்லி முடிக்கலை, “தெரியுமா, லதாஆ..”ன்னு அவங்களைத் திரும்பக் கூப்பிட, அலறியடிச்சுகிட்டு, ‘எனக்கு ஐஜியைத் தெரியும், ஐஜிக்குத் தான் என்னைத் தெரியாதுங்கற உலகின் முதல் பேருண்மையைச் சொன்னேன். அப்புறம் கண்காட்சி முழுக்க பல நேரங்கள்ல இதைச் சொல்லவேண்டியிருந்தது. 😦 பத்ரியை எல்லாம் ஆள்காட்டி விரல் நீட்டி அடையாளம் காண்பிக்கறது கொஞ்சம் ஓவர் ஜெனரல் நாலட்ஜ். எப்ப இப்படி வளர்ந்தான்னு தெரியலை. நீட்டின கையை அப்படியே பிடிச்சு ‘ஐஜி’ன்னு சொன்னதும் புரிஞ்சுக்கறா. அந்தமட்டும் சமத்து. என்ன பிரயோசனம், ஜெயமோகனை யாருன்னே தெரியலை. 😦
 

* டிக்கெட் வாங்கி உள்ள நுழைஞ்சதுமே முதல் எண்ணம், பலர் கூடற இடத்துல எந்த செக்யூரிட்டி செக்கிங்கும் இல்லை. சமீபத்துல எந்தக் கோயில், கடைகள், பொதுமக்கள் கூடற இடங்களுக்குப் போனாலும் செக்கிங் இல்லாம உள்ள விடறதில்லை. தில்லி அக்ஷர்தாம்ல என் பேண்ட் பெல்ட்(லெதர்ங்கறதால்) எல்லாம் கழட்டச் சொல்லி சோதிச்சாங்க. அவ்வளவு தமிழ்நாட்டில பயம் இல்லைன்னாலும் இவ்ளோ பேர் வர இடத்துல குறைந்தபட்ச (கைல இருக்கற பை வகையறா) சோதனை கூட எதுவுமே இல்லை. ஏன்?

* மதியம் இரண்டரை மணிக்கு கூட்டமே இல்லாம ஹா’ன்னு இருந்தது. ஒரு இடத்துலேருந்து சவுண்ட் அதிகமா வந்தது. நினைச்சமாதிரியே ஹரன்பிரசன்னா. ப-வைச் சுத்தி பத்துபேர், பை-யைச் சுத்தி பத்துபேர்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இலக்கிய ஆளுமையைச் சுத்தி எப்பவும் பத்துபேர் இருக்கறதை இங்கதான் பாக்கறேன். படம் எடுக்க நினைச்சு எடுத்த மூணுமே யாரோட வழுக்கைத் தலை, முழங்கை, முதுகுன்னு மறைஞ்சு- அப்படி சுத்தி ஒரு கூட்டம்… என் கணிப்புல அன்னார் சும்மா இருக்கும்போது சவுண்ட் அதிகமாவும், பத்ரி இருக்கும்போது ஆக்ஷன் அதைவிட அதிகமாவும் இருந்தது. (சீனைக் குறைங்கடே!) கேமிராவை மூடி உள்ள வெச்சுட்டு வந்தவேலையை ஆரம்பிச்சேன்.
 

* ஒவ்வொரு புத்தகமா எடுத்து பிரிக்க ஆரம்பிச்சதுமே தோழி உச்சுக்கொட்ட ஆரம்பிச்சாச்சு. “இன்னிக்கு முழுக்க இதே ரேஞ்ச் புக்ஸ்தானா? கொடுமடீ.” காதுல வாங்காம பாத்துகிட்டிருந்தேன். கிழக்கு புத்தகவரிசைல என்னவோ மிஸ்ஸிங்.
 

“என்னவோ அபத்த புக்கெல்லாம் புரட்டறன்னு நினைக்கறேன். பாரு, கடைபசங்க கூட உன்னையே கேவலமா பாக்கறாங்க”. அவ கடைப்பையன்னு சொன்ன ஆளைத் திரும்பிப் பார்த்தா… சத்யா :))). சிரிப்பை அடக்க சிரமப்பட்டு– ‘நீங்க சிரிச்சா பிபி ஏறுது’ மாதிரி கமெண்ட் ஏற்கனவே கேட்டிருக்கறதால அடக்கமா இன்னும் கொஞ்சம் புத்தகங்களைப் புரட்டிகிட்டே திரும்பினா, கூட்டத்துள்ளேயிருந்து நிதானமா எழுந்து வந்தாரய்யா டேமேஜர் மேனேஜர்.

