ஸ்ரீரங்கத்திற்கு அடுத்ததாக மனதில் மிக அதிகமாகப் பதிந்த கோயில் மதுரை கள்ளழகர் கோயில். காரணம், அங்கே இருக்கும் பதினெட்டாம் படியான் மற்றும் கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் காளி பட ஷூட்டிங்கிற்காக வந்திருந்த ரஜினியை மிக அருகில், கூட்டமே இல்லாமல்- மொத்தமே பக்கத்தில் 5,6 பேர் மட்டும் தான் இருந்தார்கள்- பார்த்தது அந்த வயதிற்கான த்ரில். எப்பொழுதும் குரங்குகள் த்ரில். பிரகாரத்தை வலம் வரும்போது, இடதுபக்க ஓரமாக இருக்கும் ஷேத்ர பாலர் சன்னதி முன்பு வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் (அம்மா வழிப்) பாட்டி தன் மாமனாரை நினைவு கூறுவார். “அப்பல்லாம் தோசைப் பொடி முடிஞ்சு நடை சாத்தினதும் கங்காணித் தாத்தா(கண்காணிப்பு?) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன், மற்றவர்கள் எல்லாம், “ஆமா, பெரிய நாட்டாமை வாரிசு! பரம்பரைக் கதையை எடுத்து விடறா!!” என்று கிண்டல் செய்வதைப் பொருட்படுத்தாமல். அடிக்கடி பெரிய வேன் வைத்துக் கொண்டு கூட்டமாகப் போவது, குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, வெள்ளரி மாங்காய் பத்தைகள் என்று ஏகப்பட்ட சில்லுண்டி ஐட்டங்களை உள்ளே தள்ளிக்கொண்டே மேலே முருகனை தரிசிக்க நடந்தே மலையேறுவது என்று எப்பொழுதுமே அழகர் கோயில் பற்றி இனிமையான நினைவுகள் மட்டுமே…..
“அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்” என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு நேர் மாறாக அழகருக்குச் சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் ஏனோ மணத்தை இழந்துவிடும். 😦 ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. 🙂
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 3 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
மிளகு – 2 டீஸ்பூன்
சுக்குப் பொடி – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)
- உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.
- மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.
- நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.
* அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்.
* வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். இரவு 9 மணிக்கு நடை சாத்துவதற்கு முன் செய்யப் படுவது. தற்கால சூழல் காரணமாக இரவு 7 மணிக்கே இதைச் செய்து முடித்து நடைசாத்துவதாகச் சொல்கிறார்கள்.
வியாழன், மே 3, 2007 at 8:37 முப
பத்து நாள் லீவு நல்லா இருந்ததா ? வாசகர்கள் கோரிக்கையெல்லாம் வைக்கலாமா ?
பேச்சிலர்ஸ் சுலபமா சமைக்கிறதுக்கு கொஞ்சம் ரெசிப்பிகள் குடுங்களேன். குறைந்த நேரம், குறைந்த பொருட்கள், அரைக்கிறது, வறுக்கிறதெல்லாம் இல்லாம. புளிக்கு பதிலாக புளி பேஸ்ட், தக்காளிக்கு பதிலாக தக்காளி ப்யுரே, இஞ்சி பூண்டுக்கு பதிலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெடிமேட் மசாலா பொடிகள், ப்ரோஸன் காய்கறிகள் இப்படி உபயோகித்து, ஒரு சாம்பார், ரெண்டு ரசம் (சாதா, லெமன்), ஒரு பொரியல் (எந்த காய்க்கும் compatible), ஒரு கூட்டு, ரெண்டு குழம்பு (சாதா, வத்தக்குழம்பு).
ரொம்ப புண்ணியமாயிருக்கும்.
வியாழன், ஓகஸ்ட் 7, 2014 at 12:59 பிப
yes
வியாழன், மே 3, 2007 at 10:58 பிப
// கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் ***2 அங்குல உயரமும்*** இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். //
ஒன்றரை அடி விட்டம் ok.
