நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்
தேவையான பொருள்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் – 2
வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க: (வெறும் வாணலியில்)
காய்ந்த மிளகாய் – 6, 7
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீபூன்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
-
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
-
அடுப்பில், வாணலியில் நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
-
புளிநீர் ஒரு கொதி வந்ததும் அரைத்துவைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
-
மெலிதாக அரிந்துவைத்துள்ள வெங்காயத்தில் பாதியைப் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
-
மீதியிருக்கும் வெங்காயம், வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரத்தை மூடிவிட வேண்டும். [ 😦 எப்ப திறக்கலாம்னு ஜெயஸ்ரீ சொன்னதும்தான் திறக்க முடியும்.]
-
பத்து நிமிடங்கள் சூடான குழம்பில் வெங்காயம் ஊறியபின் திறந்து பரிமாறலாம். [டடண்டடண்டடாங்… திறந்தாச்சு! :)]
* வெங்காயத்தைப் பச்சையாகச் சேர்ப்பதுதான் இதில் சிறப்பு.
* வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டும். [வெல்ல டப்பா எங்கவெச்சேன்னு வழக்கம்போல மறந்துபோச்சு! :)]
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொங்கல், மற்றும் அரிசி உப்புமாவுக்கு நல்ல ஜோடி.
நீங்க சொன்னப்புறம் வலையில் மெந்திப் புலுசு ன்னு தேடி பாத்தேன். மீன் சேர்த்து செய்வதுதான் ஒரிஜினல் மெந்திப் புலுசு போல இருக்கு. இத நான் ஒரு potluck dinnerல பார்த்து, நல்லா இருந்ததால செய்முறை கேட்டு வாங்கினேன். இதோட பேர் வேற எதாவதாவும் இருக்கலாம்.
[அப்படி எல்லாம் விட்டுட முடியுமா ஜெயஸ்ரீ? உப்புச்சாரே, ‘கருவாடு மைனஸ்’ செஞ்சு அசத்தியிருக்கோம். இதுவும் மெந்தி புலுசு (மீன் மைனஸ்)ன்னு போர்டு வெச்சுடலாம். :)]
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 6:28 பிப
செஞ்சு பாத்தீங்களா? அரிசி இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்க்கலாம்.
எப்ப திறக்கலாம்னு ஜெயஸ்ரீ சொன்னதும்தான் திறக்க முடியும்.] – 🙂 🙂
தட்டுக்குக் கீழே பாத்திரம் இருக்கிற மாதிரியே தெரியலையே 🙂
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 6:29 பிப
ஒரு பின்னூட்டத்தையே ஒரு மொக்கை பதிவாக்கி (அதையும் செய்துகூட பார்க்காமல்) அதுக்கு அதைவிட மொக்கையா ஒரு படமும் போட்டு ஒப்பேத்தி….. தெய்வமே, எங்கயோ போய்ட்டீங்க(இவ்வரியை அபூர்வ சகோதரர்கள் படத்துல வரும் வசனத்தின் சந்தத்தில் படித்துக் கொள்ளவும்)
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 6:29 பிப
அதெல்லாம் இருக்கு ஜெயஸ்ரீ. நீங்க சொன்னதும் திறந்திடலாம். 🙂
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 7:17 பிப
திறக்கலாம். உத்தரவு கொடுத்தாச்சு 🙂
குழம்பு set ஆக கொஞ்சம் நேரம் தேவை. வெங்காயத்தின் மணம் குணம் எல்லாம் சூடான குழம்பில் ஒன்றுவதற்காகத்தான் கொஞ்ச நேரம் மூடி வைப்பது.