“ச்சொல்லுங்க, என்ன வேணும்?” இங்க நின்னுகிட்டு என்ன செய்றீங்க, சீக்கிரம் இடத்தை காலிபண்ணுங்க மாதிரி ஒரு தொனி. எனக்குத்தான் விதண்டாவாதமா அப்படித் தோணுதான்னு தெரியலை. பதில் சொல்லாம (கொழுப்பா) இருந்ததுலயே கண்டுபிடிச்சிருப்பாங்களோ? “ஜெயஸ்ரீ?..” சந்தேகமா ஒரு பார்வை. இணைய ஆச்சரியங்கள்ல இதுவும் ஒன்னு. 🙂

பதில் சொல்லாம மையமா பாத்துவெச்சேன். வரமாட்டேன்னு சொன்னீங்களேன்னு ஒரு சலிப்பு.

“எல்லாரும் எங்களையே வேடிக்கை பார்க்கறாங்க ப்ரசன்னா.”

‘நீங்க ஏன் அவங்களைப் பார்க்கறீங்க’ மாதிரியோ, ‘ஆமாம் பெரிய இலக்கியப் பேரிகை, எல்லாரும் பாக்கறாங்க’ மாதிரி கிண்டலா பதில் வரும்னு நினைச்சா, “ஏதும் புக்ஸ் திருடிடுவீங்களோன்னு பார்த்திருப்பாங்க” சீரியஸ் பதில்.

Grrr.. “மொதல்லா மனுஷன் திருடியாவது படிக்கத் தூண்டற மாதிரி ஒரு புக்கை எழுதிக்கிழி அல்லது அப்படி ஒரு புக்கை உங்க பதிப்பகத்துல போடுங்க, அப்புறம் பேசலாம்” ன்னு கடுப்படிக்க நினைச்சதை சுத்தி இருந்த சில அப்பாவிகளுக்காக சொல்லாம விட்டேன். இந்தப் பதிவோட நோக்கமே இப்பவாவது இதைச் சொல்றதுதான். 🙂
 

என்னவோ மிஸ்ஸாறதுக்கு பதில் தெரிஞ்சது. இலக்கியப் புத்தகங்களைத் தனியா வெச்சிருக்காங்களாம். நல்ல ஐடியா. அப்படியே அதை தனி imprintல வெச்சுட்டாங்கன்னா குழப்பமில்லாம இருக்கும்.

ஓரளவு ஏற்கனவே புத்தகங்களை முடிவுசெஞ்சிருந்தாலும், ஒரு சஜஷன் கேட்டேன். உடனே என் கையிலிருந்த ஒரே புத்தகத்தை (சேவியரின் கிறிஸ்தவம்) பிடுங்கி, பில்போட சொல்லிட்டு(நம்மை எதுவும் கேக்கறதில்லை) விடுவிடுனு கிளம்பினார். ஆஹா, நல்ல வேட்டை இன்னிக்கு ஐயா ஆலோசனைல கலக்கப் போறோம்னு நினைச்சுக் கிளம்பினாஆ…, பொண்ணுபார்க்கப் போகச்சோம்பி சித்தப்பாபொண்ணைக் கட்டினவன் மாதிரி பின்னாலயே இருக்கற தமிழினிக்கு கூட்டிப் போனாரு. சரி, நானே பாத்துக்கறேன், உங்க வேலையைப் பாருங்கன்னு கிளம்பச் சொல்லிட்டு (நாம வாங்கறதை எல்லாம் எதுக்கு அடுத்தவங்களுக்கு ஒப்பிக்கணும்?) சொந்தமாவே வேட்டையைத் துவங்கினேன். (ofcourse, தோழி நொச்சோட தான். அதுதான் இன்ஸ்பிரேஷனே.)