ஆனால் 2 அங்குல உயரமா ? உண்மையிலேவா அல்லது ஏதேனும் உயர்வுநவிற்சிஅணியா ? :-)))
வியாழன், மே 3, 2007 at 11:08 பிப
// As I am suffering from the severe above mentioned situation, I request you sir/madam to grant me leave for 12 days only from today (21/04/07 to 02/5/07). //
அதற்காக
அழகர் தோசை
Archived Entry
Post Date :
Wednesday, May 2nd, 2007 at ***12:00 pm***
இப்படியா ? :-)))
வெள்ளி, மே 4, 2007 at 1:17 பிப
//புளிக்கு பதிலாக புளி பேஸ்ட், தக்காளிக்கு பதிலாக தக்காளி ப்யுரே, இஞ்சி பூண்டுக்கு பதிலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெடிமேட் மசாலா பொடிகள், ப்ரோஸன் காய்கறிகள் இப்படி உபயோகித்து,… //
ஐயோ இப்படி எல்லாம் செஞ்சா எனக்கே தொண்டைக்கு கீழ இறங்காதே. 😦 ஸ்விட்சர்லாந்து ஒரு வார டூருக்கே, ரூமோட கிச்சனும்(செம திட்டு இதுக்கு!) புக் பண்ணி, ஒரு வார மெனு பிளான் போட்டு, சுடச் சுட வத்தக் குழம்பு, மிளகு குழம்பு, தக்காளி சாதம், தயிர் சாதம், அரிசி உப்புமான்னு அசத்தின ஆளு நான். அந்த அளவுக்கு உணவுப் பழக்கத்துக்கு அடிமை. 😦
ஆனாலும் எல்லாப் பொடி, ப்யுரே, பேஸ்ட்களுமே அநேகமா ‘சக்தி மசலா’, MTR போன்ற நிறுவனங்கள் தயாரிக்கறாங்க. நம்ப சுவைக்கு சக்தி மசாலா ஓக்கே. உங்களுக்கு மட்டும்னா அதிகத் தேவை இருக்காது. அதனால வாங்கி ஃப்ரிட்ஜுல அல்லது ஃப்ரீசர்ல வெச்சுக்குங்க. அப்புறம் இங்க நான் சொல்ற சமையலை எல்லாம் அந்தப் பொருள்களுக்கு மாற்றா உபயோகிச்சு அதே முறைலயே ஆனா சுலபமா நீங்க செய்யலாம். பேச்சிலர்ஸ் சமையல்னு தனியா எதுவும் தேவை இல்லை.
//பேச்சிலர்ஸ் சுலபமா சமைக்கிறதுக்கு கொஞ்சம் ரெசிப்பிகள் குடுங்களேன். குறைந்த நேரம், குறைந்த பொருட்கள்,..//
கூம்ஸ், உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா? எங்க ஊர்ல ஒரு சொலவடை சொல்வாங்க, “பொண்ணு வரதுக்குள்ள பூட்டிக்க! மாட்டுப்பொண்ணு வரதுக்குள்ள சாப்பிட்டுக்க!!” ன்னு. நானும் ஒரு புதுமொழி சொல்றேன், தனியா இருக்கும்போதே எந்த அவசரமும் இல்லாம நல்லா சமைச்சு, நிதானமா சாப்பிட்டுக்குங்க. வறுத்தல், அரைச்சல்ஸ், கரைச்சல்ஸ் இல்லாத ரெடிமேட் சமையல் எல்லாம் திருமண வாழ்க்கை, இரண்டுபேரும் வேலைக்கு, குடும்பம், குழந்தைன்னு வந்ததும் அதுவாவே வந்து ஒட்டிக்கும். அப்ப நீங்களே நினைச்சா கூட உங்க ரெண்டு பேருல யாருக்காவது நிதானமா சமைக்க, சாப்பிட நேரமிருக்குமான்னு தெரியாது. அல்லது சமைச்சாலும் அன்றாட நேர நெருக்கடிகள்ல ரசிச்சு சாப்பிட முடியாம சாப்பாட்டுக்கு கொடுக்கற priority குறைஞ்சுடும். இதுதான் யதார்த்தம். பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமாங்கற கேள்வி என் திருமணத்திலேயே வழக்கொழிஞ்சுடுச்சு. 🙂
முடிஞ்சவரை புராதன சமையல்களை அப்படியே சொல்லணும்னு தான் இந்தப் பதிவு. ஆனா நீங்க சொல்ற மாதிரி இனிமே ஷார்ட் கட்லயும் சொல்லப் பாக்கறேன்.