உங்களுக்குத் தெரியாததா ? சூரியனுக்கே torch காமிக்க முடியுமா 🙂 ? சும்மா என் வாயைக் கிண்டி வேடிக்கை பாக்கிறீங்க 🙂
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 7:55 பிப
ஜெயஸ்ரீ,
அரை டீஸ்பூன் அரிசியே சரியா இருந்தது. பொடி ஊறி குழம்பு பின்னால சரியா இறுகிடுச்சு. காலைல அரிசி உப்புமாவோட மட்டுமில்லாம அல்லது அதைவிட இப்ப இரவு சாதம், கீரைக் கூட்டோட ரொம்ப நல்லா இருந்தது. நன்றி.
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 7:58 பிப
அடடா… உங்களைப் போய் தப்பா நினைச்சுட்டேனே ஜெயஸ்ரீ…. சாரிப்பா…
பி.கு: இனியேனும் மூடிய பாத்திரத்தை புகைப்படம் எடுப்பதானால் பக்கவாட்டிலிருந்து எடுக்கவும். இல்லை உயரம் அதிகமான பாத்திரமேனும் பயன்படுத்தவும்(ஐட்டம் ரொம்பக் கொஞ்சமா இருக்கா மாதிரி தெரிஞ்சாலும் பரவாயில்லை, காக்கா போல கல்லு போட்டு மேல கொண்டு வந்துக்கலாம் அப்புறமா 😉 )
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 7:59 பிப
லக்ஷ்மி,
//ஒரு பின்னூட்டத்தையே ஒரு மொக்கை பதிவாக்கி..//
செஞ்சு பாருங்க, மொக்கு மொக்குன்னு குடிப்பீங்க.
//(அதையும் செய்துகூட பார்க்காமல்)//
இதுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டீங்கன்னா என் ரசிகர்கள் நாளைக் காலைல டீக்குடிப்புப் போராட்டம் நடத்துவாங்க. 🙂
//அதுக்கு அதைவிட மொக்கையா ஒரு படமும் போட்டு ஒப்பேத்தி….//
அடுத்த படமாவது தேறுதா? சூடான புகையெல்லாம் விசிறி விசிறி கஷ்டப்பட்டு காலை அவசரத்துல எடுத்தேன். 😦 [அந்தக்கால தமிழ்படங்கள்ல ஹீரோ கீழ உட்கார்ந்து சாப்பிடும்போது ஹீரோயின் பரிமாறிட்டு விசிறுவாங்களே… அந்த சீன் எல்லாம் இப்ப இல்லவே இல்லை. இப்பல்லாம் என்ன படம் எடுக்கறாங்க?]
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 10:06 பிப
இப்போதான் அரிசி உப்புமாக்கு புதுசா ஏதாவது சைட் டிஷ் செய்யலான்னு உங்க சைட்டுக்கு வந்தேன். மெந்தி புலுசு உடனே செஞ்சு பார்க்க போறேன். இரண்டு ஜெயஸ்ரீக்கும் நன்றி.
செவ்வாய், பிப்ரவரி 19, 2008 at 10:22 பிப
//இதுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டீங்கன்னா என் ரசிகர்கள் நாளைக் காலைல டீக்குடிப்புப் போராட்டம் நடத்துவாங்க. //
இன்னும் கேக்கலையா? நான் ப்ளாஸ்கில் டீ போட்டு ஆபீஸுக்கு எடுத்துட்டு வரவா வேண்டாமா?
//[அந்தக்கால தமிழ்படங்கள்ல ஹீரோ கீழ உட்கார்ந்து சாப்பிடும்போது ஹீரோயின் பரிமாறிட்டு விசிறுவாங்களே… அந்த சீன் எல்லாம் இப்ப இல்லவே இல்லை. இப்பல்லாம் என்ன படம் எடுக்கறாங்க?]//
இப்பல்லாம் அந்த மாதிரி சீன் வைச்சிட்டாலும்… அவ்வளவு தான் பெண்ணியம்னு சொல்லிட்டு உப்பு, புளி, பெருங்காயம் எல்லாம் விக்க ஆரம்பிச்சிடுவாங்களே அதுக்கு பயந்து தான் அப்படி ஒரு சீன் வைப்பதில்லை என்று நான் நினைக்கிறேன் நீங்க?
