ஆன்மிகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுள்களை எங்கே காணோம்?
ஐயகோ!
தமிழன்னையின்
முள்கிரீடத்தில்
இன்னுமொரு
நெருஞ்சிப்
பூவா?
[– கவிப் பகைவன் ஆசிப் மீரான், நிழல்கள் புத்தக வெளியீட்டில்….]
அன்புள்ள ஹரன் பிரசன்னா,
புத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைதான் என்றாலும் நாம் அறிந்தவர் எழுதிய புத்தகங்கள் இன்னும் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருபவை. அப்படி எழுதியிருப்பவர் எனக்குத் தெரிந்து பத்திருபது பேர் இணையம் முழுவதும் இருக்கலாம் என்றாலும் அதனினும் பிரத்யேகமானது இந்த நூல் வெளியீடு என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
அந்த விதத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்த நொடியே காணாமல்போனேன் என்று சொல்லவிரும்பாவிடினும் புல்லரித்தேன் என்பதில் பொய்யில்லை. பக்கங்களைப் புரட்டும்போதுதான் அந்த அனுபவத்திற்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. கடைசியிலிருந்து ஆரம்ப நாள்களை நோக்கி நகர்ந்த– புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப– கவிதைகளை வாசிக்க வாசிக்க- மெதுவாகப் புரிந்துகொண்டேன், நான் திருப்பிக் கொண்டிருப்பது பக்கங்களையோ கவிதைகளையோ மட்டுமல்ல– என் கடந்த வருடங்களின் ஈடிணையில்லா இணைய நாள்களையும் சேர்த்தேதான் என்பதை.
எப்படிப்பட்ட அனுபவம் என்பதை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை. இனி, இந்த உணர்விலிருந்து வெளிவந்து வெறும் வாசகனாக முடிவெடுத்து, திரும்பவும் பலமுறை கவிதைகளினூடாக நடைபயில ஆரம்பித்தாலும், நாலுகால் பாய்ச்சலில் நினைவுகள் பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கவே முடியவில்லை.
எல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதியே, என்னை இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனமோ(!) திறனாய்வோ(?!) எழுதும் தகுதியை இழக்கச் செய்கிறது. அப்படி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்.
என்றாலும், இந்த நெகிழ்ச்சியான நேரத்தில் உங்களை வாழ்த்திச் சொல்லவும் வேண்டிக் கேட்கவும் ஒன்று உண்டு என்றால் அது– அந்தத் தகுதியின்மை எனக்கு எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; இனி வரும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதை, புதினங்கள் எல்லாவற்றினூடாக நீங்கள் இனியும் நிகழ்த்தப் போகும் இலக்கியப் பயணம் அனைத்திலும்கூட நட்பின் நாதமாக நானும் உடன் வந்தவளாகவே இருக்கவேண்டும் என்பதுதான்.
நலம் ஒன்றே நாடும் நட்புடனும் வாழ்த்துகளுடனும்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
இப்படி எல்லாம் நான் எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்க என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. நிழல்கள் புத்தகத்தை இங்க வாங்கிகிட்டு அப்படியே எஸ்’ ஆயிடுங்க. நம்ப ரெண்டுபேருக்குமே அதுதான் நல்லது.
0
சே சே ஜெயஸ்ரீ அந்த மாதிரி ஆள் இல்லைன்னு என்னை சரியாப் புரிஞ்சுண்டு, மேல இருந்த எதையும் படிச்சு நேரத்தை வீணாக்காம, நேர ஸ்கிரீன் ஸ்க்ரோல் செஞ்சு பதிவோட இந்த இடத்துக்கே வந்தவங்க… வாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட உங்களை நான் ஏமாத்தப் போறதில்லை.
நான் சொல்ல வந்தது இதுதான்:
அந்தக் கவிதைத் தொகுப்பு முழுமையானதில்ல. அது புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்தமாதிரி கவிஞரோட சில நிழல் பிம்பங்களைத்தான் காண்பிச்சிருக்கு. தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை. எல்லாத்துலயும் ஒரு பின் நவீனத்துவ கருமை படர்ந்து பாதாள பைரவியா நமக்கெல்லாம் புரியாம இருக்கலாம்.