வெள்ளி, மே 4, 2007 at 3:18 பிப
பாலராஜன் கீதா, வெண்கல உருளி மாதிரி(தாம்பாளத்தையே உயரம் வெச்சு செஞ்ச மாதிரி)ஒரு பாத்திரம், அதுக்கு மத்தவங்க என்ன பேர் சொல்வாங்கன்னு தெரியலை, இந்த மலையாள மக்கள் எல்லாம் நடுக் கூடத்துல தண்ணில பூவெல்லாம் போட்டு வைப்பாங்களே- (இப்ப நம்ப மக்களும் அப்படி செய்றாங்க) அந்த மாதிரி ஒரு பாத்திரத்துல நிரம்பி இருக்கும் ஒரே ஒரு தோசை. அது எவ்ளோ உயரம் இருக்கும்? அந்த கனமான உருளியையே அடுப்புல வெச்சு செய்வாங்கன்னு நினைக்கிறேன். அடுத்த தடவை போகும்போது இன்னும் விபரமா கேட்டு வரேன்.
நாம வீட்டுல அப்படிச் செய்யணும்னு இல்லை, மெலிசா செஞ்சுக்கலாம். (நாங்க வீட்டுலயே அரை அங்குல உயரத்துல திரளி அடைன்னு ஒன்னு செய்வோம், அதை அப்புறம் சொல்றேன்.)
இதுல இன்னொரு கூத்தைக் கேளுங்க. நாங்களெல்லாம் இரவு அவ்ளோ நேரம் இருக்க மாட்டோம். பகல்லயே போயிட்டு திரும்பிடுவோம். ஆனால் ஒரு தடவை பாட்டி அண்ட் கோ அங்க தங்கியிருந்திருக்காங்க. அப்ப தோசையோட ஓரத்தை எல்லாம்(இது நெய் அதிகமா மொறுமொறுன்னு இருக்கும்.) துண்டாக்கி சுண்டல்ல கலக்காம நடுப்பாகமா மட்டும் எடுத்துக் கலந்திருக்காங்க. நம்ப மக்கள் அதையும் விடாம கேள்வி கேட்டிருக்காங்க. அந்தப் பாகம் அப்ப இருந்த ஆப்பீசர் வீட்டுக்குப் போகுதாம்.
(ஆப்பிசரய்யா, தினம் சாப்பிட்டா போரடிக்காதா? உடம்பைப் பாத்துக்குங்க.)
வெள்ளி, மே 4, 2007 at 3:27 பிப
//அதற்காக
அழகர் தோசை
Archived Entry
Post Date :
Wednesday, May 2nd, 2007 at ***12:00 pm***
இப்படியா ? :-)))
//
ஆமாம், 100 வது பதிவை ‘குலசாமி’க்கு நேர்ந்துவிடலாம்னு தான்.ஆனா 2ம் தேதிதான் அழகர் ஆத்துல இறங்கறார். அன்னிக்கு நான் பொட்டி திறக்க முடியாது, பிசி. அதான் post dated… அதுலயும் ஆத்துல இறங்கவிட்டுத்தான் பதிவு போஸ்ட் ஆகணும்னு நினைச்சேன். ஆனா எத்தனை மணிக்குன்னு சரியாத் தெரியாததால (அழகருதான் எல்லா இடத்துக்கும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரதுல முன்னோடி!) மையமா 12 மணிக்கு. :)) அப்ப நான் கிரைண்டர்ல மாவாட்டிகிட்டிருந்தேன். பதிவு சமத்தா வந்திடுச்சு போல! 🙂 ஆனா நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க. ஒரு மாசத்துக்கு எவ்ளோ கிலோ விளக்கெண்ணை வாங்குவீங்க? :))
சனி, மே 5, 2007 at 11:03 முப
Madam,
Welcome back!
Jahangeer
Qatar
ஞாயிறு, மே 6, 2007 at 8:26 முப
உயரம்தான் இடிக்குது…
மத்தபடி சுவாரஸ்யமா இருக்கு!
