திருவாடிப் பூரத்தை முன்னிட்டு…
தேவையான பொருள்கள்:
கெட்டியான பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 4, 5
பச்சைக் கற்பூரம்.
செய்முறை:
- காலையில் கறந்த பாலை மாலையில், அல்லது மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையோ (பாக்கெட் பாலை அப்படியே உபயோகிக்கலாம்.) செய்யலாம். கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
- காய்ந்ததும் பொங்கி வழிய விடாமல், அடிப் பிடிக்காமல், நிதானமான தீயில் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பால் இறுகி வற்ற ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்’மில் வைத்து, அடிப்பிடிக்காமல் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.
- சிறிதளவு மட்டுமே ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* பாக்கெட் பாலாக இல்லாமல் கறந்த பாலாக இருந்தாலே மிகவும் ருசியாக இருக்கும்.
* கொஞ்சம் மேலே சொன்னபடி பழைய பாலாக இருந்தால் கிளறும்போது தானாகவே திரிதிரியாக வரும். புதிய பாலாக இருந்து, திரியாவிட்டால் சில சொட்டுகள் தயிர்விட்டால் சற்று திரிந்த மாதிரி வரும்.
* நல்ல க்ரீம் உள்ள பாலில் செய்தால், கிளறியதும் தானே நெய்யை கக்கும். அப்படி இல்லாமல் கையால் எடுத்துப் பார்த்து, கொஞ்சம் ஒட்டினால், மேலும் 2 அல்லது 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.
* அடிப்பிடிக்காமலோ அதிகம் பொங்காமலோ இருக்க ஒரு நாணயத்தை அல்லது கோலிக் குண்டைப் போடலாம் என்று சொல்கிறார்கள். நான் போடவில்லை. நான்-ஸ்டிக்கில் செய்தேன்.
* பால்கோவா இறக்கும்போது சற்று தளர்வாக இருப்பது போல் பார்த்து இறக்கினால், ஆறியதும் இன்னும் இறுகி சரியான பதத்தில் இருக்கும். இறக்கும்போதே சரியான பதத்தில் இருந்தால், ஆறியதும் மிகவும் கெட்டியாகி உதிர ஆரம்பித்துவிடும். புகைப்படத்தில் இருப்பது இப்பொழுதுதான்அரை மணி நேரம் முன்னால், இறக்கியதும் எடுத்தது. [இந்த கோவாவை மட்டும் வைத்துக் கொண்டே இன்னும் சில இனிப்பு வகைகள் செய்யலாம். அவை அப்புறம்…]
* பொதுவாகவே இந்த மாதிரி பாலில் செய்யும் இனிப்புகளை சீக்கிரம் தீர்த்துவிடுவது அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது நல்லது.
* சர்க்கரைக்குப் பதில் வெல்லம் போட்டுக் கிளறலாம். திரட்டுப் பால் என்று பெயர். உண்மையில் இதுவே ஸ்ரீவில்லிபுத்தூரில் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எங்கள் வீட்டுத் திருமணங்களில் அதிகம் உபயோகிப்பார்கள். எவ்வளவு வெல்லம் என்று முதலிலேயே சரியாகச் சொல்ல வரவில்லை. பால் இறுகியதும் விழுது எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வெல்லாம் போட்டால் சரியாக இருக்கும் என்று அங்கே சொன்னார்கள். இருக்கிறது.
[இதில் தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். தேங்காய்த் திரட்டுப் பால் என்று பெயர். அதுவும் அப்புறம்..]
புதன், ஓகஸ்ட் 15, 2007 at 12:53 பிப
ரொம்ப நேரம் கிளறணுமே ஜெ.
அதனாலே மைக்ரோவேவ் திரட்டிப்பால் பண்ணிடறேன்.
பரவாயில்லாமல் சுமாரா நல்லாவே வருது:-)
புதன், ஓகஸ்ட் 15, 2007 at 1:38 பிப
ஒக்கே ஒக்க கொஸ்டின்:
திரட்டுப்பால்னா சீம்பால் இல்லையா?