கவிதைகள் குழப்பலாம்; ஆனா தன் பிம்பத்துல குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு கவிஞர் முன்ஜாக்கிரதையா தன் பழைய கவிதைகளை அப்படியே மறைச்சு ட்ரங்க்பெட்டிக்குள்ள போட்டு பரண்மேல ஏத்திட்டாரு. நாமளும் அதை அப்படியே விட்டுடமுடியுமா?
அதனால நிழல்களை நம்பாம நிஜங்களைத் தேடறவங்க– பின் நவீனத்துவத்துவக்கு முன்னான- அரிதாரங்கள் இல்லாத– ஒரு (காதல்) கவிஞர் உதயமான உண்மை முகத்தை, அதோட வர்ணங்கள், சமன்பாடுகளோட பார்க்க நினைக்கறவங்களுக்கு இங்க கொஞ்சம் கவிதை(!!)களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்….. (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு! வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதால தமிழுக்கு நான் செய்ற தொண்டா இதை எல்லாம் தோண்டி எடுத்து…..)
மெத்தைக்குக் கீழே
கத்தை கத்தையாய்
காற்றே சுவாசிக்காத
கவிதைகள் நிறைந்த
காகிதங்கள் கிறுக்கல்களாய்.
……
…..
அட அது நான் ஓட்றது இல்லைங்க. அவரோட ‘காதல் சுகமானது?’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்!) கவிதைலயே தன்னைப்பத்தி அம்மணிக்கு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.
வெற்றுக் காகிதத்தின்
வரட்டு வார்த்தைகள்
முத்த பதிலினால்
முளைவிடுமாதலால்
மரப்பாச்சி பொம்மையையும்
மனிதனாக்கும்
அக்காதல் வித்தையை
காற்றில் அனுப்பு
காத்திருக்கிறேன் நான்.
…..
— “காதலுமது”
தோடாஆஆ…
கடலை போடறது கேட்டிருப்பீங்க. கவிஞர் கடலை தட்றாக.
காதல் கடலை
தானாய் வெடித்தால்
சுகப்பிரசவம்
அல்லாதுபோனால்
அதை உடைக்கத்
தடி எதற்கு?
தட்டல் போதும்
— “சடுகுடு”
பிரிவில் உணர்கிறேனடி
பாசத்தின் பரிணாம வளர்ச்சி
காதலாகிப்போனதை
அடீ புடீன்னெல்லாம் கூப்பிட்டு ஒளறலைன்னா அது காதல்கவிதையே இல்லை போல. கொடுமை! (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு!)
பூவரசம் பெண்ணே
காற்றில் என் காதல் அனுப்புகிறேன்
மேகத்தின் வழி உன் மோகம் அனுப்பு
என்னா டீலிங்கு! என்னா டீலிங்கு!!
பிரிவின் வெம்மையில் கவிதை சொல்கிறேன்
கட்டி அணைத்து என் கவிதை நிறுத்து
வந்துட்டாங்கய்யா பால்வெளிக் கவிஞர் வைரமுத்துவுக்கே போட்டியா…
— “காதல்”
காதல் விதை விதைக்கப்பட்டிருந்தால்
தவிர்த்திருந்திருக்கலாம்
காதல் மரமே நடப்பட்டபோது
நெஞ்சம் கொஞ்சம்
மிரண்டுதான் போனது!
அ·றிணைகளுக்கு
உயர்திணைகளின்
அவஸ்தை புரியாதோ?
— “குற்றச்சாட்டுகள்”
நெஜமாவெ முடியலடே…
இருபதில் இதழ் சுவைத்தபோது
இதயத்துள் மோகம் இருந்தது
முப்பதில் முயங்கியபோது…
நாற்பதின் நகக்கீறல்களில்…
ஐம்பதில் ஆசைகொண்டபோது…
அறுபதில்…
அப்பல்லாம் என்னாச்சுன்னு தெரியணுமா? அதுக்கு “அந்தி” கவிதை படிக்கணும். ஃஃஃஃ
காமம் தொலைத்தலினும்
எளிதும்
இனிதும்
உயிர்தொலைத்தல்
— “காமம்”
டீலா நோ டீலா…
எந்தவித முகாந்தரமுமில்லாமல்
காரணங்களைத் தேடிச் சொல்லி
விலகிய நாளிலும்
உள்ளங்கையில் உடல்வாசம் இருந்தது
— ‘மீண்டுமொரு கனத்த இரவு”
இப்பல்லாம் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கற பெர்ஃப்யூமே அரைமணி நேரத்துக்கு மேல தாண்ட மாட்டேங்குது!
