பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.
பசலைக் கீரை – இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.
முருங்கைக் கீரை – இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.
வல்லாரைக் கீரை – அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.
காசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது.
துளசி இலை – விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சம் சாறோடு அரைத்து வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடங்களில் பூசினால் விஷம் நீங்கி குணம் ஏற்படும்.
அரைக்கீரை – நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை.
கொத்தமல்லித் தழை – இரத்த சுத்தி
முளைக் கீரை – நரம்புத் தளர்ச்சி
முள்ளங்கிக் கீரை – சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான்(சரும வியாதி)களை குணமாக்கும்.
தூதுவளைக் கீரை – இளைப்பு மற்றும் கக்குவானுக்கு
புதினாக் கீரை – இரத்த சுத்தி
வெந்தயக் கீரை
உடலுக்குக் குளிர்ச்சி; பசியைத் தூண்டும். தோலின் சொறி, சிரங்கு போகும்.
பொன்னாங்கண்ணிக் கீரை – மூல நோய்க்கு. மேலும் போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே சொலவடை உண்டு.
மணத்தக்காளிக் கீரை – B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
முடக்கறுத்தான் கீரை (மொடக்கத்தான் கீரை) – பெயரிலேயே இருக்கிறது- முடக்கு வாதத்திற்கு மிகவும் நம்பக்கூடிய இயற்கை உணவு.
அகத்திக் கீரை – உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்.
கறிவேப்பிலை – பசி மிகும்; தலைமுடி நரைக்காது.
கோவை இலை, ஆமணக்கு இலை, கீழாநெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை – மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து. ஈரலைச் சுத்தி செய்வதுடன் அஜீரணத்தைப் போக்கி பசியைப் பெருக்கும்.
வெயில் காலங்களில் அதிக அளவில் விதவிதமான கீரைகளை சாப்பாட்டில் பயன்படுத்தவும்.
வெள்ளி, திசெம்பர் 14, 2007 at 2:13 பிப
சிறுகீரையும் மகிழிக்கீரையும் அதிகம் பேருக்குத் தெரியாது என்று தெரியும். தன்டங்கீரையும் குப்பைக்கீரையும் எப்படி விட்டுப் போனதுன்னு ஆச்சரியமா இருக்கு. குப்பைக்கீரையை வடநாட்டில் ஷோளே-ன்னு திங்கிறாய்ங்களே, பாம்பே-ல இல்லையோ?
அகத்திக்கீரை – வாய்ப்புண், வயிற்றுப்புண் (அல்சர்) மற்றும் சிகெரெட் பிடிப்பவர்களுக்கும் நல்லது என்று சொல்லுவார்கள். ஏனென்று தெரியாது.
ஞாயிறு, திசெம்பர் 16, 2007 at 11:10 முப
பிரேமலதா,
இங்கயும் பலவகையான கீரைகள் கிடைக்குது. ஆனா தமிழ்ல பேர்தெரியாததால எனக்கு ரிஸ்க் எடுத்து வாங்கமுடியலை. தமிழ்நாட்டிலயும் நீங்க சொல்ற கீரை எல்லாம் பேர் கேட்டமாதிரி இருக்கு, வாங்கினதா தெரியலை.
அகத்திக்கீரை கண்ணுக்கு நல்லதுன்னு சொல்லி மிரட்டிதான் சாப்பிடவைப்பாங்க. மணத்தக்காளிக்கீரையைத் தான் வயிற்றுப்புண், பிரசவத்துக்குப் பின், அல்சருக்கெல்லாம் செஞ்சுபோடுவாங்க. ஒருவேளை அகத்திக்கீரையிலயும் அந்த குணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரியலை. ஒரு கீரைக்கு ஒரு குணம்தான் இருக்கணும்னு என்ன இருக்கு? ஆனா ரெண்டுமே இங்க கிடைக்கலை. 😦
சனி, மார்ச் 15, 2008 at 8:09 பிப
[…] மாவு – 2 கப் வெந்தயக் கீரை – 1 கப் கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – […]
வெள்ளி, மார்ச் 20, 2009 at 11:32 முப
[…] வெந்தயக் கீரை – 2 கப் வெங்காயம் – 1 பயத்தம் பருப்பு – 3/4 கப் * தக்காளி – 2 (பெரியது) பச்சை மிளகாய் – 3 தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி – சிறு துண்டு உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா – 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன் […]
திங்கள், ஓகஸ்ட் 16, 2010 at 10:19 பிப
jayasree akka,
All of your recipes are too good. i am a beginner in cooking. can you please photos for these keerai types? so that beginners like me come to know them. please please