* எல்லாப் பதிப்பகத்துலயும் எனக்கான புக் ஒன்னு நிச்சயம் இருக்கும்னு நம்பினேன். அதனால எல்லாத்துலயும் ஒரே ஒரு புக் மட்டுமேன்னு ஒரு ரூல் வெச்சுகிட்டேன். (பல இடங்கள்ல மீறினேன். ரூலே மீறத்தானே.) தமிழினில ரொம்ப நாளா விட்டுப்போன ‘காடு’. ஆளுமையை அனுப்பிட்ட தைரியத்துல பில்போடற இடத்துல ஜெயமோகன் வருவாரா?’ன்னு ஒரு கேள்வி. ‘ரொம்பத் தேவை’ன்னு தோழி மூலம் கைல ஒரு கிள்ளு கிடைச்சது. “அவர் 4 நாள் முன்னால்தான் சென்னை வந்துட்டுப் போனாரு. இந்தத் தடவை கண்காட்சிக்கு வரலை”ன்னு பொறுமையா பதில் சொன்னாங்க. (ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல! எல்லா இடத்துலயும் இப்படி இருந்துட்டா எப்படி இருக்கும்?)
 

“யார் ஜெய்மோகன்? எதா இருந்தாலும் பார்க்க நினைக்கறதெல்லாம் கொஞ்சம் ஓவர். என்ன பண்ணுவ? நான் உங்க ரசிகை ப்லா ப்லான்னு வழிவயா? புக்ல சைன் வாங்குவயா? couldnt imagine.. நீ ரொம்ப மாறிட்ட. ஆல் அப்சர்ட்..” தோழி ஆற்றமாட்டாம பொங்கினதுகூட அழகா இருந்தது. “சே சே சும்மா கேட்டேன். நீ வேற. ஆள் இருந்தா இந்தப் பக்கமே வராம சுத்திப் போயிடமாட்டோமா?” ன்னு சமாதானப்படுத்தினேன். இன்னிக்கி வெளங்கினமாதிரிதான்னு தோணிடுச்சு.
 

* எல்லாருக்கும் இலக்கியத்தளத்துல சுந்தர ராமசாமியை நினைவுக்கு வரலாம். என் தகுதிக்கு, எனக்கு கடைல பழத்துண்டுகளை டூத்பிக் வெச்சு சாப்பிடக் கொடுத்தபோது சுந்தர ராமசாமி நினைவு வந்தது. (பழத்துண்டுகளைச் சிறிய கண்ணாடிக் கோப்பையில் போட்டு குத்தி எடுத்து சாப்பிடுவதை விரும்புவார். சலித்துப்போய் நான் கையால் எடுத்து சாப்பிட்டபோது, “குத்தி எடுத்து சாப்பிட்டுப் பாருங்க… இன்னும் டேஸ்டா இருக்கும்” என்றார். — நினைவின் நதியில், ஜெயமோகன்) நான் அதைத் தோழிக்கு சொல்லிகிட்டிருக்கும்போதே, யாரோ ஒருத்தர் ஸ்லோ மோஷன் நடைல வந்து அவளோட பழத்தட்டைத் தட்டிவிட்டுட்டு, அப்படி ஒரு சம்பவம் நடந்த பிரஞ்ஞையே இல்லாம நிமிர்ந்த பார்வையோட நேர்க்கோடு மாதிரி நடந்து கடந்து போய்க்கிட்டேயிருந்தாரு. ஏதும் புனைவுலக சஞ்சாரியா இருக்கலாம். ஆணாப் பிறந்ததே தப்பு; அதுலயும் ஒரு சாரிகூட சொல்லாம போன அந்தாளை அவ எப்படி சண்டைபோடுவான்னு எனக்கு முன்அனுபவம் இருக்கறதால மனசாட்சியே இல்லாம ‘நீதான் சரியா பிடிக்கலை’ன்னு ‘யாரோ’வுக்காக தோழியைச் சாடினேன். 😦 (யாரோ! பாத்து பதமா நடந்துக்கய்யா, எப்பவும் நான் கூட இருக்கமுடியாது.)

* கழிவறை பத்தி பலவருஷங்களா படிச்சுகிட்டு வரதால ரொம்ப முன்ஜாக்கிரதையா மதியத்துலேருந்தே ஒரு காபிதவிர தண்ணியோ வேற எதுவுமோ குடிக்கலை. கிட்டத்தட்ட மயக்கம்போடுற நிலைல பழங்கள் கடைல சாப்பிடும்போது தேசிகன் எங்களோட சேர, அடுத்த ரவுண்ட், ஸ்டார்ட் மியூஜிக்.
 