அதாவது பசு கன்று போட்ட உடனே முதல்நாள் பாலில் திரிஞ்சு திரிஞ்சி இனிப்பா செய்வாங்களே (சூப்பரா இருக்கும்), அதை சீம்பால்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல. மத்தவங்க திரட்டுப்பால்னு சொல்லும்போது இதைத்தான் சொல்றாங்கன்னு இத்தனைநாளும் நினைச்சுக்கிட்டிருந்தேன்.
வியாழன், ஓகஸ்ட் 16, 2007 at 12:39 முப
துளசி
மைக்ரோவேவ் திரட்டுப்பால், ரிகோடாஸீஸ் திரட்டுப்பால்னு சொல்லி ஜெயஸ்ரீக்கிட்ட திட்டு வாங்க வேணாம்னு சும்மா இருந்தேன். கை கொடுங்க நீங்க நம்ப கட்சி.
தயிருக்கு பதிலா எலுமிச்சை சாறு விட்டா உடனே திரியாதோ (PH change).
வியாழன், ஓகஸ்ட் 16, 2007 at 10:34 முப
Dear Jai,
Naan Unga Oorukku ellam (Srirangam, Madurai, Trichy) Poitu ippathan vandhen. Romba rasichu parthen. Unga gyapagam ella idathilaym vandhadhu. Kurippa Nann srirangam kovilukku pogumpodhu night 9.00 p.m. Ambalukku mangala aarathi edhuthuttu ARAVANAI prasadam kodhutharkal. Ange partha ella veedugalilum ethu ungalodatha irukkumnu ore karpanai. Engayavathu neega theriya mateengalanu oru chinna chinna aasai. anna romba enjoy panninen. Tiruvadi sevai parrka mudhinthathu. Manasukku romba niraiva irunthathu.
வியாழன், ஓகஸ்ட் 16, 2007 at 2:33 பிப
I downloaded tamil fonts just to write to you. but iam unable to use it. Once I get well-versed will def. write in tamil. Naanum idhuvarai microwave-il dhaan thirattupaal seidhuirukkiraen. Ennudaiya blog-il kalakhand endra post-il ulladhu. Neengal seidhadhu pol seiya vendum endru aasaidhaan; Aanaal neram illai. Adhuvum, 16 maadha kuzhandai veru irukkiradhu.
Even I like srivilliputhur thirattu paal. My mom belongs to that place so I get to taste the real thirattu paal quite often 🙂
வியாழன், ஓகஸ்ட் 16, 2007 at 4:12 பிப
//முதல்நாள் பாலில் //
First day milk after delivery. Not “previous” day.
வியாழன், ஓகஸ்ட் 16, 2007 at 8:18 பிப
I downloaded tamil fonts just to write to you. but iam unable to use it. Once I get well-versed will def. write in tamil
ramya: for beginners i would suggest an online tool, where you’ll find two text boxes in the web page. Choose tamiglish and start typing in english in the first text box and other text box will render equivalent thamiz characters.
for eg. padam = படம், ammaa = அம்மா and so on. if you need further help, let me know
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 3:07 முப
Hi Prakash..thanks a lot. I use Kural s/w. It worked for me before but now I dunno why it doesn’t work. Anyway I will try what you have suggested too. thanks again 🙂
Please excuse-me Jayashree for using your comment section for my personal use 🙂
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 10:11 முப
துளசி, ஆமாம். ஒன்றரை மணி நேரம் ஆச்சு. 😦 சைட்ல முழு சமையலே முடிச்சுட்டேன். ஆனா இரண்டுக்கும் வித்தியாசம் இல்லைன்னா சொல்றீங்க?
