தேவையான பொருள்கள்:
கெட்டித் தயிர் – 2 கப் (லேசாகப் புளித்தது)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5, 6
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை
காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று.
தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
- துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும்.
- ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.
- பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும்.
- தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய், பருப்பு சாதம், அரிசி சேவை…
செவ்வாய், ஏப்ரல் 1, 2008 at 7:19 பிப
ஜெயஸ்ரீ,
உங்க மீண்டும் ஒரு காதல் கதை, மானுடம் வெல்லவோ மண் பயனுரவோ, As I am suffering from, நவராத்ரி நினைவலைகள் இதுக்கெல்லாம் நான் பரம ரசிகை ங்க.
உங்க தாளிக்கும் ஓசை யும் தவறாம படிச்சுடுவேன்.
தமிழ் ல blog கணும் னு எனக்கு ஆசை வந்ததுக்கு நீங்களும் ஒரு காரணம்.
தமிழ் தட்டச்சு கத்துகிட்டு ஒரு பதிவு போட்ருக்கேன்.
http://synapse-junctionofthoughts.blogspot.com/2008/03/blog-post.html
நீங்க படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லணும். free யா இருக்கப்போ படிங்க.
ப்ரியா
புதன், ஏப்ரல் 2, 2008 at 1:12 முப
ஐயய்யோ… தெரியாம உங்க “” பதிவை ஆஃபீஸ்ல உக்காந்து லன்ச்ல படிச்சுட்டேன்!! சிரிச்ச சிரிப்புல பக்கத்து ரூம்ல இருந்து எல்லாரும் வந்து எட்டி பாத்தாங்க!! ஒருத்தருக்கும் தமிழ் வேற தெரியாது 🙂 அப்படியே என் மாமியார், நாத்தனார்லாம் வர போறேன்னு சொன்னா என்னலாம் நினைப்பேனோ எல்லாம் போட்டுட்டீங்க!! உங்களுக்கு என்ன ஒரு 32 – 35 வயசு இருக்குமா? எனக்கு 22. எத்தனை வருஷம் போனாலும் மாமியார் மருமகள் உறவு மாறாதோ??
நான் ஒரு காலத்துல எழுதினேன் இப்போலாம் இல்லை. ஆனா அதுக்கும் முன்னாடியே கலப்பையால உழுதுட்டு தான் இருந்தேன் 😉 அப்பா தமிழ்ல ரொம்ப ஆர்வமுள்ளவர், அதான் ஸ்கூல்ல தமிழ் படிக்கலைனாலும், இப்படி என்னை தமிழ் பித்து பிடிச்சு ஆட்டுது! (22க்கே இந்த பேச்சானு இருக்கு இல்லே? பரவாயில்லை விடுங்க)
உங்க எல்லா பதிவையும் படிச்சுட்டு தான் நகரணும்னு இருக்கு, ஆனா மேனஜர் இன்னிக்கு என்ன செஞ்சனு கேட்டா என்ன சொல்றதுனு போறேன்.. உங்களை ஒரு விஷயத்துக்கு நான் பாராட்டறேன் – திரட்டிகள்ல சேராம இருக்கறதுக்கு 🙂 அழகான குடும்பம் உள்ள உங்களுக்கு எல்லா நல்லதும் நடக்க உம்மாச்சிட்டே வேண்டிக்கறேன்!
வியாழன், ஏப்ரல் 3, 2008 at 8:34 முப
மோர்க்குழம்புக்கு தனியா சேர்ப்பிங்களா? நான் செர்ப்பதில்லை. ஆனால் கடலைப்பருப்பும் ஒரு சின்ன ஸ்பூன் அரிசியும் ஊர வைத்து பச்சை மிளகாய் சீரகம் தேங்காய் சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு தயாரிப்பேன். இஞ்சியும் என் மகனுக்குப் பிடிக்காது. என் கணவர் நான் சாப்பிடும்போது மட்டும் இஞ்சி.சரிதானே ஜெயஸ்ரீ!
வியாழன், ஏப்ரல் 3, 2008 at 9:13 முப
Priya, :)))
நல்லவேளை இதையெல்லாம் பதிஞ்சு வெச்சீங்க. நான் சம்பவம் நடக்கும்போதே ரங்கமணிக்கு ஃபோன் செஞ்சு செஞ்சு சொல்லிடுவேன். இப்பவும் மறந்துடாம அவ தூங்கவிட்டு அதையெல்லாம் ரெண்டுபேரும் பேசிகிட்டே இருப்போம். அப்ப ஒரு பெரிய மலையாளக் கூட்டத்துக்கு நடுவுல கோவைல இருந்தேன். அதனால அவங்க மேற்பார்வைல வளர்ப்பு. “அம்மை பறைஞ்ஞு, அச்சன் பறைஞ்ஞு, பொன்னுமோளுக்கு தாழ ஒரு பல்லுண்டே”ன்னு அவங்களே கொஞ்சிப்பாங்க. ‘ஸ்திரீ ஜென்மம் புண்ய ஜென்மம்’னு ஒரே மலையாள டிவி சீரியல் பாட்டுதான் பாடுவா. அம்மான்னு தமிழ்ல பறையவே 3 வருஷம் ஆயிட்டு. 😦
தொடர்ந்து எழுதிகிட்டே இருந்தீங்கன்னா, இடைல வர ஆங்கில வார்த்தைகளுக்கு கூட தமிழ் சுலபமா வசப்படும். மகிழ்ச்சி ப்ரியா.
வியாழன், ஏப்ரல் 3, 2008 at 9:46 முப
kalyanakamala, தஞ்சாவூர் சைவர்கள் மோர்க்குழம்பு, வைணவர்கள் மோர்க்குழம்பு எல்லாம் இனிமே வரும். 🙂
வியாழன், ஏப்ரல் 3, 2008 at 11:43 முப
nandri jayasree.
ஞாயிறு, மே 18, 2008 at 10:35 முப
பார்ப்பவே பசிக்குதே.
திங்கள், மார்ச் 23, 2009 at 6:30 பிப
[…] http://top10samayal.wordpress.com/2009/03/06/morkuzhambu/ https://mykitchenpitch.wordpress.com/2008/04/01/mor-kuzhambu/ […]