* காலச்சுவடுல (பெரிய கடை) பார்த்துகிட்டே நகரும்போது, புத்தகங்களை மறைச்சுகிட்டிருந்த ஒரு குட்டிப் பொண்ணை, ‘கொஞ்சம் தள்ளிக்கோடா செல்லம்’ சொல்லி நகர்த்தினேன். ‘வா’ன்னு தன் பக்கம் இழுத்துகிட்ட அதனோட அம்மா(?)– நாற்காலில கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருந்தவங்களைப் பார்த்ததும், ‘கண்ணே உன் முந்தானை காதல்வலையா.. உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம்காதலா?..” வகையறா பிஜிஎம் எல்லாம் நினைவுல ஓடிச்சு. உத்துப் பார்த்தா அட ஆமாம்.. சங்கீதா. பளிச்சுனு இருக்கும் இவ்ளோ சின்னப் பெண்ணையா பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னாலேயே ராஜ்கிரணாதிகள் அவ்ளோ கிழவிமாதிரி காட்டினாங்கன்னு கடுப்பா இருந்தது. தேசிகன்கிட்ட சந்தேகம் கேட்டேன். ‘ஆமா, நான் அவங்களை வருஷா வருஷம் பாக்கறேன்’ன்னு அப்டேட் செஞ்சார். டிவிலயாவது வாங்க மேடம்!

* ‘இறந்தவனின் ஆடைகள்’ கவிதைமூலம் என்னைத் திரும்பிப் பார்க்கவெச்ச மனுஷ்ய புத்திரனைச் சந்திச்ச போதுதான் என்னைப் பத்தி அறிமுகப் படுத்திக்கொள்ள எதுவுமே இல்லைன்னு புரிஞ்சது. உயிர்மைக்குள் நுழைஞ்சு வந்த அனுபவம் பத்தி எதுவுமே சொல்லப் போறதில்லை. புத்தக லிஸ்ட் குட்டிப் புத்தகம் செம க்யூட்.

Gnani_Desikan (CBF2009)

* ஞாநி எல்லாரும் பயமுறுத்தற மாதிரி எல்லாம் கடுமையா இல்லாம படு கூல். கண்ணால சின்ன அசைவுல படம் எடுத்துக்கவான்னு கேட்டேன். அதைவிட சின்ன கண் அசைவுல சிரிப்புடன் சம்மதம் சொன்னார். உங்க கருத்துகளோட மாறுபடறேன்னு சொன்னாலும் சகஜமா உட்காரவைத்துப் பேசக்கூடிய பெர்சனாலிட்டிக்கு ஒரு ஓ! என் ரசிகர் பட்டாளமாக்கும்னு ஒரு கூட்டத்தை தன்னைச் சுத்தி வெச்சுகிட்டு பெருமிதப்படறதைவிட கருத்து மாறுபாடுள்ள இளைஞர்களோட அடிக்கடி உரையாட வேண்டியது இன்னும் ஆரோக்யமான விஷயம்.

* எனிஇந்தியன்ல சுதந்திரா. அநியாயத்துக்கு சமத்தா இருந்தாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு சுய அறிமுகம் செஞ்சுகிட்டேன். மதுமிதா பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திகிட்டு அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஹரன்பிரசன்னா பேரைவேற சொல்லி, அது என்ன எஃபக்ட் கொடுக்கும்னு சந்தேகமாவே இருக்கு.

* வானதில கூட்டமான கூட்டம். பொண்ணு இப்பல்லாம் புராணங்கள்ல ஆர்வம் காட்டறதால படிச்சுக் காட்டலாம்னு ராஜாஜியோட இராமாயணம், மஹாபாரதம் மட்டும் டக்குனு எடுத்துகிட்டு வெளியேறிட்டேன்.
 

