வறுத்து அரைக்காமல் கொஞ்சம் சுலபமாகச் செய்யக் கூடிய முறை.
தேவையான பொருள்கள்:
தட்டப் பயறு – 1 கிலோ
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 1 மூடி
சாம்பார்ப் பொடி – 3, 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை.
செய்முறை:
- தட்டப் பயறை சுமார் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
- மீண்டும் கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும்.
- புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- புளி நீர், வேகவைத்த பயறு, தேவையான அளவு உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறவும். நீர் வற்றி, புளி வாசனை போக வேண்டும்.
- இறக்கும் முன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.
* இந்த முறையில் மொச்சைப் பயறு, பச்சைப் பயறிலும் செய்யலாம்.
* சுண்டல் மிஞ்சினால் அடுத்த வேளை கறியில், கூட்டில் அல்லது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலும் புளி, உப்பு, காரம் சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 தக்காளி, இஞ்சி, கரம் மசாலா, நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சப்பாத்தி வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.
நவராத்திரி நாயகி: ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (மலேசியா) – ரங்கமீனா
பின்னூட்டமொன்றை இடுக