தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
தேங்காய் எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைச் சூடு வர சற்று வறுத்துக் கொண்டு, சூடு ஆறியபின் நன்றாகக் களைந்து, நீரை வடியவைத்து பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (வறுத்த அரிசி அதிகமாக ஊறக் கூடாது.)
  • உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.
  • காயம், உப்பு, இவைகளைக் கரைத்துவிட்டு, வெண்ணை, சீரகத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும்.
  • கையில் சிறு உருண்டையாக எடுத்து மெதுவாக முறுக்குகளாகச் சுற்றி(ஞே!), எண்ணெயில் நிதானமான சூட்டில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.

* தண்ணீர் விட்டுப் பிசைந்த மாவு அதிக நேரம் இருந்தால் மாவு புளித்து, முறுக்கு சிவக்க ஆரம்பித்துவிடும். எனவே 2 கப் மாவிற்கு மேல் முறுக்கு தேவைப்பட்டால் 2, 3 தடவையாகப் பிசைந்து கொள்ளவும்.

* சீரகத்திற்குப் பதில் கருப்பு எள்ளைத் தேய்த்தோ அல்லது வெள்ளை எள்ளோ சேர்க்கலாம்.

* பச்சரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி ஊறவைத்து, நீரை வடித்து, அதிகம் தண்ணீர் விடாமல் கிரைண்டரில் கெட்டியாக ஆனால் நைசாக அரைத்து, அத்துடன் உளுத்தம் மாவு, சீரகம் எள், வெண்ணை சேர்த்துப் பிசைந்தும் முறுக்குச் சுற்றலாம்.

* வேறு எண்ணெயில் பொரித்தாலும் பிசையும்போது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்தால், தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே மணமாக இருக்கும்.