தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு
பெருங்காயம்
தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 8
கறிவேப்பிலை.

thavalai idli

செய்முறை:

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, மிளகு, இவற்றை மிக்ஸியில் சன்னமான ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். (மாவரைக்கும் மிஷினில் இது இன்னும் நன்றாக வரும்.)
  • முதல்நாள் இரவே கடலைப்பருப்பு, சீரகம், உப்பு, காயம், இவற்றைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் அல்லது மோர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து, இறுதியில் நல்லெண்ணையும் கலந்து வைக்கவும்.
  • மறுநாள் காலை தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மாவில் கலந்து கொள்ளவும்.
  • அடுப்பில் கனமான வெண்கல உருளி அல்லது வாணலியில் 5 டீஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும், 3 கரண்டி மாவை ஊற்றி, அடுப்பை சிம்’மில் வைத்து, மேலே மூடி வைக்கவும். (கரண்டியால் ஓரளவுக்கு மேல் பரத்த வேண்டாம். அது எப்படி வாணலியில் செட் ஆகிறதோ, அப்படியே விட்டு விடலாம்.)
  • 5 நிமிடங்கள் ஆனதும் (பெரிதாகப் பொங்கியிருக்கும்.) அதை மெதுவாகத் திருப்பி போட்டு மேலும் 2,3 நிமிடங்கள் திறந்தவாக்கில் வேக விட்டு எடுக்கவும்.
  • கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் மேல்பகுதி சிவந்து கரகரப்பாகவும், அடியில் இட்லியாகவும் சுவையாக இருக்கும்.

* நான் காப்பர் பாட்டம் வாணலியில் செய்தேன். வெண்கல உருளியில் செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.

* எண்ணைக்குப் பதில் அல்லது எண்ணையுடன் நெய் சிறிது கலந்து உபயோகிப்பதெல்லாம் நம்முடைய உடல் வசதியைப் பொருத்தது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

விரும்பினால் தேங்காய்ச் சட்னி அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.