* தேசிகன், எல்லாக் கடையிலயும் நான் சுற்றிவரவரைக்கும் அசாத்தியப் பொறுமையோட காத்திருந்து(இன்னொரு அப்பா உருவாகிறார்), வெளியே வந்ததும் என்ன புக்குனு வாங்கிப் பார்த்து, “ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல”ன்னு ஒரு கமெண்ட்டும். அதுக்கு என்ன அர்த்தமோ? பொறுமைக்கு இன்னொரு முக்கிய காரணம் நான் சுத்தின எல்லா இடத்துலயும் அவருக்கும் யாராவது பேசக் கிடைச்சாங்க. போதும்னு கிளம்பநினைச்ச போதுதான் ப்ரசன்னா ஒரு புத்தகத்தை பில் போடச் சொன்னது நினைவு வந்தது. வாங்கிப் போகலாம்னு திரும்பப் போய் பணம் கட்டும்போதும் தேசிகன் டைரக்டர் வசந்தோட பேசப் போயிட்டாரு. அவ்ளோ சவுண்ட் விடற ப்ரசன்னா புக்கைக் கொடுத்ததும், என்னவோ கண்ஜாடை, கைஜாடை காமிக்கறாரு. ஒன்னும் புரியலை. வெறும் விரலால பேப்பர்ல எழுதிக் காண்பிக்கறாரு…, காத்துல டிசைன் போடறாரு… நான் இதுக்கெல்லாம் ஆளா? என்னய்யா சொல்ல(லித் தொலைக்க)ற?ன்னு கேட்டா ரகசியக் கிசுகிசுப்பா, ‘அங்க பேசிகிட்டிருக்காரு பாருங்க, அவருதான் தேசிகன்’னு எனக்கு அறிமுகம். தோடாஆஆ. இதுக்கெல்லாம்கூட எந்த ரியாக்ஷனும் காமிக்காம இருந்திருக்கேனே நான் எவ்ளோ பெரிய அழுத்தக்காரியா இருக்கணும்? 

 
ரூமுக்கு திரும்பினதும் கணவரும் பெண்ணும் புத்தகங்களை ஆர்வமா பாத்தாலும் அப்பாவுக்கு திருப்தியாங்கற கேள்விக்கான பதில்தவிர எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை. அவரோட திருப்திக்காக நானும் பாசிடிவா பதில் சொன்னேன். ஆனாலும்….

* எல்லாரும் ரிசஷன் பத்தியே புலம்பிகிட்டிருந்தபோது (தேசிகன் வண்டி வண்டியா வாங்கற ஆள்கூட ரெண்டுபுக் தான் வாங்கினார். இதுக்கு நிறைய மனவலிமை வேணும். எதுவுமே வாங்காத இரா.முருகனுக்கு ஒரு ஓ!) நான் மட்டும், ‘புடைவை கட்டியிருந்தேன், அப்படியே வந்துட்டேன்’ டிரஸ் மாத்திண்டு வந்திருக்கலாம்’னு தடுமாறிப் புலம்பிண்டே இருந்தேன். ஒரு வசதியான உடை, backbag இரண்டும் புக்ஃபேருக்கு முக்கியம். எல்லாரும் சொந்த வண்டி எடுத்து வந்திருக்கமாட்டாங்க. கொஞ்சம் வாங்க வாங்க வெச்சுட்டு வர cloak room மாதிரி கட்டணத்துக்கு வைக்கலாம். சேர சேர தூக்கிகிட்டு நடக்கமுடியாம சோர்வு வந்துடுது.
 

* பல புத்தகங்களை அதோட சைஸைப் பார்த்து வெச்சுட்டேன். மாயவலை, அத்வானி சரிதம், காவல் கோட்டம் எல்லாம் கையால தூக்கக் கூட பயமா இருந்தது. எப்பவாவது ரயில்ல வரும்போதுதான் யோசிக்கணும்.

* நலம், வரம் இரண்டுலயும்தான் அதிகம் பார்க்கணும்னு நினைச்சிருந்தேன். நேரமே இல்லாம தவறவிட்டுட்டேன்.

* கடைகள் இரண்டு பக்கமும் திறந்து இருக்கறதால் அந்தப் பக்கத்துல ஒரு பதிப்பகப் பேரைப் பாத்ததும், ஆழி, க்ரியான்னு பார்க்கறதுக்கெல்லாம் மானாவாரியா குறுக்க ஓடிஓடி, நினைச்சதெல்லாம் வாங்கினாலும், அந்தவகைல பல கடைகளை தவறவிட்டதும் நடந்திருக்கு. என்ன நடந்தாலும் தீர்மானமா ஒரு வரிசைமுடிச்சு தான் அடுத்த வரிசைன்னு இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது.
 