புதன், பிப்ரவரி 20, 2008 at 4:06 பிப
This site is very much important for all bachlor boys / girls. I will share this link to all known people. Please keep cooking!!!!!!
புதன், பிப்ரவரி 20, 2008 at 5:12 பிப
//இன்னும் கேக்கலையா? நான் ப்ளாஸ்கில் டீ போட்டு ஆபீஸுக்கு எடுத்துட்டு வரவா வேண்டாமா?//
மோகனா, இப்படியெல்லாம் இடையில பூந்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. ஜெயஸ்ரீ தன்னோட டீக்குடிப்பு போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பின்னூட்டத்துக்கு ஒரு நிமிடம் முன்னதாவே நான் மன்னிப்புக் கேட்டாச்சு… அதுனால நோ டீக்குடிப்பு போராட்டம். சரியா? (நல்ல டீயா ஜெயஸ்ரீயே போட்டு அனுப்பி வைக்கறதா இருந்தா நானே கூட எனக்கு எதிரா டீக்குடிப்பு போராட்டம் நடத்தியிருப்பேனாக்கும் , ஹ்ம்ம்… ஒரு நல்ல சான்ஸ் போச். 😦 )
//இப்பல்லாம் அந்த மாதிரி சீன் வைச்சிட்டாலும்… // அது போன்ற சீன்லாம் இல்லைனு ரொம்ப வருத்தப்படாதீங்கப்பா. சீரியல் பக்கம் எட்டிப் பாத்தா எக்கச்சக்கமா இருக்கும். என்ன கொஞ்சம் இம்ப்ரூவ்டா, தலைவரை டைனிங்க் டேபிளில் உக்கார வச்சு பரிமாறுவது போல வேணும்னா மாறியிருக்கலாம். அத்தோட ஃபேன் வந்துட்டதால விசிறுதல் மலையேறிப் போயாச்சுப்பா..
ஜெயஸ்ரீ, ஒரு வேளை நாயகிகள் எல்லாம் சமைச்சதுமே ஆவி பறக்க அதை படம் பிடிச்சு ப்லாக்ல ஏத்திட்டு வந்து பரிமாறுவதால், பரிமாறும் போதெல்லாம் பின்னூட்டம் பத்தியே யோசிச்சுகிட்டிருப்பாங்களோ என்னவோ? அதுனால சாமர சர்வீஸ் கட்டாயிருக்கும் போல? 😉
புதன், பிப்ரவரி 20, 2008 at 9:17 பிப
//மோகனா, இப்படியெல்லாம் இடையில பூந்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. ஜெயஸ்ரீ தன்னோட டீக்குடிப்பு போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பின்னூட்டத்துக்கு ஒரு நிமிடம் முன்னதாவே நான் மன்னிப்புக் கேட்டாச்சு…//
அக்கன்,
ஜெயஸ்ரீ அக்கா எழுதினத சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன் நான். மன்னிப்பு கேட்டா தான் டீக்குடிப்பு போராட்டம். அப்ப யார் எனக்கு பார்சலில் டீ வாங்கி அனுப்புறது.
யாருமில்லைன்னா வேற வழி எங்கக்கா(சொந்த தான்)கிட்டத்தான் கேக்கணும். அவங்களும் ஹாஃப் கப் தான் தருவாங்களாயிருக்கும் :).
//சீரியல் பக்கம் எட்டிப் பாத்தா எக்கச்சக்கமா இருக்கும். //
இந்தக் கொடுமையெல்லாம் வேற நடக்குதா!?
😉
புதன், பிப்ரவரி 20, 2008 at 9:19 பிப
//ஜெயஸ்ரீ அக்கா எழுதினத சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன் நான். //
நீங்க, ஜெயஸ்ரீ அக்கா எழுதினத சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன்; நான்.