பிரேமலதா, கன்று ஈன்று முதல் நாள் கிடைக்கும் பாலைத் தான் சீம்பால்னு சொல்வாங்க. அதுல செய்யற இனிப்பை என்ன சொல்வாங்கன்னு தெரியாது. எங்களுக்கு சொந்தமா மாடு கிடையாது. எங்க கோனார் தர மாட்டாரு. எங்க வீட்டுல பாவம்னு அதை வாங்கவும் மாட்டாங்க. அதனால எப்படி இருக்கும்னு தெரியாது. திரட்டுப் பால் ஸ்ரீவில்லிபுத்தூர்ல கிடைக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. வாவ்!
பத்மா, நிச்சயமா Ricotta cheeseல செஞ்சதை எல்லாம் திரட்டுப் பால்னு சொன்னா திட்டுவேன். 🙂 துளசி மாதிரி மைக்ரோவேவ் ஓக்கே. ஆனா எனக்குத் தான் இன்னும் சமையல் குறிப்பு சொல்லும்போது குழப்பமா இருக்கு. நார்மலா எல்லாரும் செய்யக் கூடிய முறைலயே சொல்றதா, மைக்ரோவேவ் முறைல சொல்றதான்னு. இன்னும் நிறைய பேர் இந்தியாவுல உஜாலாவுக்கு மாறலை. நானே கரண்ட் போயிடுமோ பாதிலன்னு ரொம்ப ரிஸ்க் எடுக்க மாட்டேன். அதனால பழைய சமையல் குறிப்புகள் எல்லாம் அதே முறைலதான். வேணும்னா பின்னாடி update செஞ்சுக்கலாம்.
//தயிருக்கு பதிலா எலுமிச்சை சாறு விட்டா உடனே திரியாதோ (PH change).//
எலுமிச்சை சாறு, வினிகர் எல்லாம் பனீர் செய்யத் தான் நல்லா இருக்கும். ஆனா பால்கோவாவுக்கு தயிர் தான் பெஸ்ட். அதுவும் ஒன்றிரண்டு சொட்டு தான் விடணும். அதைவிட பழைய பாலாவே இருந்தா ரொம்ப வசதி.
Srilatha, மகிழ்ச்சி. ஆனா நான் இப்ப மும்பைல இருக்கேன். 😦
ramya, என்னோடதே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மாதிரி நல்லாத்தான் வந்திருக்கு. 🙂
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 1:12 பிப
பாவமெல்லாம் இல்லை ஜெயஸ்ரீ. முதல்நாள் கன்றுக்கு அதிகம் intake இருக்காது. இறக்காவிட்டால், பசுவுக்கு கட்டிக்கும். கீழே ஊத்தவும் கூடாது. so, it serves all purposes. இந்தப் பாலில் Antibiotitics அதிகம் இருக்கும்னு சில அரைவேக்கடுகள் claim. 🙂
நேத்து திரட்டுப்பால் செய்தேன். சர்க்கரை அதிகம் போட்டுட்டேன்னு நினைக்கிறேன். அரை எலுமிச்சம் பழம் (பெரிசு வேற) பிழிஞ்சு விட்டேன் திரிக்கிறதுக்கு! நான் சாப்பிடலை. பாலனுக்குக் குடுத்திட்டேன், “இங்க பாரு, உனக்காக திரட்டிப்பால் செய்ஞ்சேன்னு”. நேனும் குஷி,எல்லோரும் குஷி. 😀
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 1:59 பிப
Hi Jayashree,
I am sure your method is the best; As you say the microwave ones are not as good as the traditional ones. Do keep posting the traditional methods. Idhellam kidaippadhu dhaan kashtam. Easy methods engu vendumaanaalum kidaikkum. YOu have a great collection. Infact I have also asked my MIL to let me know andhakaalaththu recipes. Once I get that I am also planning to post all those stuffs. I am sorry, I can’t try your recipes right now as I stay in France and I really don’t get any of our stuffs. For ex. vendaikkai kooda kidaikkadhu. Paris-il ellam kidaikkum aanaal naan irukkum idaththil ondrume kidaiyadhu. We ar eplanning to move to India soon..in 3-4months. I will definitely try all your recipes. So, please keep posting. I am sure people would again shift back to traditional methods for THE BEST TASTE.