கடுகினுள்ளே
மோகத்தின் முத்தம் முடிந்து
காமத்தின் யுத்தம் கழிந்து
ஞான வெடிப்பு
கருத்து விளைச்சல்
— “ஞானம்”
பழம் நீயப்பா!….
செய்வினைக்கே தகர்ந்தேனெனில்
செய்யப்பாட்டு வினையில்..?
— “முத்தம்”
கடைசியா சொல்ல விரும்பிக்கறேன். நம்ப பால்வெளிக் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்துக்கு பாட்டு எழுதவிட்டுத்தான் தமிழ்கூறும் நல்லுலகுக்கே “இரட்டைக்கிளவி” இலக்கணக் குறிப்பு புரிஞ்சதாம். அதுமாதிரி செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் தெரிஞ்சுக்க விரும்பினா, (மரத்தடி மக்கள் எல்லாம் ஏற்கனவே படிச்சு பாஸாயிட்டங்க!) “முத்தம்” கவிதையைப் படிச்சே ஆகணும்.
இன்னும், பாத்ரூம் கண்ணாடில வெந்நீர்பட்டு ஆவிபடிஞ்சா என்ன செய்யணும்? லேருந்து,
“புணரும் நாயை பொழுதுபோகாத சிறுவன் இன்னிக்கு மட்டும் ஏன் கல்லால அடிக்கலை?” …
“மூக்கு நுனில ஈ எப்ப எங்க என்னிக்கி வந்து உக்கார்ந்துச்சு; அப்றம் என்னாச்சு” … வரைக்கும் பல விஷயங்களுக்கு பதில்தெரிய நீங்க செய்யவேண்டியதெல்லாம் இதுதான்!
- A. காதல் வந்ததும் இவிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதக் கிளம்பிடறாய்ங்களா
- B. கவிதை எழுதக் கிளம்பினதும் இப்படி காதல் காஜல்னு ஒளற ஆரம்பிக்கறாங்களா
உங்க சரியான பதிலை [trunkbox (ஸ்பேஸ்) A(அல்லது B) (ஸ்பேஸ்)உங்கள் பெயர்] எழுதி haranprasanna at gmail dot com க்கு அனுப்புங்க அல்லது sms பண்ணுங்க.சரியான விடை எழுதறவங்கள்ல 10 பேருக்கு குலுக்கல் முறைல இவரோட “ட்ரங்க்பெட்டி கவிதைகள்” மின்னூலை அனுப்பிவைப்பாங்க.
குலுக்கல்ல தேர்ந்தெடுக்கப்படாத 99990 பேர் கவலைப்படாதீங்க. Vasan Eye Care மாதிரி, “நாங்க இருக்கோம்.” (மெயில், Buzz, facebook, orkut, twitter எல்லா வண்டிலயும் ஏத்தி அனுப்பிடமாட்டமா?)
இப்படிக்கு,
கவித்தொலைவி
மார்க்கெடிங் டேமேஜர் ஆஃப் மார்க்கெடிங் மேனேஜர்.
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 12:23 பிப
எ.அ.பாலா மாதிரி முதல் மறுமொழி என்னுடையது:
நேற்று Buzzல் கவிதை எழுதியதன்மூலம் பால்வெளிக் கவிஞரைச் சீண்டி, சிவனே’ என்று இருந்த என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும் ஓராயிரம் மிருகங்களை (வாயில்லா ஜீவன்களை) இடறிவிட்டதால் இன்று இவற்றை எல்லாம் தோண்டி எடுத்துத் தூர்வார வேண்டியதாகிவிட்டது. மறந்துபோயிருந்த இந்த வலைப்பக்கத்தின் கடவுச்சொல்லை நினைவுப்படுத்தி, இவர்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றவேண்டியதாகிவிட்டது.
