தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் – 200 கிராம்
தனியா – 4 கப்
துவரம் பருப்பு – 1 1/2கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
மிளகு – 1 1/2 கப்
சீரகம் – 1/2 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 50 கிராம் கட்டி
விரளி மஞ்சள் – 10
செய்முறை:
- விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
- தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.
- எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.
செவ்வாய், ஜூலை 1, 2008 at 7:38 பிப
[…] மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் […]
வெள்ளி, ஒக்ரோபர் 24, 2008 at 9:44 பிப
fsjwtruiwutrwiiwhthwtth
வியாழன், ஓகஸ்ட் 13, 2009 at 2:13 பிப
hi
ungaloda site is very usefull to beginners like me.