* சில கவிதைத் தொகுப்புகள் எழுதிவெச்சிருந்தும், பதிப்பகம் பெயரை எழுதாம இருந்ததுல கண்டுபிடிக்க முடியாம வாங்கலை. 😦

* ஈழம் குறிச்சு என்னோட அரைகுறை இல்லை, அரைக்காலே காலே அரைக்கால் வீசத்துக்கும் கீழான அறிவுக்கு ஏதாவது நல்ல புக்ஸ் வாங்கலாம்னு நினைச்சும், கிளம்பறதுக்கு முன்னாலயே அந்தப் புத்தகங்கள் இல்லைன்னு தகவல் தெரிஞ்சதால தேடவே இல்லை.

* தூக்கவே முடியாம கை வலிக்க ஆரம்பிச்சதும் கணவருக்கும் பெண்ணுக்கும் வாங்கலாம்னு நினைவு வந்து என்னுடையதை நிறுத்திட்டேன். உண்மைல நமக்கு வாங்கறது சுலபம். மத்தவங்களுக்கு வாங்கத்தான் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. ‘இதுதான் உனக்கு நல்லாயிருக்கு’ன்னு இஷ்டத்துக்கு ஏதாவது டிரஸ்ஸை அவங்க தலைல கட்டறது, ‘இவ்ளோதான் இன்னிக்கு’, ‘இதுதான் ஹெல்த்தி ஃபுட்’ மாதிரி வசனங்களோட சமையலை சாப்பிடவைக்கற மாதிரி புத்தகங்களை யார் மேலயும் திணிக்கமுடியாது. இரண்டுபேரையும் பத்தி அதிகம் யோசிச்சு வாங்கினேன்.
 

* ரெடிமேட் கடைகள்ல தொங்கவிட்டிருக்கற குட்டிப்பாப்பா கவுனைப் பார்க்கும்போதெல்லாம் பெண்குழந்தையே இல்லாட்டாலும் மனசு ஜிவ்வுனு இருக்குமே, அதை மாதிரி இருக்கு பிராடிஜி. தோழியையே அசத்தின இடம் அதுதான். ஆனா அதிகம் பார்க்கமுடியாம, இலக்கிய ஆளுமை அங்க வந்ததுல டக்குனு கிளம்பிட்டேன். “குழந்தைகள் புக் வாங்க நல்ல கடை இருந்தா சொல்லு”ன்னு கேட்டேன். ரெண்டு மூனு கடை பேரைச் சொல்லி (அதைவிட அருமையான கடைகளும் இருந்தது. வாங்கினேன்.) “ஆனா அதெல்லாம் பொண்ணு அவங்கப்பா மாதிரி இருந்தாதான். உங்க மாதிரி வாழைமட்டைகளுக்கு எந்த புக்கும் தேவையே இல்லை”ன்னு ஒரு ரிப்ளை.
 