நிறுத்தற்குறிகள் சரியா? இது ஜெயஸ்ரீ அக்காவிற்கு
புதன், பிப்ரவரி 20, 2008 at 9:34 பிப
மோகன் தாஸ் தம்பி,
“நீங்க ஜெயஸ்ரீ அக்கா எழுதினத சரியா படிக்கலைன்னு நான் நினைக்கிறேன்”
நிறுத்தற்குறி பிரச்சினையே இல்லாம இது நல்லாப் புரியுமே. நான் இப்படி மெய்ப்பு நோக்கறேன்னு ஹரியண்ணாவை பாடாப் படுத்தும்போதெல்லாம் அவர் இதுதான் சுலபமான முறையா எனக்குச் சொல்லிக் கொடுத்தாரு.
அப்றம் அந்த விசிறிமேட்டர்.. “எதுக்கும்மா ஆண்ட்டி எல்லாம் அங்கிள் சாப்பிடும்போது ஜப்பனீஸ் மாதிரி அதை ஆட்றாங்க பழைய படத்துல எல்லாம்?” என் பொண்ணு 4 வருஷம் முன்னால கேட்ட சந்தேகம். அது இந்திய ஃபேன் அப்படின்னு அவளுக்கு அப்ப தெரியலை. எனக்கே அட ஆமாம் இந்த சீன் எல்லாம் இப்ப இல்லையேன்னு தோணிச்சு.
அவ சொல்ற இன்னொன்னு, “When two people are talking, you just wait for your turn!” அதனால ரெண்டுபேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு ஏதாவது சொல்ல இருந்தா அப்றம் சொல்றேன். :வம்பு: 🙂
[அதான் மக்கள் என் ரெசிபியைவிட, அதுக்கு வர பின்னூட்டங்கள் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. 😦 ]
புதன், பிப்ரவரி 20, 2008 at 10:05 பிப
//அப்றம் அந்த விசிறிமேட்டர்.. “எதுக்கும்மா ஆண்ட்டி எல்லாம் அங்கிள் சாப்பிடும்போது ஜப்பனீஸ் மாதிரி அதை ஆட்றாங்க பழைய படத்துல எல்லாம்?” என் பொண்ணு 4 வருஷம் முன்னால கேட்ட சந்தேகம். அது இந்திய ஃபேன் அப்படின்னு அவளுக்கு அப்ப தெரியலை. எனக்கே அட ஆமாம் இந்த சீன் எல்லாம் இப்ப இல்லையேன்னு தோணிச்சு.//
நீங்க பெண்ணியத்தை சப்போர்ட்டும் பண்ணாம் அப்போஸும் பண்ணாம் நியூட்ரல் ஜல்லி அடிக்கிறதை நான் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது 😀
//[அதான் மக்கள் என் ரெசிபியைவிட, அதுக்கு வர பின்னூட்டங்கள் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ]//
நானில்லை நானில்லை அதுக்கு காரணம். நமக்கு சுவையான பின்னூட்டங்கள் எல்லாம் போடத்தெரியாது. எல்லாம் பாகற்கா விஷயம் தான்.
வெறும் சமையலைப் பார்த்து மட்டும் என்ன செய்வது, எங்க வீட்டில்(அப்பா) எவ்வளவு தான் சாப்பிடும் பொழுது பேசக்கூடாதுன்னு தலையால அடிச்சிக்கிட்டாலும், நான், அக்கா, அம்மா பேசாத/சண்டை போடாத/வாக்குவாதம் செய்யாத நாட்கள் ரொம்ப கம்மியாதான் இருக்கும். அதுவும் இப்ப அப்படி சாப்பிடுற நாட்களே கம்மிங்கிறதால வாக்குவாதம் ரொம்ப பெரிசா இருக்கும். போதும் சுய சொறிதல்னு நினைக்கிறேன் அதுமாதிரி நீங்க என்ன சொன்னாலும் பின்னூட்டம் இப்படி வரத்தான் செய்யும். வாக்குவாதம் செய்றோங்கிறதுக்காக அம்மா சமைக்கிற சாப்பாடு நல்லாயில்லைன்னு ஆய்டுமா அதுமாதிரி தான்.(எப்படி முடிச்சிப்போட்டேன் பார்த்தீங்களா?)