அடக்கமா இருங்க; என்னையும் அடங்கியிருக்க விடுங்கன்னா கேட்டாதானே?
புதன், மே 12, 2010 at 3:20 பிப
hi jeyashri. this is again rajesh from thirali.kova padathinga.tamila ezhutharangannu santhosa padunga.
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 12:30 பிப
:)))
//நேற்று Buzzல் கவிதை எழுதியதன்மூலம் பால்வெளிக் கவிஞரைச் சீண்டி, சிவனே’ என்று இருந்த என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும் ஓராயிரம் மிருகங்களை (வாயில்லா ஜீவன்களை) இடறிவிட்டதால் இன்று இவற்றை எல்லாம் தோண்டி எடுத்துத் தூர்வார வேண்டியதாகிவிட்டது//
ஒரு கவிதை படித்ததற்கே இப்படியென்றால்…! 🙂
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 2:16 பிப
Welcome back JG!
ஆமா நீங்க என்ன சொல்ல வரீங்க?
சண்டை உங்களுக்கும் ஹரனுக்குமா?
உங்களுக்கும் மீரானுக்குமா?
உங்களுக்கும எங்களுக்குமா?
அல்லது
உங்களுக்கும் உங்களுக்குமேவா?
ஒரு வருஷம் கழிச்சு திரும்பி வரீங்க!
நல்ல(!) நாளில் வரீங்க!
நளினமான கோலம் போல வருவீங்கன்னு பாத்தா,நளினி கோலங்களில் வந்தாப்போல வரீங்களே! நியாமா மா?
ஆனா போய்டாதீங்க please!
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 3:32 பிப
எனக்கு கவிதை எழுத வரவில்லையே எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.. நல்லவேளை கவிதை எழுதலை.. எழுதியிருந்தா இந்நேரம் என்ன ஆயிருக்கும்.. நெனச்சாலே கொலை நடுங்குது. நீங்க டேமேஜர் இல்ல.. டோட்டல் டேமேஜர்..
என்னா கொலவெறி….
தெரியாத்தனமா மொதல் பாகத்தை படிச்சுட்டு வந்ததால பாதிப்பும், அதிர்ச்சியும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு..
உங்க பிசிராந்தையார் நட்பையும் இந்த சமயத்தில் நினைத்துக்கொள்கிறேன்…
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 4:27 பிப
ஹரன்பிரசன்னா, வைத்தகுறி தப்பவில்லை போலிருக்கிறதே. 😉 🙂 எப்படியோ அம்மணிக்கு கடவுச்சொல்லை நினைவுப்படுத்திய அந்தக் கவிதைக்கு நன்றி.
ஜெஸ்ரீ, மேலே இருக்கும் கவிதைகள் நீங்களே எழுதியவையா அல்லது உண்மையிலேயே ஹரன்பிரசன்னா எழுதியவையா? நம்பவே முடியவில்லை.
இன்றைய காலை எதிர்பாராமல் நல்ல துவக்கம். நன்றி. தயவுசெய்து தொடர்ந்து எதையாவது எழுதிக்கொண்டிருக்கவும்.
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 6:02 பிப
:))
”சமகால இலக்கியம்”னு போட்டுட்டு, கடந்தகால மூட்டை முடிச்சு எல்லாம் அவிழ்த்து விடுறீங்களே!
சரி.நிழல்கள் புத்தகத்துக்கு செம விளம்பரம் தான்.
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 6:46 பிப
இதுக்குபேர்தான் பின்நவீனதத்துவ விமர்சனமோ?இதுக்குமேல ஒண்ணும் எழுத முடியாது ஏன்னா எனக்கும் கவிதைக்கும் ,சிந்து பைரவி சுலஷ்னாக்கும்
சங்கீதத்துக்கும் உள்ள பந்தம்.:)-
விஷியத்துக்கு வருவோம்!
