தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்
ஏலப்பொடி
எண்ணெய்
செய்முறை:
- முதல் நாளே, அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
- 1/4 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.
- முற்றிய பாகாக வந்ததும், ஏலப்பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும்.
- மாவை பாகில் செலுத்தி மூடிவைக்கவும்.
- மறுநாள் இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்து இட்லிமாவு பதத்திற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், அப்ப மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் விடவும்.
- திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* வெல்லம் அதிகமாகி, அப்பம் எண்ணெயில் பிரிந்து போனால் மேலும் சிறிது மாவு சேர்த்துக் கொள்ளவும்.
* சிலர் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்வார்கள். நான் சேர்ப்பதில்லை.
* அதிகம் இரண்டு மூன்று அப்பங்களுக்கு மேல் எண்ணெயில் ஒரே நேரத்தில் இடாமல் பார்த்துக் கொள்ளவும். மிகச் சிறிய வாணலியில் ஒவ்வொன்றாகச் செய்தாலும் சரியே. அப்பக் குழியிலும் செய்யலாம்.
* பொதுவாக, அப்பத்திற்கு வாணலியில் எண்ணை கொஞ்சம் அதிகமாகவே வைத்து நிதானமான தீயில் பொறுமையாகப் பொரித்தெடுத்தால் சுவையாக வரும்.
திங்கள், செப்ரெம்பர் 3, 2007 at 5:28 பிப
Hi Jayashree,
Please check out my blog for another method to make appam. That too comes out quite well and its quite easy to make too. My MIL had taught me that. Moreover since I don’t get raw rice, I make it that way. Just for your information :)May be yours is the right one.
I am making quite limited stuffs for Sri Jayanthi..will put it in my blog in a couple of days 🙂
செவ்வாய், செப்ரெம்பர் 4, 2007 at 12:30 பிப
Dear Jai
Arisiyai ooravaithu araithu adhanudan vellam (pagu vaikammal) serthu karithu, thengai pallu pallaga pottu, elapodi serthu, oru manjal vazhai pazham (migavum siriyathu) serthu appakkalil ootrinal nanraga irukkum. (idhu keralavil seium appam) coconut oillil seiya vendum. (………??!!) e…..??
புதன், செப்ரெம்பர் 5, 2007 at 3:10 பிப
Ramya, இது ஸ்ரீஜயந்தி வரிசைல traditinal முறைல செய்யணும்னு மட்டும் தான் இந்த வகைல ரெசிபி கொடுத்திருக்கேன். மத்த அப்பங்களும் கோதுமை அப்பமும் வேற சந்தர்ப்பங்கள்ல சொல்றேன். உங்களோடதும் நல்லா இருக்கு.
srilatha, வாழைப்பழம் போட்டு நம்ப மக்களும் செய்வாங்க. ரம்யா கூட சேர்த்திருக்காங்க. அது சேர்த்தா கொஞ்சம் மெத்துனு நல்லா வரும். என்னோட பிரச்சினை என்னன்னா, எனக்கு அந்தப் பழமும் அதோட மணமும் அறவே பிடிக்காது. யாராவது பக்கத்துல புகை பிடிச்சா கூட சகிச்சுப்பேன். ஆனா இந்த வாசனைக்கு(ஆனா வாழைக்காய், வாழைப்பூ, வாழைத் தண்டு எல்லாம் பிடிக்கும்.) ஓடியே போயிடுவேன். அதை உணவுல சேர்க்க அதிகம் எனக்கு வாய்ப்பே இல்லை. உங்க ரெசிபி இங்க தந்ததுக்கு நன்றி. மத்தவங்களுக்கு உபயோகமா இருக்கும். (நீங்களும் தமிழ்ல அடிக்க ரம்யாவுக்கு பிரகாஷ் சொன்ன tool உபயோகிச்சுப் பார்க்கலாமே.)
வியாழன், செப்ரெம்பர் 6, 2007 at 10:03 முப
Dear Jai
Uppucharla karuvadu minus mathri appathila pazham minus panniyum seiyalam. Aana vazhai pazham summavavathu sapida mattingala?? Udambukku nallathacheppa.
வெள்ளி, செப்ரெம்பர் 7, 2007 at 9:51 முப
உடலுக்கு நல்லதுன்னு நீங்க சொல்லப் போற ஆகச் சிறந்த முதல் பத்து பொருள்கள் எனக்குப் பிடிக்காததாத் தான் இருக்கும். எனக்குப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை; வேற யாராவது சாப்பிட்டு, வீட்டுல மணம் வந்தாலே பிடிக்கலை, அதான் பிரச்சினை. 😦
வெள்ளி, ஜூலை 1, 2011 at 10:35 முப
[…] Image by Jayashree Govindarajan mykitchenpitch.wordpress.com/2007/09/03/appam-sreejayanthi/ […]