என்னில்
எல்லா வாத்தியங்களையும்
இசைக்கப் பார்க்கிறாய்
பிறந்த குழந்தையாய் நீவீறிட்டபோது
கறந்தபாலின் தூய்மையையும்
மிஞ்சிய தாய்மையுடன் என்
மார்சுரந்த பாலருந்த மறுத்தாய்.
வீணையில் வயலினிசை
வேண்டும் என்றே இன்னும் அழுகை
ஓடிப்பிடித்த கதைகளும்
உன் ஒளிந்து விளையாடிய நினைவுகளும் கேட்டு
உச்சிமுகர்ந்தளித்த முத்தம் உணர்ந்தறியாய்.
வீணையில் குட்டிக்கண்ணனின்
குழலினிமை இல்லையென்றொரு குதிப்பு
மீசைவைத்த ஆசைக்கதைகளும்
மீண்டுவந்த காதல்பாதைகளும்
தோழியைப்போல் கேட்டபோதென்
தோளில்சாய்ந்த சுகமறியாய்
வீணையில் நாதஸ்வரத்தின்
நாதமில்லையென்றொரு நகைப்பு
காதல்கிறக்கத்தில் நீயும்
மோனத்திருந்த நேரத்தில்
உள்ளமும் உடலும்
அதன் நீட்சியாய்
உடையும் கூட சற்றேநெகிழ்ந்ததை
உன்னோடு நானும்கூட
உணராதுறைந்து நிற்கையில்
தவறிய தாளத்திற்கு வீணையொரு
மேளமில்லாததே காரணமென்று
காலால் எட்டியோர் உதைப்பு
எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா?
நாண்மீட்டத் தெரியாதவனின் கைகளில்
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது
தேடல் எனக்கான நிஜமாய்
அடக்க மாட்டா ஆர்வத்துடனும்
கடக்க மாட்டாக் காதலுடனும்
வரும்பொழுதினில்
தரையமர்ந்து
மடியேந்தி
நெஞ்சின் நெருக்கத்தில் அழுத்தி
இருகைகளால் இசைக்க வேண்டியதில்லை என்னை
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்
அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.
ஞாயிறு, மே 16, 2010 at 11:43 முப
என்னவோ புதுகவிதைன்றீங்கோ,வீணன்றிங்கோ,இதெல்லாம் இந்த மர மண்டைக்குப் புரியறதில்லங்கோ.பதிவுக்கு வந்தமா,புளியோதரை,கோவில் தோசை இதையெல்லாம் பத்திபடிச்சுச் ’சாட்ட’ திருப்தி அடைஞ்சமான்னு இருந்தேன்.மாத்திப்புட்டிங்களே!
நல்லாருந்தாச் சரி!
ஞாயிறு, மே 16, 2010 at 3:19 பிப
ஒரு வரியைப் பல வரிகளா மடக்கி எழுதினாக் கவிதையா? கொடுமைடா சாமி. இதுக்கு உங்க சமையல் குறிப்பையே சகிச்சுக்கலாம்.
சனி, ஜூன் 5, 2010 at 10:04 முப
//ஒரு வரியைப் பல வரிகளா மடக்கி எழுதினாக் கவிதையா?//
“மார்சுரந்த பாலருந்த”
“மீசைவைத்த ஆசை”
“நீட்சி”
“புழுதிப்புனலில்”
ஆகிய வார்த்தைகளை பார்த்துவிட்டும் உமக்கு ஏனைய்யா,இந்த ஐயம்?
இது புதுகவிதையேதான்!
என்ன, இன்னும் இரண்டொரு ஆங்கில,பிரெஞ்சு ஸ்பானிஷ் சொற்களையும் ஆங்காங்கே தூவியிருக்கலாம்!
“கம்சனை காதலிக்கும் கோபிகை” என்று ஒரு controversial தலைப்பும் கொடுத்திருக்கலாம்
யாருக்கும் எந்த சந்தேகமும் வந்திராது!
வியாழன், ஜூன் 17, 2010 at 9:22 முப
ஜெ, எத்தனையோ தடவை சொல்லணும் நினைச்சு அப்படியே மறந்துருக்கேன்..
சாம்பார், கதம்ப சாம்பார், வற்றல் குழம்பு, நெல்லித் தொக்கு, பொங்கல், பிசி பேளா பாத்னு நீங்க குடுத்ததுல எக்கச்சக்கம் பண்ணியிருக்கேன். எல்லாமே அட்டகாசமா இருந்துது! என்னை மாதிரி சமையல் அனுபவமே இல்லாதவங்களையே நல்ல பெயர் வாங்க வெச்ச நீங்க, இன்னும் நிறைய குறிப்பு போடுவீங்கன்னு ஆர்வமா கிட்டத்தட்ட தினமும் வந்து பாத்துட்டு இருக்கேன்.. 2 வருஷமா ஒரு 10 குறிப்பு போட்டிருப்பீங்களோ என்னவோ.. 😦 உனக்காக எல்லாம் எழுத முடியுமான்னு கேட்கலாம், இருந்தாலும் எனக்கு பெரிசா மானரோஷம் எல்லாம் கிடையாதுங்கறதால கேக்கறேன். ப்ளீஸ் வாங்க!!
ஞாயிறு, ஓகஸ்ட் 1, 2010 at 8:25 பிப
ஜெ, வருஷம் ஒரு பதிவு போடும் எண்ணமா?
புதன், ஓகஸ்ட் 4, 2010 at 7:22 முப
உஷா, உங்களுக்கு அவரைக் கெடுக்கும் எண்ணமா?
புதன், ஓகஸ்ட் 4, 2010 at 10:48 முப
ஜெயஸ்ரீ என்னோட சேராதீங்க!
வியாழன், ஓகஸ்ட் 5, 2010 at 6:27 பிப
ஜெயஸ்ரீ,மீண்டும் பார்க்கப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது.
திங்கள், செப்ரெம்பர் 13, 2010 at 11:07 முப
3 ஆதார குணங்களும் S. ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சுந்தரராமசாமி, சாரு ஆகியோரும்
http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html
சனி, ஒக்ரோபர் 13, 2012 at 12:29 பிப
அருமையான பதிவு.கவிதையே ஒரு பொன் வீணை.