புதன், மே 9, 2007 at 11:38 முப
bayangaram kalakareenga. Adding ur dish again to the tamilcuisine.blogspot.com
சனி, மே 19, 2007 at 12:44 பிப
leave without notice makes me worried. hope all is well
புதன், மே 23, 2007 at 1:58 முப
புளிக்கு பதிலாக புளி பேஸ்ட், தக்காளிக்கு பதிலாக தக்காளி ப்யுரே, இஞ்சி பூண்டுக்கு பதிலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெடிமேட் மசாலா பொடிகள், ப்ரோஸன் காய்கறிகள் இப்படி உபயோகித்து,…
Friend,
Neenga intha puLi paste, tomato puree, ginger garlic paste ellam upayogikkAthInga. Athula ellam irukkira preservatives ellam slow poison. kadaisila periya kastathula kondu vidum. Kurippa ungala mathiri bachelorskku kalyanathukku appuram rombavae siramam kodukkum. aagavae mudinja varaikkum kastam pakkama puLi, tomatovaiyae use pannunga. unga oorla irukkira Indian storela ithellaam freshavae kidaikkumpothu ethukkaga pastekku poreenga?
வியாழன், மே 24, 2007 at 9:11 முப
Jahaangeer sir, Revathy நன்றி.
Jeeva, இது என்ன நிலைப்படியா, உயரம் இடிக்க? :சும்மா: 🙂
சந்திரா, இல்லைன்னா இப்படிக் கவலைப்பட்டு ஒரு காவியப் பின்னூட்டம்கூட வெளில வந்து எழுதியிருப்பீங்களா? நல்லதுதான்.
dhinesh, thanks. ஆமா, preservatives பத்தியும் குறிப்பிட மறந்திட்டேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தர் தினேஷ்னு யுஸ்லேருந்து.. நான் தமிழ் இணையம் மரத்தடின்னு வந்ததுல காண்டாகிட்டாரு. ‘We see only english pictures’ type. உங்க பேரைப் பார்த்ததும் அவங்களோன்னு நினைச்சு பயந்திட்டேன். (நான் சொல்ற ரெசிபி எல்லாம் செய்யாதீங்கன்னில்ல அவர் பின்னூட்டியிருப்பாரு.) உங்க OrgName பாத்து தெளிஞ்சுட்டேன். 🙂 உணவு குறித்து இன்னும் பயனுள்ள தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கங்களேன்.
வியாழன், மே 24, 2007 at 6:10 பிப
மெனுவை விட காமெண்ட் #4 தூள்
புதன், ஜூன் 6, 2007 at 4:14 முப
என்ன ரொம்பநாளா ஆளக் காணோம்?
புதன், ஜூன் 6, 2007 at 10:52 முப
சொக்காயி, ஆள் இல்லாமலா பின்னூட்டமெல்லாம் உள்ள விட்டு பதில் சொல்லிகிட்டிருக்கேன்? ஏனோ புதுசா எதுவும் எழுதத் தோணலை.(ஒரு block மாதிரி.) வலிந்து எதுவும் எழுதவேண்டாம்னு விட்டு வெச்சிருக்கேன். ‘சோம்பேறித்தனம்’னு நானே அதுக்கு ஒரு செல்லப் பேரும் வெச்சு celebrate பண்ணிகிட்டிருக்கேன். என்னவோ கொஞ்சம் கோபமா வேற இருக்கேன்(னு நினைக்கிறேன்.)பார்க்கலாம் எவ்ளோ நாள்னு. 🙂
திங்கள், ஜூன் 11, 2007 at 7:30 முப
dear all, sir solliya dosaiyum undu. adhu poka koilileye, sevarthikalukkaka, pagalileye ukkiranathil dosai seithu tharukirarkal. aanal size sir solliyamathiri irukkadhu. nam koilukku ulle sellum podhu order koduthal sevai sathithu thirumbi varum podhu adahi vangi kollalam. rusi enral avvalavu rusi. neengalum anupavikkalam.
திங்கள், ஜூன் 11, 2007 at 1:28 பிப
narayanasamy,
ஆமாம், அதனாலதான் “ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. :)” அப்படீன்னு பதிவுலயே சொல்லியிருக்கிறேன். கோவிலுக்குப் போவதே முக்கியமாக, போகும்போது ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து விட்டு, தரிசனம் முடிந்து [நினைவெல்லாம் பிரசாதத்திலேயே இருக்கும் :)]வந்து குரங்குகளுக்கு டிமிக்கி கொடுத்து சாப்பிடுவதற்காகத்தான். சுவையோ சுவை. யாமறிந்த தோசையிலே அழகர் தோசை போல் சுவையானது… என்னோடு சேர்ந்து குரல் கொடுத்ததற்கு நன்றி.