வேண்டுமானால் ஒரு வெண்பா எழுதிப்பாருங்களேன் 🙂 இந்தப் பிரச்சனையே இருக்காது.
வியாழன், பிப்ரவரி 21, 2008 at 7:34 பிப
ஒஹோ… நாந்தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா. சரி, சொன்ன Sorry-ய வாபஸ் வாங்கிட்டா போச்சு. ஜெ, நீங்களும் உங்க அணுக்கத் தொண்டர்கள், உடன் பிறவா சகோதரர்கள் எல்லோரையும் போராட வேண்டாம்னு ஒரு அறிக்கை விட்டுருங்க. பாருங்க, மோகன் சொந்த அக்கா தரும் அரை கப் காபியையாவது குடிச்சு போராடியே தீருவேன்னு ஒத்தைக் கால்ல நிக்கராரு.
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 11:05 முப
//நீங்க பெண்ணியத்தை சப்போர்ட்டும் பண்ணாம் அப்போஸும் பண்ணாம் நியூட்ரல் ஜல்லி அடிக்கிறதை நான் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது//
மோகன்தாஸ் தம்பி,
இங்க பிரச்சினை என்னன்னா, ஒன்னு மக்கள் பெண்ணியவாதியா இருக்கணும். இல்லைன்னா அவன்/அவள் ஆணாதிக்கவாதியாத்தான் இருக்கணும்னு முடிவு கட்றது. இரண்டுக்கும் இடைப்பட்டு அந்தந்தப் பிரச்சினையை அவங்கவங்க சூழல் வெச்சு பாக்கறவங்க இருக்கக் கூடாதா? லக்ஷ்மியொட பெண்ணியக் கருத்துகளோட ஒத்துப்போற அளவுக்கு அரைபிளேடோட சில முகத்திலறைகிற கட்டுரைகளையும் நான் பார்க்கறேன். மறுப்புச் சொல்லமுடியாத இன்னொரு பக்கமும் இருக்கும்போது எப்படி வெறும் பெண்ணியம் மட்டும் பேசமுடியும்? உண்மையிலேயே இதுதான் சரி இது தவறுன்னு பொதுவான எந்தக் கருத்துலயும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை சம்பந்தப்பட்டவங்கதான் முடிவுசெய்ய முடியும். அதனால இதுல எல்லாம் எனக்கு கருத்தே இல்லை. 🙂 இதுக்கு நியூட்ரல் ஜல்லின்னு பேரா இருந்தா நான் ஜல்லி இல்லை, தார், சிமெண்ட் எல்லாம் போட்டு நியூட்ரல் ஹைவே ரோடே போடுவேன். யாரும் கேக்க முடியாது.
