தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
காய்ந்தமிளகாய் – 4,5
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெல்லம் – சிறு கட்டி(விரும்பினால்)
பெருங்காயம்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம்.

செய்முறை:

  • கடுகு, வெந்தயத்தை எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, வெல்லம், தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்துவிடவும்.
  • வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • உதிராக வடித்த சாதம் சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நெய், தாளித்தவை, சாறுக் கலவை எல்லாம் சேர்த்து உடையாமல் கலக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சாதாக் கறி, கூட்டு வகைகள்.