தேவையான பொருள்கள்:
இட்லி மாவு – 2 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடமிளகாய் – 2
தக்காளி – 2
பச்சைப் பட்டாணி – 1/4 கப்(உரித்தது)
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்
சீஸ் – துருவியது (விரும்பினால்)
தாளிக்க – நெய் அல்லது எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
இவற்றோடு பொறுமை, பொறுமை, பொறுமை.
செய்முறை:
- அதிகம் புளிக்காத இட்லி மாவில் உப்பு, ரவையைக் கலந்துகொள்ளவும். ரவை மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
- வெங்காயம், குடமிளகாய், தக்காளியை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கேரட்டை பெரிய அளவில் துருவிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க அஞ்சுபவர்கள் இரண்டாக மட்டும் கீறிக் கொள்ளவும். ஊத்தப்பம் இடையில் கண்ணில் பட்டால் தூர எறிந்துவிடலாம்.
- வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.
- நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழையை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
- தோசைக் கல்லில் மாவை கனமாகப் பரத்தி, அதன்மேல் காய்கறிக் கலவையில் சிறிது தூவி சுற்றி நிறைய எண்ணை விட்டு, மூடிவைக்கவும்.
- குறைந்த சூட்டில் வெகு நிதானமாக வேக வேண்டும். மூடிவைப்பதால் மேல்பகுதி காய்கறிகளும் பாதி வெந்து மாவோடு ஒட்டியிருக்கும். திருப்பும்போது பிரச்சினை தராது.
- 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு, மீண்டும் சுற்றி எண்ணை விடவும்.
- இந்தப் பக்கத்தையும் 3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வேகவைத்து, திருப்பிப் போட்டு, மூடியில்லாமல் ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
* அதீதப் பொறுமையும், பொழுதைப் போக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் சமாளிக்கலாம். அநேகமாக காலை 4.30 மணிக்கு கூள மாதாரி படித்து இலக்கியம் வளர்த்தது நானாகத் தான் இருக்கும்.
* மேலே அங்கங்கே தக்காளி கெட்சப் போட்டு, துருவிய சீஸ், மிளகுத் தூள் (அல்லது பீட்ஸா மசாலா)தூவினால் பீட்ஸாவிற்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் இருக்கும்.
* காய்கறிகளை மொத்தமாக மாவில் கலந்தும் செய்யலாம். இது செய்வது சுலபம்.
* முதலில் செய்பவர்கள் கொஞ்சம் சிறிய சைஸ் ஊத்தப்பங்களாக முயற்சி செய்யலாம்.
* அதிகம் எண்ணைவிட்ட அந்த மொறுமொறுப்பான ஊத்தப்பம் கனமான இரும்பு தோசைக் கல்லிலேயே சாத்தியம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார்.
மேலே தோசை மிளகாய்ப் பொடி தூவிச் செய்தால், தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. அல்லது தயிர் தொட்டுக் கொள்ளலாம். ஃப்ளேவர் பிரமாதமாக இருக்கும்.
அடுப்பில், பணியாரக் குழியில் சிறிது எண்ணை விட்டு, மிஞ்சிய 2 கரண்டி காய்கறி-ஊத்தப்பக் கலவையில் பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள் கலந்து குழிகளில் விட்டுச் செய்தது இன்னும் சுவையாக இருந்தது.
புதன், மார்ச் 14, 2007 at 3:06 பிப
ஊத்தப்பம்
பார்க்கப் பிடிக்கும்
சாப்பிடப் பிடிக்காது
தின்னப் பிடிக்கும்
உண்ணப் பிடிக்காது
ஊத்தப்பம்
சாப்பிடப் பிடிக்கும்
சமைக்கப் பிடிக்காது
பிறர் சமைத்தால் பிடிக்கும்
நானே சமைத்தால் பிடிக்காது
இது கவிதையல்ல
ஊத்தப்பம் தின்றதால்
வந்த உளறல்
வியாழன், மார்ச் 15, 2007 at 1:10 பிப
நல்லவேளை எழுத்தாளர் ஒளிர்ஞர், இது கவிதையான்னு கேக்க வந்தேன். 🙂
வியாழன், ஒக்ரோபர் 11, 2007 at 7:02 பிப
//காய்கதி-ஊத்தப்பக் கலவையில் //
அது என்ன காய்கதி ?
சனி, ஜனவரி 5, 2008 at 1:54 பிப
hai hai hai.
i love
திங்கள், மார்ச் 17, 2008 at 11:23 முப
நண்பரே, உங்கள் இணையத் தளத்தைப் படித்தேன். கொஞ்சம் நேரம் என்னை மறந்து சுவைக்க முடிந்தது. வாழ்த்துகள். நீங்கள் இதைப் போல இன்னும் ஏராளமாக எழுத வேண்டும்.
அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்
திங்கள், மார்ச் 17, 2008 at 12:51 பிப
எழுத்தாளர் ஒளிர்ஞர், இதுக்கப்புறம் நிறைய எழுதிட்டேனே. 🙂 நீங்க ஊத்தப்பத்துலயே இருக்கீங்க. உங்க பதிவுல உங்க மனைவின்னு பெயர் குறித்து நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் உண்மையா, சிறுகதையா? எனக்குக் குழப்பமா இருக்கு.
சனி, மார்ச் 22, 2008 at 11:41 முப
அன்புடையீர்,
இது என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த கதை. அவனை விட,அவன் மனைவி அறிவாளி. நண்பனோ சராசரி ரகம், அவன் மனைவியோ சிந்திக்கத் தெரிந்தவர். இதை வைத்து, என் கற்பனைகளையும் கலந்து இந்த சிறுகதையை உருவாக்கினேன். மற்றபடி எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. என் சிறுகதையை படித்தமைக்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெள்ளி, மார்ச் 28, 2008 at 1:21 பிப
ஒளிர்ஞர், அது ஆணோ பெண்ணோ பொத்தாம் பொதுவாக இருவரில் ஒருவர் (மட்டுமே) அறிவாளி, ஒருவரைவிட மற்றவர் அதிகம் சிந்திக்கத் தெரிந்தவர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது அந்தந்த ஏரியா சார்ந்த விஷயம். முடிந்தால் வேறொரு சமயம் பேசலாம். நன்றி.