தேவையான பொருள்கள்:
அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், தடியங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, புடலை, சேனை, முருங்கை, வாழை, காராமணிக் காய், உருளைக் கிழங்கு….
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காயெண்னை, கடுகு, கறிவேப்பிலை
மசாலா அரைக்க:
தேங்காய்த் துருவல் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை:
- மேலே கூறியுள்ள காய்களில் குறைந்தது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வகைக் காய்களை உபயோகிக்கலாம்.
- காய்களைக் கழுவி, 2 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
- மசாலா சாமான்களை நெய்யில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, வெந்த காயில் கொட்டிக் கொதிக்கவிடவும்.
- புளி வாசனை அடங்கியதும் அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து சிறு தீயில் அடிப் பிடிக்காமல் குழம்பு, கூட்டு போல் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சாதம், மஞ்சள் பொங்கல்.
புதன், ஒக்ரோபர் 1, 2008 at 9:27 பிப
Nice recipe thanks.