ஆனா அதைவிட முக்கியமா, சேட்டைக்கு பெண்ணியக் கருத்துகளை எதிர்க்கற இணைய ஆண்களை நான் ஆணாதிக்கவாதியா நினைக்கறதுமில்லை; இங்க புரட்சிகரமா பெண்ணியக் கருத்துகளை எழுதற ஆண்களை எல்லாம் அவங்க எழுத்தை மட்டும் வெச்சு முற்போக்குவாதியா முடிவுக்கு வரதுமில்லை. 🙂
விசிறிமேட்டருக்கு வருவோம். அது நிஜமாவே சும்மா டமாஷுக்கு எழுதினதுதான். இப்ப அதெல்லாம் இல்லாததுக்குக் காரணம், ஃபேன் வந்தது மட்டுமில்லை, குடும்பம் சின்ன வட்டமாகி, எல்லாரும் சேர்ந்தே சாப்பிடறதும்கூட. சமையல் நான் செஞ்சாலும் டைனிங் முன்/பின் வேலைகளை மூணுபேரும் சேர்ந்துதான் செய்வோம். அந்த அளவுக்கு எல்லாம் இல்லைன்னாலும் எனக்கு முந்தைய தலைமுறை– என் அம்மா/உறவினர் பெண்கள் யாரும்கூட இப்படி கணவனுக்கு விசிறிவிட்டு நான் சினிமா தவிர வேற எங்கயும் பார்த்ததே இல்லை. :))
குளிச்சு, தலைக்கு துண்டுகட்டி, புருஷனை காப்பியோட எழுப்பறது இன்னும்கூட சினிமா/டிவில ஓயலை. இணையத்துல யாராவது பெண்கள் அப்படி இருந்தீங்கன்னா சொல்லுங்கப்பா. :))) நம்ப வீட்டுல ரங்கமணி நீ ஒருநாள் அப்படி சீனாவது போடேன்னு சொல்லிகிட்டிருக்காரு, பாவம்.
எனக்கு நினைவுதெரிஞ்சு ஆனந்தம் படத்துல இப்படி தேவயானி அல்லது ஸ்ரீவித்யா விசுறராங்கன்னு நினைக்கறேன். தேவயானி மம்முட்டிக்கு கால்பிடிச்சுவிடற மாதிரி சீனை ரொம்ப அழகான எடிட்டிங்ல வெட்டி எடுத்ததுக்கு லிங்குசாமி அல்லது தேவயானியை(!) பாராட்டியே தீரணும்.
சரி போகட்டும், உங்கக்கா ஆசிப்புக்கு மட்டும்தான் அரைகப் காப்பிதருவாங்கன்னு நினைச்சேன். எல்லாருக்குமே அப்படித்தானா? பரவாயில்லை, நாங்க ‘ரிபீட்டேய்’ சொல்லி, ரெண்டுதடவையா குடிச்சுக்கறோம். 🙂
//வேண்டுமானால் ஒரு வெண்பா எழுதிப்பாருங்களேன்///
:)))) பா.ரா எனக்கும் ஒரு கட்டுரை எழுதுவாருன்னு நினைக்கறீங்களா? நான் மரபிலக்கியத்துல இருந்து, தேமா புளிமான்னு தளை பிரிக்கக் கத்துக்கும்போதே கடுப்பாகி எழுதிட்டாரு. நான் தான் அதுக்கெல்லாம் அடங்கலை, இளையராஜா மாதிரி. :)))
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 11:09 முப
Balaji, 🙂 நன்றி.
Uma Kumar, அரிசி உப்புமாவுக்கே இன்னொரு பதிவு எழுதவேண்டியது. தள்ளிப்போடுதல் ரொம்ப சுலபமா இருக்கு எனக்கு. 😦
லக்ஷ்மி, உங்க வாபஸ் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 12:40 பிப
பெண்ணீயம் என்றால் என்ன? சீரியசாய் கேட்கிறேன் (கொடுமை! மெந்தி புலுசுலா என்ன கேள்வி இது 🙂
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 2:07 பிப
கொடுமையோ கொடுமை. ஒரு எழுத்தாளினி கேட்கற கேள்வியா இது?! ஆமா, ஆணாதிக்கம்னா என்னன்னு தெரிஞ்சா முதல்ல சொல்லுங்க. 🙂
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 2:41 பிப
இப்ப I have to wait for my turn is it?