* கொஞ்சம் lighter side வாங்கலாம்னு திரும்ப கிழக்கு(இலக்கியம்) போய் துப்பறியும் சாம்பு எடுத்தேன். அப்ப ‘எங்கிருந்தோ வந்தான்’ மாதிரி ஒருத்தர் வந்தார். நீங்க இதெல்லாம் அலையன்ஸ்ல வாங்கலாமே, அங்கதான் சீப்பா இருக்கும், என்னோட வாங்க பார்க்கலாம்னு கூப்பிட்டார். விட்டா கையைப் பிடிச்சு இழுத்துடுவாரோன்னு பேசாம பின்னாலயே போனேன். 😦 ஒருவேளை அலையன்ஸ் ஆளா இருக்குமோன்னு பெரிய பிசினஸ் ஸ்டிராடஜி நினைப்பு வேற. நடந்துகிட்டே இருந்தவர் திடீர்னு நின்னு, உங்களுக்கு content போதுமா, இல்லை பேக் அழகா இருக்கணுமா?ன்னு கேட்டார். நான் ஒன்னும் சொல்லாம சும்மா அவரைப் பார்த்தேன். (முடியலைடே!). அலையன்ஸ் புக் சுமாரா இருக்கும். ஆனா சீப். கிழக்கு நல்லா செஞ்சிருக்காங்க. ஆனா காஸ்ட்லி. என்கிட்ட பதில் எதிர்பார்க்காம– அலையன்ஸ் இங்கதானே எங்கயோ இருந்ததுன்னு சுத்தியடிச்சு தேடிப்பிடிச்சு (புரூனோ மாதிரி மஹானுபாவர்கள் புண்ணியத்துல இங்கயே 25% டிஸ்கவுண்ட் இருக்கும்போது இந்தாள் பின்னாடி போறோமேன்னு கையாலாகாம எனக்கு நானே திட்டத்துல ‘கேணக் கிறுக்கி’ன்னு பட்டம் கொடுத்துகிட்டேன்) கூட்டிப் போனார். அங்க ரகளையா எல்லாப் புத்தகத்தையும் கலைச்சுப் போட்டார். ‘துப்பறியும் சாம்பு எங்கப்பா?’ ன்னு கடைல இருந்த ஒரு சின்னப் பையனைக் கேட்டார். “அதெல்லாம் இங்க வராதுங்க. கிழக்கு வாங்கிட்டாங்க. அங்க போனா முழு துப்பறியும் சாம்பு புத்தகமா கிடைக்கும்” ன்னு தெளிவாச் சொன்னான். எங்கிருந்தோ வந்தார்,  நல்லா சுத்தவிட்டதைப் பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம ‘அப்ப நீங்க அங்கயே வாங்கிக்குங்க பின்ன’ என்று சர்வசாதாரணமாக் கைகழுவினார். தேவையா? இப்படிக் கிளம்பி வராங்களேன்னு சலிப்பா இருந்தாலும், பரவாயில்லை, நம்ப மக்கள் விவரமாத்தான் பிசினஸ் பண்றாங்கன்னு மகிழ்ச்சியாவும் இருந்தது. 🙂 இன்னொரு தடவை கிழக்கு போகமுடியாது, பழைய புக் கடைல எட்டணாவுக்கே வாங்கித் தரேன், முதல் பக்கமும் கடைசி ரெண்டுபக்கமும் இருக்காதுனு தோழி கையை இறுக்க பிடிச்சுகிட்டா. 😦
 

* காமிக்ஸ் புத்தகம், மலிவு விலைல சாரு புத்தகங்கள் (அதிக விலை கொடுத்து வாங்கினேன்) எல்லாம் கிடைக்கும்னே தெரியலை. தெரிஞ்சிருந்தா வாங்கியிருக்கலாம். புக்ஃபேர் போறதுக்கு முன்னால அது சம்பந்தமான பதிவுகளைப் படிச்சுட்டுப் போறது நல்லது. எனக்கு ஸ்ரீரங்கம் போனதால படிக்க வாய்ப்பே இல்லாம போச்சு. 😦 சொல்ல சரியான ந(ண்)பர்கள் இல்லாததும் காரணம். :(( அடுத்ததடவைக்குள்ள நல்ல நண்பரைத் தேடிக்கணும்.
 

* படிக்கத் தவறிய பதிவுகளுக்காக வருத்தப்பட்டாலும் அதைவிட அதிகமா சொல்லத் தெரியாத குற்றவுணர்ச்சியைக் கொடுத்த பதிவு…
http://navinavirutcham.blogspot.com/2009/01/23.html
http://navinavirutcham.blogspot.com/2009/01/23-2.html
http://navinavirutcham.blogspot.com/2009/01/23-3.html

CBF 2009 Kaviyarangam

தேசிகனையும் தோழியையும் அனுப்பிட்டு வெளியரங்கத்துல உட்கார்ந்தேன். ஏதோ கவியரங்கம் நடக்கப் போறதா மைக்ல சொல்லிகிட்டேயிருந்தாங்க. பதிவர்கள் மதுமிதா, தாரா கணேசன்  பேரும் சொன்னதால வந்தா பாத்துட்டுப் போகலாம்னு காத்திருந்தேன். குளிர ஆரம்பிச்சும் மக்கள் வரலை. கடைசி நிமிஷம் வந்து நேரா மேடையேறிட்டாங்க. தாரா கணேசன் யாருன்னு எனக்குத் தெரியலை. மேடையைப் படம் எடுத்ததும் மதுமிதா இறங்கிவந்து ஒருவர்கிட்ட தன் கேமிராவைக் கொடுத்து படம்எடுக்க சொல்லிக் கொடுத்தாங்க. செம டென்ஷனா இருந்தாங்க. நான் போய் பேசினேன், ஆனா இப்பவும் நான்தான் ஜெயஸ்ரீன்னு சொல்லிகிட்டேனான்னு சந்தேகமாவே இருக்கு. 🙂 பாவம், ‘இனி தூங்குவனா?’ன்னு மணிவண்ணன் பஸ்ல போற ஆளை சுத்தவிடற மாதிரி செஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன்.