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 2:08 பிப
ஜெயஸ்ரீ, அந்த மைக்ரோவேவ் செய்முறையையும் பின்னூட்டத்திலோ இல்லை பின்குறிப்பாவோவாவது போடக்கூடாதா? நாங்களும் பிழைச்சுப்போவோமில்ல?
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 6:39 பிப
பிரகாஷ், வந்தா எனக்கு ஒரு hi சொல்றதில்லையா? 😦 நீங்க என்னவோ ஒரு கடி வேலைக்காக லீவ்ல இருக்கீங்கன்னு இருந்துட்டேன்.
https://mykitchenpitch.wordpress.com/2007/07/23/ithanaal-sagalamaanavargalukkum/#comment-517
இங்க ஒருத்தர் நீங்க தான் என் ப்லாக்கோட வேல்யூவையே ஏத்த முடியும்னு சொல்றாரு. அப்படியா?
ரம்யா beginners, கொட்டை போட்டவங்கன்னெல்லாம் எதுவும் இல்லை. ஈகலப்பையை இறக்கி ஒரே நாள் இரவுக்குள்ள தமிழ் தட்டெழுத்து, குழுமம் எல்லாம் படிச்சு தெரிஞ்சிகிட்டேன். நேரடியாவே தமிழ்ல தட்டலாம். ஏதாவது தேவைன்னா தனிமடல்லயும் கேளுங்க, சொல்றேன். சும்மா பின்னூட்டம் மட்டும் போட்டா போதாது. தமிழ்ல ஒரு பதிவும் ஆரம்பிங்க. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ பிரகாஷ் செய்வாரு. 🙂
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 7:09 பிப
பிரேமலதா, எல்லா பாலூட்டிகளுக்குமே முதல் இரண்டு நாள்கள் வரும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்னு தான் நான் கேள்விப்பட்டிருக்கேன். கோனார் அதைக் கறந்தாலும் தன் குடும்பத்துக்குத் தானே எடுத்துப்பாரு. எங்களுக்கு எப்படித் தருவார்? ஆனா ஒரு தடவை வேற யாரோ பால்க்காரர் அப்படி கொண்டு வந்து வித்த போது எங்க வீட்டுல வாங்க மறுத்துட்டாங்க. மத்தபடி இந்த மாடு பத்தி எல்லாம் அதிகம் தெரியாது. பசுநேசன் படத்துல பாத்த அளவுல தான் நம்ப அறிவு. அப்புறம் சர்க்கரை போட்டு நீங்க செஞ்சதுக்குப் பேர் பால்கோவா. அநியாயத்துக்கு அரை மூடி எலுமிச்சம் பழம் எல்லாம் பிழிஞ்சா பனீர்கோவான்னு தான் சொல்லணும். வெல்லம் போட்டாத்தான் திரட்டுப் பால்.
லஷ்மி, microwave receipesனு கூகிள்ல தேடினா கொட்டிக் கிடக்கும். நானே முழுமையா எதையாவது செஞ்சு பார்த்து சரியா வந்தா மட்டும் இங்க சொல்றேன்.
மைக்ரோவேவ் சமையல் நல்லதா கெடுதலான்னு இன்னும் சர்ச்சை இருக்கறதால் ஒரு முழுமையான உணவை அதிகம் அதுல நான் செய்யறதில்லை. (ரைஸ் குக்கர் மிக அதிக அளவுல உபயோகிப்பேன்.) அப்பப்ப சில சொகுசு வேலைகளுக்கு நிறைய உபயோகிப்பேன். இல்லைன்னா எனக்கு வேலை ஓடாது. அதை மட்டும் அங்கங்க சொல்றேன்.