உஷா,
//பெண்ணீயம் என்றால் என்ன? சீரியசாய் கேட்கிறேன் //
ஜெயஸ்ரீ,
//ஆணாதிக்கம்னா என்னன்னு தெரிஞ்சா முதல்ல சொல்லுங்க. //
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 4:50 பிப
//ஆனா அதைவிட முக்கியமா, சேட்டைக்கு பெண்ணியக் கருத்துகளை எதிர்க்கற இணைய ஆண்களை நான் ஆணாதிக்கவாதியா நினைக்கறதுமில்லை; இங்க புரட்சிகரமா பெண்ணியக் கருத்துகளை எழுதற ஆண்களை எல்லாம் அவங்க எழுத்தை மட்டும் வெச்சு முற்போக்குவாதியா முடிவுக்கு வரதுமில்லை.//
இது சூப்பருங்கக்கோவ்….
வெள்ளி, பிப்ரவரி 22, 2008 at 7:38 பிப
//இதுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டீங்கன்னா என் ரசிகர்கள் நாளைக் காலைல டீக்குடிப்புப் போராட்டம் நடத்துவாங்க. //
//ஜெயஸ்ரீ தன்னோட டீக்குடிப்பு போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பின்னூட்டத்துக்கு ஒரு நிமிடம் முன்னதாவே நான் மன்னிப்புக் கேட்டாச்சு… அதுனால நோ டீக்குடிப்பு போராட்டம். சரியா?//
அறிவிப்புக்கு முன்னாலயே மன்னிப்பு கேட்டாச்சா, இல்லை அப்புறமான்னு எனக்கு இன்னும் சரியா புரியல. இருந்தாலும் மூணு நாளா (காரம், மணம் குணம் நிறைந்த இஞ்சி) டீ கப்பும் கையுமாத்தான் “தாளிக்கும் ஓசை” படிக்கிறேன் 🙂
சனி, பிப்ரவரி 23, 2008 at 10:43 முப
சிஸ், ஏழுத்தாளி என்றால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரியாய் இருக்க வேண்டுமா என்ன?
தாசு, பெண்ணீயம் என்றால்என்னவென்று விளக்கினால், அதற்கு எதிர்மறையாய் ஆணியம் என்று பொருள் கொள்ளலாம் இல்லையா?
பி.கு. சமையலுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள் இங்கு ஏன் என்று யாரும் கேள்வி கேட்டு விடாதீர்கள். இன்றைக்கு சமையலும்,
இலக்கிய கேட்டகிரியில் இடம் பெற்று விட்டது என்பதை இந்த வலைப்பதிவின் பதிவுகளிலும், பின்னுட்டங்களில் வருகை தரும் இலக்கியவாதிகளையும் காணலாம்- அட என்னை சொல்லிக்கவில்லை :-))
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 12:34 பிப
உஷா,
/////சிஸ், ஏழுத்தாளி என்றால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரியாய் இருக்க வேண்டுமா என்ன?//
எழுத்தாளி எல்லாம் தெரிந்த ஏகாம்பரியாய் இருக்க வேண்டியதில்லை. 🙂 இன்னிக்கு வந்த தினமணிச் செய்தி:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080225120934&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist
ஆனால் எழுத்தாளி சொன்னா அது சரியாத்தான் இருக்கும்; அல்லது எந்தப் பிரச்சினைக்கும், முக்கியமா பெண்ணியத்துக்கு எழுத்தாளிதான் பதில் வெச்சிருப்பாங்கற பொதுப்புத்தி கொஞ்சம் அலட்டல் மற்றும் கொஞ்சம் அபாயகரமானதும். அதைத் தான் நக்கலடிச்சிருக்கேன். உங்களை இல்லை.
///தாசு, பெண்ணீயம் என்றால்என்னவென்று விளக்கினால், அதற்கு எதிர்மறையாய் ஆணியம் என்று பொருள் கொள்ளலாம் இல்லையா?////
இது இன்னும் அபாயமானது. பெண்ணியத்துக்கு எதிர்மறையாவே ஆணியத்தை நினைச்சா, அல்லது ஆணியம் மட்டுமே பெண்ணியத்துக்குத் தடைன்னு நினைச்சா எந்த நாளும் போர் மட்டுமே செய்யமுடியும். சுயதணிக்கை தேவையே இல்லைன்னு நான் நினைக்கலை.
