தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
பால் – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்
செய்முறை:
- வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.
- இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.
- வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.
- 2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.
* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோங்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.
* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.
* ஆறியதும் அதிகமாக இறுகும்.
திங்கள், ஓகஸ்ட் 27, 2007 at 2:58 பிப
first time i am coming across a blog with good ideas ,aim and taste .i will be a regular clicker to your blog.
செவ்வாய், ஓகஸ்ட் 28, 2007 at 9:25 முப
Hello Jai
Pallukku pathila thengai pal sethu seithu parunga asathala irukkum. athoda thegai palum ordinary milkum 3:1 vikithathil kalanthu seiyalam. (Marupadium mannnikanum. expert kitta katthukutti edhllam sollarathukku)
செவ்வாய், ஓகஸ்ட் 28, 2007 at 4:26 பிப
This is the easiest and sweetest payasam.
செவ்வாய், ஓகஸ்ட் 28, 2007 at 9:07 பிப
virundhu, Haranprasanna நன்றி. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
srilatha, அரிசிக்குத் தான் தேங்காய்ப் பால் சேரும், பருப்பு வகைகளுக்கு வெறும் பால் தான் நல்லா இருக்கும்னு மூளைல பதிஞ்சுடுச்சு. தேங்காய்த் துருவல் போதுகூட இடைல வாய்ல சன்னமா தட்டுப்பட மட்டும் தான். நீங்க சொன்னதும் செஞ்சு பார்க்கறேன். நன்றி.
//(Marupadium mannnikanum. expert kitta katthukutti edhllam sollarathukku)//
யாரைச் சொல்றீங்க expertனு? கிண்டல் செய்றீங்களா? :(( இனிமே இந்த வரி வந்தா எடிட் செஞ்சு தான் போடுவேன். 🙂
வியாழன், பிப்ரவரி 5, 2009 at 11:09 பிப
HI jayashri… naaan unga recipes lam samachu enga veetla Nalan nu per vaangiten 🙂 thank u so much