உங்களுடைய ப்ளாக்குக்கு எப்படி வந்தேன்னு கேட்டா அது ஒரு பெரி…..ய்ய கத.சுருக்கமா சொல்றன்,ஒருவாட்டி “சார்” சிறுகதைள்னு கூகுள்ல தேடினப்போ நெறய சைட்ஸ் வந்துது.அதுல தேசிகன் ப்ளாக் போய்,பிறகு எ.பாலா..இட்லி வடை அப்பிடீனு நெறய படிக்க ஆரம்பிச்சேன்.எ.பலாவை படிக்கும்போதெல்லாம் சைட்ல ‘தாளிக்கும் ஓசை’னு ஒரு ப்ளாக் வரும்.அப்போதெல்லாம் “அதான் பேர்ல்ல்யே இருக்கே! இதுங்கெல்லாம் என்ன எழுத போர்து. மிஞ்சி போனா சாத்துந்து பொடி இல்ல கொழம்பு பொடி.அப்பா இந்த லேடிஸ் இம்சை நெட்ல கூட தாளலப்பா அப்டின்னு நென்ச்சுண்டேன்”
அப்புறம் ஒரு நாள் பருப்பொடி பண்ண்லானு உங்க ப்ளாக் வந்து ரெசிப்பி பாத்து பண்ணேன்.(பரவால்ல சுமரா இருந்தது! பெஸ்ட் காஞ்சசிபுரம் ரமாஸ் க்ஃபெ பருப்புப்பொடி)ஒருநா வத்த கொழ்ம்பு பண்னணா ப்ச்!! சரியில்லை (அமாம் நீங்க சொல்ற அளவெல்லாம் எத்தன பேருக்கு??!!)
அப்றம் திடீர்னு (எப்பிடீனு தெர்ல்!!) உங்களோட ஸ்ரீரங்கம் பயணக்கட்டுரை படித்து ,ஆஹா இங்க கொஞ்சம் சரக்கு இருக்குதுபான்னு நெனச்சேன்.எல்லா பதிவையும் படித்தேன்.அதுவும் ‘சார’பத்தின ஒரு பதிவு… படிக்குபோதெல்லாம் கண்ல் தன்ணியா வரும்.
எனக்கு உங்க்ள,தேசிகன்,பலா ,ஹரன்..எல்லோரையும் பாக்கும்போது(எழுத்து மூலமாக!) பொறமையாக உள்ளது! சார ப்த்தி எழுதிக்கொண்டிருந்தால் என்னால் இந்த பின்னூட்டத்தை முடிக்கவே முடியாது!
பைதவே சாரின் “பதவிக்காக”நேற்றுதான் படித்து முடித்தேன்.(உங்கள் ஹீரோ தன்ரஜா?)
சில கேல்விகள்
1.எல்லா ரெசிப்பிலியும் தேங்கா ஏன்?(ஸ்ரீரங்கம் வீட்டீல் தென்னமரம் ஜாஸ்தியோ?
2.ஸ்ரீரங்கத்தில் ‘ரங்கு க்டைக்கு ப்க்கத்து வீடா உங்க்கள் வீடூ?(எழுத்தில் அவ்வளவு நகைச்சுவை)
சில சஜஷன்ஸ்
வெண்பொங்கல் செய்யும்போது சிரிது பாலையும் சேர்க்கவும்
தத்யோனத்திற்கு தாளிக்கும்போது சிரிது பெருங்காயம் சேர்கவும்.
LAST BUT NOT LEAST
YOUR DAUGHTER IS SO CUTE!! குட்டிக்கண்ணன்! அவ்ளோ சமுத்து .என் அண்ணா பெண் போல
பி.கு:நான் எழுத்தாளன் இல்லை.ஒரு சாதரண வாசகன்.எழுத்திலோ ,நடையிலோ பிழையிருந்தால் ஜஸ்ட் இக்னோரிட்
நன்றி
சத்தீஷ்
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 6:58 பிப
வாங்க.. யார் தூங்கற மிருகத்தை எழுப்பி இருந்தாலும் மகிழ்ச்சி..அப்போ அப்போ இவங்களை சீண்டி விடுங்கப்பா.. கவுஞர்களா..
Welcome Back..
..Ag
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 9:03 பிப
//Jayashree Govindarajan சொல்கிறார்:
ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 14, 2010 at 12:23 பிற்பகல்
எ.அ.பாலா மாதிரி முதல் மறுமொழி என்னுடையது//
எதுக்கு பாலாவை வம்புக்கு இழுக்கிறீர்கள்?
