முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும் பொரியையும் நாங்களெல்லாம் உட்கார்ந்து நெல் இருந்தால் பொறுக்க வேண்டும். வீட்டிலேயே செய்வது மிக மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருந்தது. இதில் பாட்டியின் ஆசார கெடுபிடி வேறு. இப்போது கடைகளில் கிடைக்கும் பொரியை வாங்கிச் செய்தேன். அதிலும் ஓரளவு நம் திருப்திக்கு, நெல் கலந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.
தேவையான பொருள்கள்:
நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்
செய்முறை:
- நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
- பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
- பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
- கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
- 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
- பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
- ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.
கூம்பு:
என் பாட்டியெல்லாம் கையாலேயே முதலில் சாஸ்திரத்திற்கு இரண்டு கூம்பைப் பிடித்துவிடுவார்கள். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் கூம்பில் தான் செய்தேன்.
- கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
- சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
- கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
- இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.
வியாழன், நவம்பர் 22, 2007 at 10:56 பிப
ஜெயஸ்ரீ
ஊரில் இருக்கும் வரை (1981) அம்மாவுக்கு நான் தான் எல்லா உதவியும். ஹாஸ்டலுக்கு போனதுக்கு அப்புறம் கிட்டதட்ட ஒரு 25 வருடமா இதெல்லாம் விட்டு போச்சு. படமெல்லாம பார்த்தா பழைய ஞாபகம் வருது.
நிறைய விளக்கு (எல்லாம் வெண்கலம்) தேய்ப்போம். பாவை விளக்கு, சின்ன அகல் (108) அப்புறம் பெரிய குத்து விளக்கு புளி போட்டு தேக்கிறதே ஒரு 5 மணி வேலை. அழகா நிறைய வேலைப்பாட்டோடு கூடிய விளக்கு.அப்புறமா திரி போட்டு, எண்னெய் விட்டு அது ஒரு காலம்.
வெள்ளி, நவம்பர் 23, 2007 at 6:20 முப
ஜெயஸ்ரீ,
பட்சணங்களில் எனக்கு பிடித்ததே இந்த கார்த்திகை பொரிதான்.(செய்வது சுலபம்).உங்கள் ரிலையன்ஸ் பதிவையும் இப்போதான் படித்தேன். ஒரு ஷாப்பிங் அனுபவத்தை கூட இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா?. என் கணவரும் இதே போல் அடிக்கடி படித்துவார். அவங்க பொண்ணு (அதுவும் ஒரே பொண்ணுன்னா) அப்பாக்களுக்கு பொறுப்பு எங்கிருந்துதான் வருமோ?. மொத்ததில் படிக்க அருமையான கட்டுரை.
வெள்ளி, நவம்பர் 23, 2007 at 10:15 முப
//நெல்ப் பொரி – 3 கப்//
நெல்ப்பொரியா? அவ்ளோ அழுத்திப் பிடிக்கணுமா? ஒடஞ்சிடாது? நெற்பொரி இல்லையா? அல்லது நெல் பொரி இல்லையா?
லள வேற்றுமையிற் றடவும்னு எங்கயோ படிச்சது.
நான் காற்தடம்னு ஒரு கவிதைக்குப் பேர் வெச்சேன்! அது காற்றடம் அல்லது கால் தடம். இது இன்னும் கொஞ்சம் முன்னேற்றம், நெல்ப்பொரி.
நீங்க எழுதினா சரியா இருக்கும். கொஞ்சம் சரி பார்த்துடுங்க. 🙂
வெள்ளி, நவம்பர் 23, 2007 at 10:15 முப
Photo very nice.
வெள்ளி, நவம்பர் 23, 2007 at 10:29 முப
திருக்கார்த்திகை நாளைதான் நேற்றே ஜெயஸ்ரீயால் வந்து விட்டது. நான் இப்பவும் அவல் பொரியில் தான் பருப்புத் தேங்காய் பிடிப்பது. ஜெயஸ்ரீயைப்பர்த்து நெல் பொரியில் பிடிக்கப்போறேன்.
மும்பையில் போய் இப்படி நாலுநாளுக்கு முன்னால் அழகாக கார்திகை தீபத்துக்கு ஏற்பாடு பண்ணற உங்கள் பெண் ரொம்ப நல்ல இந்திய பெண்ணாக வருவாள் எதிர் காலத்தில்.அனுபவம் கண்ட உண்மை.