இணையத்துல இருக்கற இன்னொரு அபத்தம், தன் கருத்துகளை செம்மையா எழுதத் தெரியற ‘இலக்கியவாதி’களெல்லாம் பெண்ணியவாதிகள் மாதிரியும் அல்லது அங்கதான் பெண்ணியம் சார்ந்த பேச்சுகள் சரிமாதிரியும் இருக்கற பிம்பம். பெண்ணியம் எழுத்து சார்ந்த விஷயம் இல்லை; அந்தந்தப் பெண்ணோட தனிப்பட்ட சமுதாயப் பார்வை; ஓவ்வொரு தனிப்பட்ட பெண்ணும் தன் சூழலுக்கேற்ப எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் சார்ந்த விஷயம்; வாழ்க்கைமுறை. இங்க பொட்டி தட்ற எந்தப் பெண்களின் எழுத்தைவிடவும், எழுதப் படிக்கத் தெரியாத என் வீட்டு ‘முனியம்மா’வோட சமுதாய/குடும்ப அணுகுமுறைகள், தன்னம்பிக்கை அதிரடியா இருக்கு. என் ராயல் சல்யூட் அவளுக்கே சொந்தம்.
படிச்சிருந்தாலும் அதை எழுத்துல சொல்லாத் தெரியாத ஆனா நெஞ்சுறுதியான பெண்கள், தன் கருத்தை எழுத்து, பேச்சு எந்த வகையிலயும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத அல்லது இதுல எல்லாம் நம்பிக்கை இல்லாத, ஆனா பெண்ணையும் பெண்ணியத்தையும் சரியாப் புரிஞ்சுண்ட ‘ஜெண்டில்மேன்’களை அன்றாட வாழ்க்கைல சந்திச்சுகிட்டே இருக்கேன்.
அப்றம் அதென்ன சமையல்குறிப்பு பதிவுல இலக்கிய/பெண்ணியப் பேச்சான்னு கேக்காதீங்கன்னு நீங்களே சொல்றீங்க. இதுக்கெல்லாம் சமையல்கட்டைவிட சரியான இடம் வேற எது இருக்கமுடியும்? அல்லது இதெல்லாம் மட்டுமே எழுத்துல பேசற எந்தப் பெண், எழுதிமுடிச்சுட்டு சமையல்கட்டுல நுழையாம இருக்காங்க? எனக்கு இணையத்துல எழுதறதுல நம்பிக்கை இல்லை. மற்றபடி இது அவரவர் விருப்பம் சார்ந்தது மட்டுமே.
///சமையலும், இலக்கிய கேட்டகிரியில் இடம் பெற்று விட்டது என்பதை ////
இது புதுவிஷயம் இல்லை. இசை, இலக்கியம் ஆரம்பிச்சு எந்த நுண்கலை, கலைஞர்களோடயும்கூட உணவு முக்கிய விஷயமா இருந்தே வந்திருக்கு. எந்தத் தனிநபர், குழுமங்களோட ஆளுமையையும் சாப்பாட்டுரசனை தவிர்த்துப் பேசமுடியாது. 🙂
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 7:02 பிப
//இணையத்துல இருக்கற இன்னொரு அபத்தம், தன் கருத்துகளை செம்மையா எழுதத் தெரியற ‘இலக்கியவாதி’களெல்லாம் பெண்ணியவாதிகள் மாதிரியும் அல்லது அங்கதான் பெண்ணியம் சார்ந்த பேச்சுகள் சரிமாதிரியும் இருக்கற பிம்பம். பெண்ணியம் எழுத்து சார்ந்த விஷயம் இல்லை;//
அக்கா எனக்கு கண்ணுல த(க)ண்ணீர் கடகடவென்று கொட்டுகிறது.
இதுக்கு மேல சொல்ல எனக்கு எதுவும் இல்லை :))))