ரம்யா சீக்கிரம் இந்தியா வந்து நீங்க தமிழ்லயும் ஒரு சமையல் பதிவு ஆரம்பிங்க. எந்த ஊரு? 🙂
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 7:37 பிப
நான் திரட்டுப்பால் மாதிரி இனிப்பு செய்ய நினைச்சா, வழக்கமான முறையில தான் செய்வேன்.ஆனா நெய் சேர்க்கிறதில்லை, வருணுக்கு கொலஸ்டிரால்(genetic), தலைவருக்கு இனிப்பு பிடிக்காது, செஞ்சு கடைதான் வைக்கணும். நானே சாப்பிட்டா இனிமே நூலிடை(?) தூணிடையா போகும்.
எப்பவாவது புது விதம் சோதனை செய்யறது பழக்கம். இந்த standardization, change variable இதெல்லாம பழகிப்போனதால.
மற்றபடி, தினப்படி சமையல் எல்லாம் அரைச்சு கரைக்கறது எல்லாம் ஆய்வக பழக்கம்தான்.
நல்லவேளை ரிக்கோட்டா சீஸ்ல ரசமலாய்ன்னு எழுதி அடிவாங்காம தப்பிச்சேன்.
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 7:47 பிப
Aiyiyo! full-fledged tamizh-il website ellam romba kashtam. Naan palllliyil ( eththanai ‘l’) tamizh padikka villai. Hindi eduththukondaen as my dad had a transferable job, we felt hindi would be helpful.8th std varaikkum tamizh padiththaen..piragu hindi-kku maaritten. Ungall blog-i paarthuvittu, indrudhaan ninaiththukondaen.;ekkaranaththaikondum, en kuzhandaikku tamizh tavira veru endha mozhi-um solli tharakkoodathendru. Sila neram neengal ezhudum sila thooya tamizh vaarthaigal enakku puriyaamalaum poi vidugiradhu. Manasu romba kastama irukku Jayashree..
Right now south France-il irukkiraen. oorin peyar – Aix en provence…enakku therindhu ingu naan mattum dhaan tamizh penn. Other Indians kooda adhigam kidaiyadhu. Enakku therindhu only 2-3 families..adhanaal dhaan saamaangall kidaippadhu kashtam. But today I have made a note of a lot of your recipes , which uses stuffs I get here; Neram kidaikkum podhu, seithu paarthu kandippaaga ungallukku theriyapaduththugiraen. Ennai vittal pesi konde iruppaen..Ungal blog space muzhuvadaiyum eduththukollaamal irukka, ippodaikku vidaiperugiraen..nandri..vanakkam…
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 9:19 பிப
///இங்க ஒருத்தர் நீங்க தான் என் ப்லாக்கோட வேல்யூவையே ஏத்த முடியும்னு சொல்றாரு. அப்படியா?///
எதுக்கு? இல்லை எதுக்குங்கறேன். ஏங்க்கா, ஏற்கனவே எப்பவும் wordpress top blogger நீங்கதான். WP Top post உங்களோடது தான். இன்னும் என்னங்க்கா வேல்யூவை ஏத்தறது. போடறதென்னவோ சமையல் குறிப்பு. தமிழ் கூறும் நல்லுலகம் இப்படி சமையல் குறிப்புப் பக்கத்துல போய் அம்முதுங்களே 😦
பிராகாஷ் அண்ணே, நொந்து நூலாகி, கரைஞ்சு காணாமப் போன கடைசி பெஞ்ச் காரவங்க சார்பா வேண்டி கேட்டுக்கறேன், போய் உங்க வேலையைப் பாருங்க. 🙂 நாமும் வாழத் தாவலை..
நானும் விரும்பிப் படிக்கறெங்க்கா. அதைச் சொல்லணுமில்ல. 🙂
வெள்ளி, ஓகஸ்ட் 17, 2007 at 11:58 பிப
ஜெயஸ்ரீ , கொஞ்சம் *கடமை கந்தசாமி* வேஷம் போடலாம்னு பார்த்தேன். அதான் மேட்டரை மட்டும் சொல்லிட்டு அப்பீட் ஆகிட்டேன் :-). இப்ப வேலை எல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரீம்லைன் ஆகி, வலைப்பதிவுப் பக்கம் தலை காட்ட ஆரம்பிச்சுருக்கேன்.