என் பெண் அப்படிதான் செய்கிறாள்.எல்லோரிடமும் மிக நல்ல பெயர் எடுத்திருக்கிறாள். முக்கியமாக புகுந்த வீட்டுக்காரர்களிடம். நல்ல படிப்பும் படித்திருக்கிறாள்.பகுதிநேர வேலையும் செய்கிறாள்.
எந்த தேசமானாலும் கிடைப்பதை வைத்து மிக நன்றாக இந்த பன்டிகைகளைக் கொன்டாடிவிடுவாள்.என்பதிவுக்கு நீங்கள் வருவதே இல்லையோ?
வந்து கருத்துக்களை பறிமாரிக்கொள்ளவும்.
அன்புடன்
கமலா
வெள்ளி, நவம்பர் 23, 2007 at 11:43 முப
எனக்கு ரெம்ப நாளாஆஆஆஅ ஒரு டவுட்டு.. விடாம சீசனுக்கு ஏத்தாப்பல எல்லா ஐட்டத்தையும் போட்டுத் தாக்கறீங்க… அடுத்த சீசனுக்கு என்ன செய்வீங்க? மறு ஒளிபரப்பா?
இந்த மாதிரி கேக்கறதுகுன்னே ரூம் போட்டு உக்காந்து யோசிப்பம்ல..
வெள்ளி, நவம்பர் 23, 2007 at 12:48 பிப
Dear jayashri,
I am ramakannan from mysore. I saw ur karthigai pori making and i saw ur all receipies{including reliance but i dont have time to read full of that reliance} today i plan to make rasagulla because my daughter told me today evening when i am coming from the school i need so 2 hours back i made that malai. So after lunch i ill finish rasamalai making but continue ur receipe and please this publish this mail . I ill see in the evening.HAPPY KARTHIGAI FOR U ur friend Ramakannan
திங்கள், நவம்பர் 26, 2007 at 10:39 முப
பத்மா, முக்கியமா யானை விளக்கை விட்டுட்டீங்க. முதல் விளக்கா அதைத்தான் நாங்க ஏத்துவோம். எப்படி இருந்தாலும் விளக்கு எங்கவீட்டுல ஒரு விசேஷப் பொருள். கார்த்திகை மற்றதை விட விசேஷப் பண்டிகை. தொடர்ந்து விளக்கு பூஜை செய்யவே பெண்குழந்தை வேணும்னு(எங்க வீட்டுல பெண்குழந்தை பிறக்கறதே அபூர்வம். பலருக்கு இல்லை,), விளக்கு பூஜை செய்வோம். 🙂
Uma Kumar, thanks. இவங்க பொறுப்பா இருக்கறதை யாரும் ஆட்சேபிக்கலை. நம்ப மேலயும் திணிக்கறது தான் எரிச்சல். எங்கம்மா வார்த்தைகள்லயே சொல்லணும்னா(பின்ன வரலாறைத் தானே திரும்பத் திரும்ப எழுதறோம்.), “இவங்கல்லாம் பெண்ணை கல்யாணம் செஞ்சுகொடுத்திட்டு வீட்டுக்கு வந்து தவிக்கணும். அதை நான் பாக்கணும்.” 🙂
ப்ரசன்னா, நெல்ப் பொரி தப்புதான். திருத்திட்டேன். ஆனா அதுக்காக இலக்கண சுத்தமா நெற்பொரின்னு எழுத முடியுமா? தோற்பைன்னு எழுதினா புரியாதவங்கள்லாம் இங்க இருக்கறதா வரலாறு சொல்லுதே. :))) ஏன் பிரச்சினைன்னு நெல் பொரி – ன்னே எழுதிட்டேன்.