‘சார்’ எல்லாம் வேண்டாம், என்னை ஜெயஸ்ரீ என்றே குறிப்பிடலாம். 🙂
வியாழன், ஜூன் 14, 2007 at 12:05 முப
arusuvai.com il kovilil seyyum thoosai seimurai padamaaha kodukkappattullathu. unmaiyana dosai size eppadi irukkum endru athai parthu therinthu kollalaam.
http://www.arusuvai.com/tamil/node/99
வியாழன், ஜூன் 14, 2007 at 7:53 முப
வாவ் விஜி, ரொம்ப நன்றி. நேராக அழகர் கோயில் போன உணர்வு. இந்த வருடம் மிகவும் மிஸ் செய்துவிட்டேன். 😦 ஆனால் இப்படித்தான் இரவும் செய்கிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உயரம் குறித்து அடுத்த முறை நேரில் விசாரித்து எழுதுகிறேன்.
தோசை குறித்த இன்னொரு ரகசியம். 🙂 அழகர் கோயில் என்று இல்லை, எந்தக் கோயிலிலும் இந்த மாதிரி பிரசாத ஸ்டாலில் வாங்குவதை விட கோயில் ஸ்ரீபண்டாரம் என்ற இடம் இருக்கும். அங்கேதான் ஒரிஜினல் கிடைக்கும். இந்தக் கோயிலில் அது உள்ளே நுழைந்ததுமே இடதுகைப் பக்கம்(கிட்டத்தட்ட செருப்புகள் கழட்டிவிடும் இடத்திற்கு எதிரில்) இருக்கும். அங்கே மட்டுமே ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கவும். (இதற்காக ஸ்டால்காரர் என்னை அடிக்க வரலாம்!)இந்தக் கோயில் மடப்பள்ளியிலும் பிரத்யேகமான அன்றைய பிரசாதங்கள் சேவார்த்திகளுக்கானது எடுத்து வைத்திருப்பார்கள். கேட்டால் இலவசமாகவே தருவார்கள். இது எல்லாக் கோயில்களுக்கும் பொருந்தும். முக்கியமாக அழகர் கோயிலுக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும். நான் சொன்னதை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
செவ்வாய், ஜூன் 19, 2007 at 9:56 பிப
ஜெயஸ்ரீ, உங்களை tag பண்ணியிருக்கேன்.. ஆனர் பண்ணுங்க 🙂
புதன், ஜூன் 20, 2007 at 9:46 பிப
Hi,
I tried your dosai, and it was very good. I felt that this is a really temple dosai. Thanks a lot for this posting.
Abigail
வெள்ளி, ஜூன் 22, 2007 at 5:38 பிப
ரொம்ப நாளா புதுசா ஒண்ணும் போடவேயில்லையே , என்ன ஆச்சு ?
🙂
புதன், ஜூன் 27, 2007 at 2:04 பிப
ஜெயஸ்ரீ, ஆமாம், அதுதான் ஏன்னு எனக்கும் தெரியலை. 🙂
Abigail, thanks and welcome! 🙂
புதன், ஜூன் 27, 2007 at 2:27 பிப
பிரகாஷ், மோகன்தாஸ் தம்பி,
இது என்ன tag, நதிமூலம், ரிஷிமூலம் ஒன்னும் புரியலை. ஆனாலும் பிரகாஷ், உங்களை ஆனர் பண்ணச் சொல்லி என்னை பொதுவுல டிஸானர் செஞ்சுட்டீங்களே இப்படி.. 😦
நானும் ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். ம்ஹூம். பதிவெல்லாம் எழுதற அளவுக்கு அப்படி எதுவும் பெருமைப் படற மாதிரி சாதிக்கலை.
