தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2, 3
கறிவேப்பிலை.
தோசை மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.
 

thengaai saadham

செய்முறை:

  • அரிசியை அளவாகத் தண்ணீர் வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
  • வாணலியில் தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • துருவிய தேங்காயையும் சேர்த்து லேசாக இளம் சிவப்பாகும் வரை வதக்கி, சாதத்தில் கொட்டி தேவையான உப்பும் சேர்த்து, சாதம் உடையாமல் கலக்கவும்.

* இது போன்ற வகை கலந்த சாதங்களுக்குத் தாளிக்கும்போது 1/2 டீஸ்பூன் எள் அல்லது சாதம் கலந்தபின் கடைசியில் 1/2 டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி கலந்தால் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும். வழக்கம்போல் இதன் காப்பிரைட் எனக்கே சொந்தம். 🙂

* விருந்தினர் அல்லது பார்ட்டி மாதிரி நேரங்களில் நிலக்கடலைக்குப் பதில் முந்திரிப் பருப்பு உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கானதாக இருந்தால் கிஸ்மிஸ் கூட.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், குருமா வகை.