சட்னி


தேவையான பொருள்கள்:

இஞ்சி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் -நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணெய், கடுகு.

inji chutney

செய்முறை:

  • இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும், மிக்ஸியில், தேவையான உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.
  • அத்துடன் சிறிது நீர்சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, வெல்லம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயி.ல் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

* நான் வெல்லம் சேர்ப்பதில்லை. சுவையாகவே இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொதுவாக தோசைகள், உப்புமா, பொங்கல் வகைகளுடன் சேரும் என்றாலும் வழமையாக ஆந்திர பெசரட்டுடன் பரிமாறப் படுகிறது. தயிர் சாதத்திற்கு மிகப் பொருந்தும்.

நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.

பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.

பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து :), சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 🙂
 

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

thakkaalikkai thuvaiyal chutney

செய்முறை:

  • தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

தேவையான பொருள்கள்:

புடலங்காய்க் குடல் – 2 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

pudalangaai kudal

செய்முறை:

  • புடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • தனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.
  • வறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.

* இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தேங்காய் சாதம். தயிர்சாதம்…..

புளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

புதினா – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 4 (விரும்பினால்)
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணை – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு –  தேவையான அளவு

செய்முறை:

  • புதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • இஞ்சி, புதினாவைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • மிக்ஸியில் வதக்கிய கலவை, உப்பு, புளி, உரிந்த சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து கெட்டியாக அரைத்து உபயோகிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, சமோசா, போண்டா, வடா பாவ்…

(1)
தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி – ஒரு கட்டு
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை –  1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு –  1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  எண்ணை, கடுகு,

செய்முறை:

  • கொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய கொத்தமல்லியோடு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணையைச் சூடாக்கி கடுகு தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, வெண்பொங்கல்

-0-

(2)
தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி – 1 கட்டு
பச்சை மிளகாய் –  5
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி –  1 சிறிய துண்டு
பூண்டு – 2 பல்
பொட்டுக்கடலை –  1 டீஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லியை ஆய்ந்து, அலசி, நறுக்கி, மற்ற பொருள்களுடன் புளித்தண்ணீர் சேர்த்து சற்று தளர அரைக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

கார போளி, வடை, போண்டா, சமோசா, வடா பாவ்…

(1)
தேவையான பொருள்கள்:

தக்காளி – 5
தேங்காய்த் துருவல் –  3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்ஸ்பூன்
புளி –  சிறிதளவு
பூண்டு –  4 பல்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது (நறுக்கியது)
தாளிக்க – எண்ணை, கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

செய்முறை:

  • சிறிது எண்ணையில் பருப்பு, மிளகாய் இரண்டையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வதங்கியபின் புளி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
  • வதக்கியவற்றை தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

 -0-

(2)
தேவையான பொருள்கள்:

தக்காளி –  4 (பெரியது)
காய்ந்த மிளகாய் – 4
சிறிய வெங்காயம் – 10
சோம்பு –  1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு  – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • தக்காளியை சிறுதுண்டுகளாக்கி மிளகாய், சோம்பு, வெங்காயத்தோடு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

-0- 

(3)
தேவையான பொருள்கள்:

தக்காளி –  4 (பெரியது)
வெங்காயம் – 1
மிளகாய வற்றல் – 6
இஞ்சி –  சிறு துண்டு
பூண்டு –  4 பல் (விரும்பினால்)
தனியா –  1/4 ஸ்பூன்
புளி –  சிறிது
உப்பு –  தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி மிளகாய், தனியா, இஞ்சி, பூண்டு, அரிந்த வெங்காயம், அரிந்த தக்காளி என்ற வரிசையில் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய சூடு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • எண்ணையில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியோடு கலந்து பரிமாறவும்.

-0-  

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, சப்பாத்தி, வெண்பொங்கல், போண்டா, பிரட்…

புளிப்பான ஊத்தப்பம் வெள்ளையப்பம் போன்றவைகளுக்கு தக்காளிச் சட்னி அவ்வளவாகச் சேர்வதில்லை

(1)
தேவையான பொருள்கள்:

பெரிய வெங்காயம் – 2
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்வற்றல் – 6
புளி – நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை –  1 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு, எண்ணை, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • வெங்காயத்தை அரிந்துகொள்ளவும்.
  • தேங்காய், மிளகாய், புளி, பொட்டுக்கடலை, உப்பு இவற்றை முதலில் சிறிது அரைத்துக் கொள்ளவும்.
  • இறுதியில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும்.
  • எண்ணையச் சூடாக்கி, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி 2,3 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

-0-

(2)
தேவையான பொருள்கள்:

சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 6
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு –  10
தனியா –  1 டீஸ்பூன்
எண்ணை –  2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • வெங்காயம் தக்காளியை வாணலியில் லேசாக வதக்கி தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெந்தயம், மிளகு, தனியா இவற்றை எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி அரைத்த விழுது, பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

-0-  

(3)
தேவையான பொருள்கள்:

சின்ன வெங்காயம் –  20
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை –  10
பூண்டு – 5 பல்
இஞ்சி –  சிறு துண்டு
புளி –  சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை:

  • எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், கடலைப்பருப்பு, நிலக்கடலை, பூண்டு, இஞ்சி, வெங்காயம் என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • உப்பு, புளியுடன் வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து அரைக்கவும்.
  • கடுகு, கருவேப்பிலை தாளித்துக் கலக்கவும்.

 -0-

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, சப்பாத்தி, ஊத்தப்பம், உப்புமா, பிரட்…..

இட்லி(தோசை) மிளகாய்ப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைத்து எடுத்தால் இன்னொரு சுவையான வெங்காயச் சட்னி.

ஊத்தப்பம் போன்ற ஏற்கனவே புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுக்குச் செய்யும்போது சட்னியில் புளிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் தக்காளி, புளியின் அளவைக் குறைத்தோ முற்றிலும் நீக்கியோ செய்யவேண்டும்.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – –  தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

  • எல்லாவற்றையும் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணையைச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும்.

* சில ஹோட்டல்களில் தேங்காய்ச் சட்னி சிவப்பாக இருப்பதன் காரணம் பச்சை மிளகாயைக் குறைத்து காய்ந்த மிளகாய் அதிகம் சேர்ப்பதனால் தான். சுவையாகவே இருக்கும்.

* 4 நிலக்கடலைப் பருப்பு சேர்த்து அரைத்தால் வித்யாசமான சுவையாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது பிடித்திருக்கிறது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, பூரிவெண்பொங்கல், ஊத்தப்பம்

சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடும் போது அல்லது ஊத்தப்பம் செய்யும் போதும் சட்னியில் புளி சேர்க்கத் தேவை இல்லை.