அப்பறம் அந்த ப்ளாகோட வேல்யூவை ஏத்தற மேட்டர்.
https://mykitchenpitch.wordpress.com/wp-admin/options-reading.php
இந்த பக்கத்துக்குப் போனா, அதிலே Syndication Feeds ல For each article, show அப்படிங்கறதுல full text, summary அப்படின்னு ரெண்டு ஆப்ஷன் இருக்கும். அதிலே full text ஐ செலக்ட் பண்ணிட்டு, சேவ் ( காராசேவ் இல்ல ) பண்ணிடுங்க..
அஷ்ட்டே
கடேசி பெஞ்சு : இன்னா சொல்றீங்கன்னே புரியலையே
சனி, ஓகஸ்ட் 18, 2007 at 11:15 முப
Nice recipe post. thanks.
“Seempal” from young mother cow/buffalo is made into a nice sweet by Goans.
They simply add juice of one coconut, powdered sugar, and elakkai powder. Then the mixture is place in a container of double boiler( fill one vessel with some water and then place the vessel with the milk mixture) . The entire mixture becomes like one big idly. It can be sliced and eaten. It can be preserved for many days in the refrigerator.
சனி, ஓகஸ்ட் 18, 2007 at 3:13 பிப
ப்ரகாஷ், ஓ அதுவா? ஆனா அது Feedsக்கு சம்மரி மட்டும் கொடுங்கன்னு wp நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருந்தாங்களே.(அப்பத்தான் முழுப் பதிவும் படிக்க இங்க நேரடியா வருவாங்க. இல்லைன்னா அப்படியே அங்கயே அதை மட்டும் படிச்சுட்டுப் போயிடுவாங்கன்னு தான் அப்படிச் சொல்றாங்கன்னு நானே பெரிய மேதாவி மாதிரி காரணம் வேற கண்டுபிடிச்சுகிட்டேன். இல்லையா பின்ன?) நீங்க மாத்தி சொல்றீங்க. நிஜமாவே புரியலை. முழுப் பதிவும் வரதால எப்படி வேல்யூ கூடும்? BTW, நாமெல்லாம் க.கந்தசாமியா வேஷம் தான் போட முடியும். 🙂
கடைசிபெஞ்ச், lastbench@nonthavan.com ன்னு ஒரு மெயில் ஐடி குடுத்திருக்கீங்களே, அது nonthavan@lastbench.com ன்னு இருந்தா இன்னும் சரியா இருக்காது? 🙂
Jayalakshmi, அடேயப்பா, உங்க தகவலுக்கு அல்லது முழு ரெசிபிக்கு நன்றி. நான் கேள்விப்பட்டதே இல்லை.
ஞாயிறு, ஓகஸ்ட் 19, 2007 at 2:31 பிப
[…] விசயம் விவகாரமாகிறதுக்கு முன்னால ஜெயஸ்ரீக்கு சொல்லிடணும்னுதான் இந்தப் […]
ஞாயிறு, ஓகஸ்ட் 19, 2007 at 3:41 பிப
பிரகாஷ், ஜெயஸ்ரீ, ரெண்டுபேரும் சேர்ந்து இந்த feed பத்தி ஒரு முடிவுக்கு வாங்க, நான் காப்பியடிச்சுக்கிறேன்.
ஞாயிறு, ஓகஸ்ட் 19, 2007 at 3:55 பிப
:)) பிரேமலதா, நீங்க செஞ்சதும் தவறில்லைன்னு சொன்னேனே. ஆனா அது பனீர்கோவா. எலுமிச்சம் பழம் பிழிச்சு, பால் திரிஞ்சதும் பிரிஞ்ச நீரை வடிகட்டி, சர்க்கரை, ஏலம் சேர்த்து இன்னும் கொஞ்சம் நேரம் கிளறினாலே, அப்படியே உதிர் உதிரா ஆயிடும். நீங்க வடிகட்டாததால அதிக நேரம் எடுத்திருக்கு. இதை சும்மா உருண்டையாவோ, பேடா மாதிரியோ செஞ்சு இங்க விப்பாங்க. விலை அதிகம். பால் கெட்டிருக்குமோன்னு சந்தேகம் இருக்கும்போதெல்லாம் இதைச் செய்வேன். ஆனா சர்க்கரை அதிகம் போடக் கூடாது. எப்படியோ எல்லாருக்கும் பிடிச்சதில்லை… அது தான் முக்கியம். Hats off!