அப்றம் ஒருவழியா யாரோ வந்து இறங்கின ஆட்டோவையே பிடிச்சு மிதந்து மிதந்து– மறுநாள் பொங்கல், புத்தாண்டை(?) முன்னிட்டு தெருவெல்லாம் மக்கள் கூட்டம்– திநகர் போய் என் ஜோதில கலந்தேன்.

பின்விளைவு:
பொண்ணு ஆர்வமா நான் வாங்கின புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சாலும் மறுநாள் ஏர்போர்ட்ல ஹிக்கின்பாதம்ஸ் போய் Tinkle double digest வாங்கிட்டுதான் செட்டில் ஆனா. மும்பை வந்ததும் அதையும் கடாசிட்டு தன் social studies டப்பா தட்டப் போயிட்டா. 😦

இந்தத் தடவை கணவர்  குஜராத் இன்ஸ்பெக்ஷன் கிளம்பும்போது நியாபகமா பைலேருந்து ‘What Got you Here Won’t Get You There’ புத்தகத்தை எடுத்துட்டு நைசா ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ வெச்சுட்டேன். வந்து ஒரே திட்டான திட்டு. டிரைவர் முன்னால அடக்கமுடியாம தனக்குத் தானே சிரிச்சுகிட்டே இருந்து ரொம்பக் கேவலமாப் போச்சாம். இன்ஸ்பெக்ஷன் சமயமும் நினைச்சு நினைச்சு சிரிச்சிருக்காங்க. வீட்டுக்கு வந்தும் புக்கைப்பிரிச்சு கீழச்சித்திரை வீதில இது இவங்க வீடு, அது அவங்க இருந்த இடம்னு… தான் தொலைச்ச கீழச்சித்திரை வீதியை தேடற ஆர்வம்தான் அதுல இருந்தது. இப்பல்லாம் அப்பப்ப என் புத்தக வரிசைலயும் பார்வையை ஒரு ஓட்டு. கண்டவங்களும் கைவைக்றாங்கப்பான்னு பிகு பண்ணிகிட்டிருக்கேன். 

பி.கு: என்னதான் ஸ்ரீரங்கத்துல விருந்தினர் கூட்டம், மண்டப தூசு, சாப்பாடு, பட்சணம், பட்டுப் புடைவை, நான் படுத்திருந்த அறையிலேயே மாலையை மாட்டியிருந்தது, எக்கச்சக்க பூ, வைகுண்ட ஏகாதசிக் கூட்டம், கோவில், கொசுவர்த்திப் புகைன்னு அலர்ஜில திணறினாலும், அந்த துவரம்பருப்பு சைஸ் அலர்ஜி மாத்திரையை காலைல கிளம்பும்போது சாப்பிடாம இருந்திருந்திருக்கலாம். மயங்கி(தூங்கி?) விழுப்புரம் வரைக்கும் அப்பாவோட வலது தோளிலயும், செங்கற்பட்டுல தேசிகன் தொலைப்பேசும் வரை இடது தோள்ளயும் சாய்ஞ்சு தூங்கி(மயங்கி?)கிட்டே வந்ததில தோள், கழுத்தெல்லாம் வலியான வலி (எனக்கு). அதுக்குப் பிறகும் கலையாத மயக்கம். வழில எங்கயாவது மோர் அல்லது தயிர் கிடைச்சா வாங்கிக்குடின்னு சொன்ன ரங்கமணியோட வார்த்தையையும் வழக்கம்போல மதிக்காததுல மயக்கத்துக்கும் தூக்கத்துக்கும் இடையில் மிதந்துண்டே… சுத்தி இறைஞ்சிருக்கற புத்தகங்களை நீக்கிட்டுப் பார்த்தா– நடந்ததெல்லாம் கனவு மாதிரியே இருக்கு. 😦 திரும்ப எப்பவோ?