ramakannan, நன்றி. நல்லா வந்ததுன்னு சொல்லியிருக்கீங்க. அதுக்கும் பாராட்டுகள். எல்லா கமெண்டுமே பப்ளிஷ் செய்வேன். 🙂
ப்ரகாஷ், இது சும்மா வலைப்பதிவுன்னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க, ஒரு த்ரில்லுக்காக ஆரம்பிச்ச பதிவு தான். இதை வருஷா வருஷத்துக்கும் இழுத்து எழுத அவசியம் இல்லை. என் திறமைக்கும் சோம்பேறித்தனத்துக்கும், இந்த ஒரு வருஷத்துல எல்லாப் பண்டிகையும் எழுதி முடிஞ்சிருந்தேன்னா அதுவே அதிகம் தான். அப்படியே கழண்டுக்க வேண்டியதுதான். ஆரம்பத் த்ரில் இல்லை. இணையம் ஏனோ அலுப்பா இருக்கு. அப்படியும் தொடர்ந்து இருந்தா நிச்சயம் மறு ஒளிபரப்பெல்லாம் நிச்சயம் செய்ய மாட்டேன். தாளிக்கும் ஓசை, சீசன் 2 க்கு வேற என்ன செய்யலாம்னு யோசிக்க நாங்களும் ரூம் போடவோமில்ல. 🙂
திங்கள், நவம்பர் 26, 2007 at 10:40 முப
kalyanakamala,
///என்பதிவுக்கு நீங்கள் வருவதே இல்லையோ?///
என்ன அப்படி சொல்றீங்க, உங்க ரெண்டு பதிவுமே feed ல வெச்சு தவறாம படிக்கறேன். முக்கியமா இணையத்துல பெருசு பெருசா மத்தவங்க சுழட்டி சுழட்டி எழுதற விஷயங்களைக் கூட weblogல சின்னச் சின்ன பதிவா சுருக்கமா நச்’னு சொல்றீங்க. ‘பசித்தவயிறு’ எல்லாம் அப்படி சொல்லவேண்டிய பதிவுகள். உங்க வயதும் அனுபவமும் முக்கிய காரணமா இருக்கலாம்.
ஆனா மன்னிக்கணும், நான் சமீப காலங்கள்ல எங்கயும் என் வலைப்பதிவு தவிர எழுதறதில்லை. ஏற்கனவே வேணது எழுதி முடிச்சுட்டேன். இந்த (புடலங்கா) கொள்கை, எனக்கு வேற சில பிரச்சினைகளுக்கு வசதியா இருக்கு. மறந்துபோய் எழுதினாலும் இதோ இப்ப பிரகாஷ்ராஜ் ரசிகர் சண்டைக்கு வரமாதிரி பிரச்சினை ஆகும். :))
தமிழ்சினிமா சமூகத்துக்கு எதைப் பரப்புதுன்னு தெரியலை. ஆனா என் உணர்வை எல்லாம் மாத்தறதில்லை. இப்பல்லாம் சினிமா பாக்கறதே அதோட பங்களிப்பாளர்கள் (கதை, வசனம், பாடல்கள், காஸ்ட்யூம், நடனம், டைரக்ஷன், இசை இப்படி..) தனிமனிதர்களின் திறமையை, வளர்ச்சியை நான் எடை போட மட்டும் தான். தனிப்பட என் உணர்வு எதையும் அது மாத்த முடியாத அளவு நான் வளர்ந்துட்டேன்.
திங்கள், நவம்பர் 26, 2007 at 10:42 முப
kalyanakamala,
முக்கியமா சொல்ல வந்தது விட்டுடப் போகுது. உங்க பின்னூட்டம் படிச்சு ஆடிப் போயிட்டேன். பின்ன? யாரை யாரோட கம்பேர் பண்ணியிருக்கீங்க. 🙂
///என் பெண் அப்படிதான் செய்கிறாள். எல்லோரிடமும் மிக நல்ல பெயர் எடுத்திருக்கிறாள்.///
எதுவா இருந்தாலும் என்னைப் பத்தி இணையத்துல தீர விசாரிச்சுட்டு எழுதுங்க. 🙂
///முக்கியமாக புகுந்த வீட்டுக்காரர்களிடம்.///
உங்க பெண்ணுக்கு என் வாழ்த்துகள். நான் அந்த “பாக்யத்தை” எங்கம்மாவுக்குக் கொடுக்கலை. :))) இனி கொடுப்பேன்னு நம்பிக்கையும் இல்லை. ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து எழுதியிருக்கீங்க உங்க பெண்ணைப் பத்தி. என் அம்மாவைப் பொருத்த வரை முதலும் கடைசியுமா ஈன்ற பொழுது உவந்ததோட சரி, (அவ்ளோ உதைப்பேனாம் வயித்துல) அப்றம் உவக்கவே முடியலைன்னு அவங்களே சொல்வாங்க. (எங்கம்மாவை உடனே பாக்கணும்போல இருக்கு.)
நான் அஞ்சாவது படிக்கும்போது எங்கவீதில 2 வது படிக்கற ஒரு பையன் ஸ்கூல்லேருந்து கத்திகிட்டே ஓடிவந்தான். “அப்பாஆஆ வாத்யார் ரமேஷுக்கு மட்டும் சிலேட்ல 92 மார்க் போட்டிருக்காரு. எனக்கு 30 தான் போட்டிருக்கார். நீ வந்து சொல்லுப்பா ஸ்கூல்ல” :)) அதுக்கு அடுத்த வருஷமும் நாங்களெல்லாம் வழில மடக்கிக் கூப்பிட்டு கிண்டல் செஞ்சா, “நான் என்ன வாங்க மாட்டேன்னா சொல்றேன். எங்க வாத்யார் போட்டாத்தானே?!” ன்னு சிரிக்காம சீரியஸா பதில் சொல்வான், பாவம். வாஸ்தவம் தானே.