ஜெ
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010 at 10:29 பிப
அன்புள்ள கவித்தொலைவி,
”குளிர் தொல்லை தாங்கவே முடியவே இல்லை எனினும் மிதமான வெயிலுடன் சுகமாகத் துவங்கிய ஒரு ஞாயிறு காலையில் உங்கள் மீள் பிரசுர அவதானிப்பு கண்டேன். இடறி விட்ட ஜீவன்களையும் தோண்டி எடுத்துத் தூர்வாரிய கவிதைகளையும் கண்டு கண்ணோரம் பனித்தேன், காதலில் நனைந்தேன், காணாமல் போனேன், கரை சேர்ந்தேன்”னெல்லாம் பீலா விடுவேன்னு நினைக்காதீங்க. அதெல்லாம் ரீல்.
கும்பகர்ணி திடீர்னு எழுந்து எழுத ஆரம்பிச்சதும் சந்தோஷம் தாங்கலை எனக்கு!
திங்கள், பிப்ரவரி 15, 2010 at 8:10 முப
கவியுள்ளம் கொண்டவர்கள்தான் கவியை ரசிப்பார்கள், கவியின் கவியையும் ரசிப்பார்கள்; கவிக்கும், அவன் கவிக்குமான காதலையும் உணர்வார்கள்.
மற்றோர் இப்படித்தான் திறனாய்வு (திறன் இருக்கிறதா என்ற ஆய்வு) செய்து வீணாகப் போவார்கள்.
பிகு: கவி என்பதற்கு குற்றாலக்குறவஞ்சி வான்கவிகள் என்ற அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்.
திங்கள், பிப்ரவரி 15, 2010 at 10:40 முப
//கும்பகர்ணி திடீர்னு எழுந்து எழுத ஆரம்பிச்சதும் சந்தோஷம் தாங்கலை எனக்கு!//
அதே அதே! :))))
//தெரியாத்தனமா மொதல் பாகத்தை படிச்சுட்டு வந்ததால பாதிப்பும், அதிர்ச்சியும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு..//
ஹாஹா.. என்ன கொடும சரவணா, இவ்ளோ அப்பாவியா கூட ஆளுங்க இருக்காங்களா இன்னும்..
ரொம்ப ரொம்ப தயை கூர்ந்து தொடர்ந்து எழுதுங்க ஜெ.
திங்கள், பிப்ரவரி 15, 2010 at 7:26 பிப
தாங்கலை… கவிதை, விமர்சனம் என்ற பெயரில் போட்ட கொத்து பரோட்டா இரண்டும்தான்.
செவ்வாய், பிப்ரவரி 16, 2010 at 8:35 முப
வலைஞன்,
///
சண்டை உங்களுக்கும் ஹரனுக்குமா?
உங்களுக்கும் மீரானுக்குமா?
உங்களுக்கும எங்களுக்குமா?
அல்லது
உங்களுக்கும் உங்களுக்குமேவா?
////
அதுல எதுவுமே இல்லை. எனக்கும் கூகுளுக்கும் இடையே தான் சண்டை.
நான்பாட்டுக்கு மெயில்பெட்டியைத் திறந்தா Buzz ங்கற பேர்ல என்னைக் கேக்காம இவங்க கவிதை எல்லாம் கொண்டுவந்து கொட்டிகிட்டிருந்தா?
“எலே, பொட்டியைத் திறந்தது தப்பா?”ன்னு முழிச்சுகிட்டிருக்காம என்னை மாதிரி நிறைய பிடாரிகள் சண்டைக்குக் கிளம்பியிருப்பாங்க போல. கூகுள் திருந்திடுச்சு. http://searchengineland.com/google-apologizes-continues-to-tweak-buzz-36195
இனிமே தீதும் நன்றும் பிறர் தர வாரா. 🙂 எல்லாம் நம்ப கண்ட்ரோல்தான்.
