தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1/4 கப்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
முந்திரிப் பருப்பு – 10
உப்பு – தேவையான அளவு
ஹோட்டல் சுவைக்கு:
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
- பயத்தம் பருப்பைக் கழுவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
- வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
* சாதாரண நாள்களில் பாதி நெய்யும், பாதி ரிஃபைண்ட் எண்ணையும் கலந்து செய்யலாம். உண்மையில் எண்ணணயில் தாளித்து, கடைசியில் நெய்யை சூடாக இருக்கும் பொங்கலில் கலந்து செய்வதே சுவை அதிகமாக இருக்கிறது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, தக்காளிக் கொத்சு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, சின்ன வெங்காயச் சாம்பார், கதம்பச் சாம்பார், தாளகக் குழம்பு தவிர ஓரளவு அனைத்து குழம்பு, சாம்பார்களும்…
புதன், மார்ச் 5, 2008 at 12:38 பிப
tamil reciepies
புதன், ஜூலை 23, 2008 at 12:16 முப
ஜெயஸ்ரீ,
போன மாதம் கோயிலில் பெரிய பெருமாளை சேவித்தப்பின் (முரளி பட்டர் கைங்கர்யம்) க்ஷீரன்னம் கிடைத்தது.
பட்டர் தந்த குறிப்பு கீழே:
”
தினசரி சாயங்காலம் க்ஷீரான்னத்தின் போது அரங்கன் 108 சரமாலைகள் சாற்றிக்கொள்வான். அதற்கும் மேல் வெள்ளை மாலை அதற்கும் மேல் வர்ணமாலை. இதற்கு ‘தர்பார் ஸேவை’ என்று பெயர். எதனால் இந்த பெயர்? தர்பார் என்றால் பல முக்யமான பேர்கள் கூடும் சபை. இந்த க்ஷீரான்னத்தின் போது 108 திவ்யதேச பெருமாள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் வந்து அரங்கனுடன் ஐக்யமாகி விடுவார்களாம். இந்த நேரத்தில் அரங்கனை ஸேவி்ப்பது 108 பெருமாளையும் ஸேவித்த பலன்!.
ஸ்ரீரங்கவிமானம் மண்மூடி போயிருந்தாலும் இந்த பெருமாள்கள் வந்து ஒன்றித்து மறுநாள் காலை அவரவர் இடத்திற்குச் செல்வது நடந்து கொண்டுதானிருந்திருக்கும்!. இவ்வளவு சிறப்பு வாய்ந்தவருக்கு எள்ளளவும் அவர் ஸாந்நித்யம் குறைய வாய்ப்பேயில்லை!
”
க்ஷீரன்னம் ரெசிபீ (authentic) சாதித்தால் உதவியாக இருக்கும்.
கிருஷ்ணா
ஞாயிறு, செப்ரெம்பர் 28, 2008 at 9:14 பிப
Can you tell the quantity of water to be added.every time I have trouble in that only.
சனி, ஒக்ரோபர் 4, 2008 at 11:40 பிப
இன்றைக்கு எதேச்சையாக இதை செய்து பார்த்தேன். மிக நன்றாக வந்தது. ஒரு வார்த்தை நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. மிக்க நன்றி.
புதன், ஒக்ரோபர் 15, 2008 at 6:11 முப
எனக்கு பிடித்த சேனைக் கிழங்கு ரோஸ்ட் மிஸ்ஸாகி விட்டதே ?
ஞாயிறு, நவம்பர் 16, 2008 at 8:09 முப
hello jayasri
ungaludaiya blogai tamil recipes index moolamaaga kandu ingu vanthen… appapaa.. eppadi ithanai vagai unavugalai seithu photo eduthu recipeyaiyum azhagaana thamizhil type seithu poda mudinthatho enru viyakamal irukka mudiyavillai… hats of to you… i am really glad that i found your blog.. neengal samaiyal kuripudan, nammoor kovilgal pandigaigal patri solvathu… etho romba pazhakamaanavarin kadithathai padipathu pol romba swarasyamaaga irukirathu… vaazhga ungal pani… ungal blog-ai naan adikadi parkum blogugalil udane inaithu vidugiren…
புதன், பிப்ரவரி 18, 2009 at 9:56 பிப
கிருஷ்ணா: ரெங்கனுக்கு என்ன, எல்லா தர்பாரும் செல்லுபடியாகும்! ரெசிபியையும் முரளியையே கேட்டிருக்கலாம். என்னிடமே இருக்கிறது என்று நினைக்கிறேன்[எனக்குப் பிடிக்காது 😦 ஆனால் ஸ்ரீரங்கத்தில் பலருக்குப் பிடிக்கும் ஸ்பெஷல் ஐட்டம்] இல்லாவிட்டால் அவர் சகோதரர் தான் நம்ப வீதி. கேட்டுச் சொல்கிறேன்.
Priya: அது அரிசியைப் பொருத்தது. நல்ல பழைய அரிசியாக இருந்தால் மூன்று பங்கு தண்ணீரும் புதிய அரிசியாக இருந்தால் இரண்டரைப் பங்கு தண்ணீரும் வைக்கலாம்.
Srikanth, பரவாயில்லை, நன்றியை நீங்களே வெச்சுக்குங்க. தானே தன் கையால் பொங்கல் செய்து சாப்பிடவேண்டிய நெருக்கடி(கொடுமை)க்கு என்ன காரணமோ? சாத்துமதுக்கு குறிப்பெழுதினா திருக்கன்னலமுது எங்கன்னு கேட்கற மாதிரி சேனைக்கிழங்கு ரோஸ்ட் இங்க எங்க வந்தது?
kirthi: thanks. நீங்க எந்த ஊர்?