தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்
ஏலப்பொடி
எண்ணெய்

appam_sreejayanthi

செய்முறை:

  • முதல் நாளே, அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • 1/4 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.
  • முற்றிய பாகாக வந்ததும், ஏலப்பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும்.
  • மாவை பாகில் செலுத்தி மூடிவைக்கவும்.
  • மறுநாள் இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்து இட்லிமாவு பதத்திற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், அப்ப மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் விடவும்.
  • திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* வெல்லம் அதிகமாகி, அப்பம் எண்ணெயில் பிரிந்து போனால் மேலும் சிறிது மாவு சேர்த்துக் கொள்ளவும்.

* சிலர் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்வார்கள். நான் சேர்ப்பதில்லை.

* அதிகம் இரண்டு மூன்று அப்பங்களுக்கு மேல் எண்ணெயில் ஒரே நேரத்தில் இடாமல் பார்த்துக் கொள்ளவும். மிகச் சிறிய வாணலியில் ஒவ்வொன்றாகச் செய்தாலும் சரியே. அப்பக் குழியிலும் செய்யலாம்.

* பொதுவாக, அப்பத்திற்கு வாணலியில் எண்ணை கொஞ்சம் அதிகமாகவே வைத்து நிதானமான தீயில் பொறுமையாகப் பொரித்தெடுத்தால் சுவையாக வரும்.