நமக்கெலாம் கூகுள் இருந்துகிட்டே இருக்கணும்; ஆனா அதை நாம திட்டிகிட்டேயிருக்கணும் (மாமியார் மருமகள் மாதிரி) போலிருக்கு. அடுத்தபதிவும் கூகுள்பத்தியே எழுதவேண்டியிருக்கு. 😦
செவ்வாய், பிப்ரவரி 16, 2010 at 10:15 பிப
உங்களுக்கு கவிதை என்றால் அலர்ஜியா?
கவிதை பிடிக்காத கவிதையை நான் இப்பொழுதுதான் கண்டேன்!
(ஐயோ! நானும் ஒருவருஷம் எஸ்கேப்!!)
செவ்வாய், பிப்ரவரி 16, 2010 at 8:49 முப
ஜெகு: எ.அ.பாலா ஸ்டைல பின்பற்றினா வம்புக்கு இழுக்கறதா அர்த்தமா? நீங்க எல்லாம் கவிதைங்கற பேர்ல எதை எழுதினாலும் ஒன்னும் சொல்லமாட்டேன் தம்பி. தான் இவ்ளோ மட்டமா எழுதி, அதை எல்லாம் மறைச்சுவெச்சுட்டு, அடுத்தவங்களுக்கு சான்றிதழ் தர தாசில்தார்களோடதான் நமக்குப் பிரச்சினை.
vijayram: இப்படி எல்லாம் இவங்க காலை வார, கற்பனையா கூட என்னால எழுதமுடியாது. அக்மார்க் ஹரன்பிரசன்னா எழுதினதே. மரத்தடி மாஃபியா கூட்டம் யாராவது வந்து சாட்சிக் கையெழுத்துப் போடுங்கப்பா!
Prakash: நான் உயிரோட இருக்கும்போது எழுதப்படற எல்லாமே எனக்கு சமகால இலக்கியம்தான். இதை எல்லாம் படிச்சும் இன்னும் உயிரோட இருக்கேன் பாருன்னு அழுத்தமா சொல்ல வேண்டியிருக்கே! எந்த வைரஸையும் விட மோசமானது கவிதை வைரஸ்னு உங்களை மாதிரி டாக்டர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
LARam: தூங்கலை. வலைப்பதிவு மாதிரி கணினில என் அதிகமான நேரத்தை எடுக்கற விஷயங்கள்லேருந்து ஒதுங்கி இருக்கேன், அவ்ளோதான். பின்ன, உங்களை எல்லாம் படிக்க நேரம் எப்படிக் கிடைக்கும்?
சுரேஷ்: எனக்கு எப்பவுமே அந்த ஒரே அர்த்தம்தான்.
செவ்வாய், பிப்ரவரி 16, 2010 at 4:03 பிப
//எந்த வைரஸையும் விட மோசமானது கவிதை வைரஸ்னு உங்களை மாதிரி டாக்டர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை//
🙂
புதன், பிப்ரவரி 17, 2010 at 9:34 பிப
சத்தீஷ், சமையல் பதிவு எழுதுறவங்களுக்கு இதெல்லாம் எதுக்கு என்ற கேள்வியை நாசூக்காக பின் நவீனத்துவ பாணியில் கேட்ட உங்களைப் பாராட்டுகிறேன்.
வியாழன், பிப்ரவரி 18, 2010 at 12:28 பிப
ஹரன் சார்!
சமையலுக்கும் கவிதைக்கும் எதோ ஒரு பெரிய சண்டை இருக்கு ன்னு புரியுது
நீங்களாச்சும் சேரன் மாதிரி ஒரு flash back கொடுங்களேன் நாங்களும் ஒரு கால் கிலோ சந்தனத்த உடம்பிலே பூசிண்டு ஒரு நல்ல தீர்ப்பா சொல்றோம்
வியாழன், பிப்ரவரி 18, 2010 at 2:49 பிப
Jayshree,
Welcome back. Was waiting for ur post for very long time. Just came to know through idlyvadai that you are back 🙂 . Whatever please post on your favourite topic. looking forward for it. Thanks.
வியாழன், பிப்ரவரி 18, 2010 at 3:26 பிப
‘அப்படி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்”
– ஜெயஸ்ரீ – அந்த கோபத்திலும் உங்கள் தமிழ் flow வியக்க வைக்கிறது.