எப்பவும் ஸ்ரீரங்கத்துல காட்டழகிய சிங்கர் கோயிலுக்குப் போகும்போது கணவரும் பெண்ணும் ‘அம்மா ஸ்கூல்! அம்மா ஸ்கூல்!!’னு கத்துவாங்க. சும்மா சிரிச்சுகிட்டு இந்த ஸ்கூலுக்கு பெருமைசேர்க்கற மாதிரி ஏதாவது செஞ்சிருக்கேனான்னு யோசிப்பேன். 😦
சிறுமை எதுவும் சேர்க்கலையே, அது போதாது? வழிநடத்தற கடவுளுக்கு நன்றி.
Thanks. 🙂
புதன், ஜூன் 27, 2007 at 2:39 பிப
///ஆனால் இப்படித்தான் இரவும் செய்கிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உயரம் குறித்து அடுத்த முறை நேரில் விசாரித்து எழுதுகிறேன்…//
நான் ஏற்கனவே எழுதியது சரி. உயரம் குறித்துச் சொல்லியதும் சரி. அடுப்பை முற்றிலும் தணித்துவிட்டு இரண்டு மணிநேரம் வைத்திருப்பார்கள்.
அறுசுவை டாட் காமில் சொல்லியிருக்கும் பகலில் கிடைக்கும் தோசை வேறு.
செவ்வாய், ஜூலை 31, 2007 at 11:20 முப
jeyashree,
ur blog increases my homesickness…going to azhagar koil..me too………
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 11:10 முப
சீதா, போனீங்கன்னா தோசை வாங்கிச் சாப்பிடுங்க. இப்ப தோசைப் பொடி எல்லாம் செய்றாங்களா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வாங்க. அப்படியே அழகருக்கும் குரங்குகளுக்கும் நான் hi சொன்னேன்னு சொல்லுங்க. 🙂
செவ்வாய், திசெம்பர் 4, 2007 at 7:51 பிப
hello jayashri,
I saw ur alagarkovil dosa. Because now only i started to see ur all receipies. So i ill make asearly and i ill send u mhow it came. ok ur friend Ramakannan from mysore.
செவ்வாய், மார்ச் 4, 2008 at 4:41 பிப
i saw your blogs very nice,and anthor recipe is parrethipal kanji(cotton seeds kanjii) this is also madurai recipe.i will post on my soundcookery.blogspot,com very soon .
வியாழன், செப்ரெம்பர் 25, 2008 at 6:52 பிப
im also fan of azlagar kovil dosai.its heartening 2 see so many people r fan to dat like me .and like u i 2 go to temple for the dosai. ur blog makes me to go for the dosai.
புதன், பிப்ரவரி 18, 2009 at 10:48 பிப
Soundaram, உங்க கஞ்சி பதிவுல கிடைக்கலையே இன்னும்.
vasantha lakshmi vijayarangan இந்தத் தடவை பிடிவாதம் பிடிச்சு, தனியே, தன்னந்தனியே மதுரை அழகர்கோயிலெல்லாம் சுத்தியடிச்சேன். தோசை இல்லை, திருமாலிருஞ்சோலையே சுகமாத்தான் இருந்தது.
திங்கள், ஜூன் 15, 2009 at 12:18 முப
Dear Jayshree,
Where else can I find such rare, unique, and authentic recipes? My answer will be, ONLY at my kitchenpitch.
My family knows what a “full blown addict” I am for Azhar Kovil Dosai! It has been passed on from my father for sure.
When I was a kid, which is very long ago……simply because of the mundane life in Poolangulam (village near Madurai)
My dad came up with the idea of commissioning Narayanan (our cook) to simply go to the kovil do an archnai and
buy Dosai for dinner. During the early 70’s because of my grandparents, I had the privilege of entering the Azhar Kovil Madapalli .
My humble opinion is: Man, the Urid Dhal simply made that place stink but once we eat the
mouth watering Dosai…the world around you becomes a much better place.
Thank you Jayshree for pouring your heart on Azhar. I am so nostalgic….;-( now.
Thanks again!
Amrita
செவ்வாய், நவம்பர் 3, 2009 at 8:04 பிப
hi.. i was amazed by seeing your azhagar kovil dosa… its really superb… i am new to kitchen…. let me try it first… thanks….
ஞாயிறு, ஜனவரி 24, 2010 at 10:46 முப
very 9s.. i will try..i like it
ஞாயிறு, ஓகஸ்ட் 3, 2014 at 6:59 பிப
good