கார மிக்ஸர் – 1

 
தேவையான பொருள்கள்:

அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு –  1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்

 

செய்முறை:

  • கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
  • முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
  • அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
  • கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
  • பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.

* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.

சிலர் முழுமையாக எள்ளையே உபயோகித்து உருண்டை செய்து பிறருக்குக் கொடுக்கவோ, பிறர் அதை வாங்கவோ, வாங்கினாலும் அதன் கொழுப்புச் சத்து காரணமாக உண்ணவோ தயங்கலாம். அவர்கள் சுவையாக இந்த உருண்டையை, பெயரளவில் மட்டும் எள் சேர்த்துச் செய்யலாம். சுவை, குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை – 100 கிராம்
பொரி – அரை லிட்டர்
பொட்டுக் கடலை – 50 கிராம்
கொப்பரைத் துண்டுகள் – சிறிது
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1/2 கிலோ
ஏலப்பொடி
சுக்குப் பொடி (விரும்பினால்)

செய்முறை:

  • நிலக்கடலையைத் தோல் நீக்கி, இரண்டாக உடைத்து, வறுத்துக் கொள்ளவும்.
  • எள், கசகசாவையும் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • கொப்பரையை மிகச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • நிலக்கடலை, பொரி, பொட்டுக் கடலை, கொப்பரைத் துண்டுகள், எள், கசகசா எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
  • வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து முற்றிய பாகு காய்ச்சி, ஏலப் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
  • பொரிக் கலவையை பாகில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • சூட்டோடு கையில் அரிசி மாவு தோய்த்துக் கொண்டு சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* பத்துப் பத்தாக உருண்டைகள் ஆனதும் ஒரு முறம் அல்லது தட்டில் போட்டு உருட்டினால் மேலும் இறுகி பிடித்துக் கொள்ளும்.

* உருண்டைகள் பிடித்துக் கொண்டிருக்கும்போதே கலவை எடுக்க வராமல் இறுகிவிட்டால் மீண்டும் லேசாக அடுப்பில் வைத்து இளக்கி, பின்னர் பிடிக்கலாம்.

* கொப்பரை இல்லாவிட்டால், தேங்காயை மிகச் சிறிய துண்டுகளாகக் கீறி சிறிது நெய்யில் பொரித்துச் சேர்க்கலாம்.

* முந்திரியை வறுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு உருண்டை உருட்டும்போதும் ஒன்றை இடையில் வைத்தும் உருட்டலாம்.

நவராத்திரி நாயகி: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் – ஷக்திப்ரபா.

 1.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு

mullu murukku_sreejayanthi

செய்முறை:

  • அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  • பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • 2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2 அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து செய்யவும்.

2.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப் பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு முறுக்கு செய்யலாம்.

3.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

4.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.

1.
தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பொட்டுக் கடலை – 4 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு –  4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
காரப் பொடி
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
எண்ணெய்

thattai1_sreejayanthi

செய்முறை:

  • புழுங்கல் அரிசியை நன்கு களைந்து, நீரில் ஊறவைத்து, கெட்டியாக ஆனால் நைசாக கிரைண்டரில் அரைக்கவும்.
  • இத்துடன் உளுத்தம் மாவு(வறுத்து அரைத்தது), உப்பு, பெருங்காயப் பொடி, பயத்தம் பருப்பு கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், வெண்ணை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து அழுத்தாமல் லேசாகக் கலந்துகொள்ளவும்.
  • பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வெள்ளைத் துணியில் மெல்லிய வட்டமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.
புழுங்கல் அரிசியோடு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், ஒரு துண்டு இஞ்சி, இவைகளை நைசாக அரைத்து, உளுத்தம் மாவு, வெண்ணை சேர்த்து மெலிதாகத் தட்டினால் கரகரப்பாக இருக்கும். கறிவேப்பிலை மல்லித் தழையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

thattai2_sreejayanthi

3.
புழுங்கல் அரிசி மாவுடன், உளுத்தம் மாவு, வெண்ணை, உப்பு, எள், பெருங்காயத் தூள், காரத் தூள் சேர்க்கும்போது ஊறவைத்து நீரை ஒட்ட வடித்த பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, வெள்ளரி விதை, பரங்கிவிதை, பெரிய ஜவ்வரிசி இவைகளில் சிலவற்றையோ, எல்லாவற்றையுமோ சேர்த்தும் தட்டலாம்.

4.
புழுங்கல் அரிசிக்குப் பதில் பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்துச் சலித்த மாவையும் உபயோகிக்கலாம்.

* தேன்குழல், ரிப்பன், தட்டை போன்றவை நமுத்துப் போகாமல் மொறுமொறுவென்று இருக்க, மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்து செய்யலாம்.

* தட்டைகளை வேகமாகத் தட்ட, பிளாஸ்டிக் ஷீட்டில் அடியில் எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து, மேலேயும் ஒரு எண்ணெய் தடவிய ஷீட்டை வைத்து, டபராவால் தேய்த்தால் வேகமாகச் செய்துவிடலாம்.