வியாழன், பிப்ரவரி 18, 2010 at 7:28 பிப
நான் என்ன செய்ய?
இப்ப நான் என்ன செய்ய?
வியாழன், பிப்ரவரி 18, 2010 at 10:44 பிப
// தான் இவ்ளோ மட்டமா எழுதி, அதை எல்லாம் மறைச்சுவெச்சுட்டு, அடுத்தவங்களுக்கு சான்றிதழ் தர தாசில்தார்களோடதான் நமக்குப் பிரச்சினை. //
🙂
வெள்ளி, பிப்ரவரி 19, 2010 at 9:58 முப
ஹரன் ப்ரசன்னாவின் வாக்குமூலம்:
“இந்தக் கவிதைத் தொகுப்பு வருவதற்கு உதவிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்”-
இது உங்களுடையது:
எல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதியே”
அதுக்கு அப்புறமும் நீங்க சொல்றது:
“தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை.”
இதெல்லாம் நியாயமுங்களா
செவ்வாய், பிப்ரவரி 23, 2010 at 5:03 பிப
vanthutangayyaa,,, vanthuntanga…
Why such a long hibenation. password i pachhai kuthi vaikavum…
welcome back…
புதன், பிப்ரவரி 24, 2010 at 3:07 முப
ஜெயஸ்ரீ –
வந்து வந்து பார்த்து கலைச்சு போயி விட்டுட்டேன் ஒரு அப்டேடும் இல்லைன்னு. இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷம். நிறுத்திடாதீங்க ப்ளீஸ்!
மணி
வியாழன், பிப்ரவரி 25, 2010 at 12:21 முப
WELCOME BACK AKKA
வியாழன், பிப்ரவரி 25, 2010 at 4:07 பிப
நீங்கள் திரும்பி வந்ததில் சந்தோசம் அக்கா
வெள்ளி, மார்ச் 5, 2010 at 2:29 பிப
கெடச்ச பெனால்டி கார்னர நல்லா யூஸ் பண்ணீட்டீங்க. பொங்கலுக்கே வெடி போடற ஆளு நீங்க, தீவாளின்னா கேட்கனுமா? செமையா தாளிச்சீடீங்க. இதுக்காகவாது ஹரன் நெறையா கவிதை எழுதனும்.
அடுத்த பதிவுக்கு வெய்டீஸ்.
அப்புறம் சதீஷ் பின்னூட்டத்தை நான் படிக்கவேயில்லை.
கேக்க மறந்துட்டேன், உங்க வீடு மராமத்து வேலை எல்லாம் முடிஞ்சதா? அந்த கேப்புல நான் புது வீடே வாங்கிட்டேன். 🙂
திங்கள், மார்ச் 22, 2010 at 7:21 முப
“அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே நண்பியே நண்பியே!”
திங்கள், ஏப்ரல் 5, 2010 at 5:33 முப
Welcome back.
வெள்ளி, மே 14, 2010 at 7:02 பிப
ஆயில்யன், ஒரு கவிதையானாலும் காதலர்களோட திருக்கவிதையை, தேசியகீதத்தை இல்ல, ஓட்டிட்டாங்க. அதான் ரொம்பக் கோவமாயிட்டு.
நடராஜன், கோபத்துலதான் எனக்கு தமிழ் தடையில்லாம வருமாக்கும். அத்தோட நாங்க ரோசாவசந்த், பெயரிலி எல்லாம் படிச்சு வளந்தவங்க. 🙂
ஐயப்ஸ், ஒன்னும் செய்ய வேணாம், மரத்தடி மாஃபியான்னு கூப்பிட்ட குரலுக்கு அட்டணன்ஸ் கொடுத்ததுக்கே நன்னி. அப்பொல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டோமில்ல, இவங்க கவிதை எல்லாம் படிச்சு விமர்சனம் செஞ்சுகிட்டு.. ஃஃஃ
PKS, 🙂 திரும்ப உங்க பதிவுல எழுதஆரம்பிச்சதுக்கு ஒரு WB.
ambi வாழ்த்துகள்.
venkat, மணி, காயத்ரி, மது, மானாஸாஜென், கிருஷ்ணன், நன்றி.