தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
எள் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.

eL saadham

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும்.
  • எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். (சிறிதளவு உப்பு மட்டும்- அரைபடுவதற்காக)
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • உதிராக வடித்த சாதத்தில் தாளித்ததைக் கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலக்கவும்.

*  விரும்பினால் ஒரு டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கலாம். சுவையாக இருக்கும். (நான் சேர்த்திருக்கிறேன்.)

* காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகும், எண்ணைக்குப் பதில் நெய்யும் உபயோகிக்கலாம்.

* கருப்பு எள் உபயோகித்தால் சாதம் நிறம் கருப்பாக இருந்தாலும் அதிக மணமாக இருக்கும். (நான் வெள்ளை எள் உபயோகித்திருக்கிறேன்.)

* யார் வீட்டிலாவது எள் சாப்பிட்டால் அவர்கள் வீட்டுக்கு உழைக்க வேண்டியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. நான் அறிந்தவரை தவறானது. எள் கொழுப்புச் சத்தானது. அதனால் யார் வீட்டில் சாப்பிட்டாலும் நம் வீட்டுக்கு வந்து உண்ட கொழுப்பைக் குறைக்க கொஞ்சம் அவசியம் உழைக்க வேண்டும். 🙂 அவ்வளவுதான்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

அப்பளம், வடாம், வாழைத்தண்டு மோர்க் கூட்டு