நானும் எங்க அம்மாகிட்ட அப்படியேதான் சொல்லிகிட்டிருக்கேன். :))) ஆமாம், பண்டிகைக்குப் பண்டிகை அதையே காரணமா வெச்சு பட்சணம் செஞ்சு நான் சாப்பிட்டா மாமியார் வீட்டுல பாராட்டுவாங்களா? யார் சொன்னாங்க? அதெல்லாம் வேற கணக்கு kalyanakamala. எனக்கு வராது. ஆனா என் பெண்ணுக்கு நீங்க சொல்லியிருக்கறதை மட்டும் ஒரு ஆசியா எடுத்துக்கறேன். நன்றி.
திங்கள், நவம்பர் 26, 2007 at 8:48 பிப
மிக்க நன்றி ஜெயஸ்ரீ!
“உங்க பெண்ணுக்கு என் வாழ்த்துகள். நான் அந்த “பாக்யத்தை” எங்கம்மாவுக்குக் கொடுக்கலை. :))) இனி கொடுப்பேன்னு நம்பிக்கையும் இல்லை. ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து எழுதியிருக்கீங்க உங்க பெண்ணைப் பத்தி. ”
ஜெயஸ்ரீ………. நீங்க சொல்வது போல் பையன்*வத்தியார் மார்க்கு கதை உங்கள் வாழ்க்கையில் நடந்தால் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
காலம் பாடம் கற்றுத்தந்து ஒருவர் புரிந்து கொள்ளும்போது மிகவும் late ஆகிவிடுகிறது…………என்ன செய்வது?
anyway வாழ்த்துக்கள்.
கமலா
புதன், நவம்பர் 28, 2007 at 11:07 முப
kalyanakamala, நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே. 😦
வெள்ளி, நவம்பர் 30, 2007 at 11:12 பிப
“ஆமாம், பண்டிகைக்குப் பண்டிகை அதையே காரணமா வெச்சு பட்சணம் செஞ்சு நான் சாப்பிட்டா மாமியார் வீட்டுல பாராட்டுவாங்களா? யார் சொன்னாங்க? அதெல்லாம் வேற கணக்கு kalyanakamala. எனக்கு வராது”
when they realise your talents one day and want to eat your preperations they will become old and cant enjoy them. thats what i meant.
kamala
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 9:41 முப
kalyanakamala, அதெல்லாம் யாரும் எதையும் மிஸ் பண்ண மாட்டாங்க. எங்க மாமியார் அபாரமா சமைப்பாங்க. எப்ப வீட்டுக்குப் போனாலும் படு சுத்தமா வெச்சிருப்பாங்க வீட்டை. அதனால சமைச்சுப் போட்டுத் தான் நல்லபேர் வாங்கணும்னு எதுவும் இல்லை. நல்லபேர் வாங்க சமையல் ஒரு முக்கிய காரணியும் இல்லை. அது தெரியலைன்னாலும் தன் மருமகளைப் புகழறவங்களையும் நான் நிறைய பாத்திருக்கேன். அதனால தான் சொன்னேன், அது வேற ஃபார்முலா. 🙂
சனி, ஒக்ரோபர் 30, 2010 at 2:29 பிப
[…] காய் பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் […]
ஞாயிறு, நவம்பர் 21, 2010 at 10:37 பிப
Hi Jayashri,
Nethu naan ungaloda thavalai adai(1) panninen..
Innaiku Karthigai ku unga recipie paathu naan pori urundai panninen. en amma ennai paarati thallitaanga.. all credit goes to u..
Thanks a lot for ur recipies.. office illadha weekends ungaloda recipies ovvana try pannalam nu iruken.. naalaiku “Asoka” pannalam plan.. pannitu ungaluku solren 🙂
செவ்வாய், நவம்பர் 23, 2010 at 9:43 முப
Good Boy! 🙂
வியாழன், ஓகஸ்ட் 18, 2011 at 8:25 முப
[…] காய் (கூம்பு) பிடிக்க நினப்பவர்கள் இங்கே சொல்லியிருப்பதைப் போல் இந்தக் கலவையிலும் காய் […]