ஞாயிறு, ஓகஸ்ட் 19, 2007 at 7:19 பிப
//கடைசிபெஞ்ச், lastbench@nonthavan.com ன்னு ஒரு மெயில் ஐடி குடுத்திருக்கீங்களே, அது nonthavan@lastbench.com ன்னு இருந்தா இன்னும் சரியா இருக்காது?//
ஆமாங்க்கா ஆமாங்க்கா, அதனாலதாங்க்கா நீங்க topல இருக்கீங்க. நான் கடைசி பென்ச்ல இருக்கேன். 😦 இப்ப என் மெயில் ஐடியை மாத்திட்டேங்க்கா. :)) டாங்க்ஸ்.
//கடேசி பெஞ்சு : இன்னா சொல்றீங்கன்னே புரியலையே//
பிரகாஷ் அண்ணே, உங்களுக்கு புரிஞ்சிருந்தாதாங்னே நான் ஆச்சிரியப் பட்டிருக்கோணும்.
திங்கள், ஓகஸ்ட் 20, 2007 at 12:09 முப
கடேசி பெஞ்சண்ணா, இப்போ பார்த்தீங்களா, நானும் சமைக்க ஆரம்பிச்சிட்டேன், நானும் WPல அப்பப்ப மேல வர்றேன். 😀
secrets of WP rating deciphered. 😉
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 6:44 பிப
திரட்டிப்பால் படம் exciting-ஆ, கலர்ஃபுல்லா இல்ல… ரெண்டு கருவேப்பில போட்டிருக்கலாமோ 😀
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 7:29 பிப
/wp நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருந்தாங்களே//
தப்பா ஆலோசனை சொல்லியிருக்காங்க 🙂
//இல்லைன்னா அப்படியே அங்கயே அதை மட்டும் படிச்சுட்டுப் போயிடுவாங்கன்னு தான் அப்படிச் சொல்றாங்கன்னு நானே பெரிய மேதாவி மாதிரி காரணம் வேற கண்டுபிடிச்சுகிட்டேன்.//
ஜெயஸ்ரீ, உங்க லாஜிக்ல கரக்டுதான்னாலும், ஒரு சின்ன மேட்டர் இருக்கு… அதாவது, ‘ என் வீட்டிலே வந்துதான் என்னுதைப் படிக்கணும்’ அப்படின்னு கட் அண்ட் ரைட்டா சொல்றது, வலையுல எதிக்ஸ் படி தப்பு. பொதுவா ஓடைகளை எடுத்து வலைப்பதிவிலே சேர்க்கும் போதே, அது partial feed மட்டுமே தர பதிவா இருந்தா உடனடியா டெலீட் செஞ்சுடுவாங்க.. நானும் அப்படித்தான் :-). என் ரீடர்ல நீங்க இல்லாதாலே, போன மாசம் முழுக்க , ஜெயஸ்ரீன்னு நம்மாள் ஒர்த்தங்க வலைப்பதிவு எழுதறாங்கங்கறதே மறந்து போய், திடீர்னு ஞாபகம் வந்து பதறி அடிச்சு வந்து பார்க்கிரதுக்குள்ள 15 பதிவு போட்டுட்டீங்க 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 7:31 பிப
ஒரு சின்ன திருத்தம்
//பொதுவா ஓடைகளை எடுத்து *வலைப்பதிவிலே* சேர்க்கும் போதே//
என்று எழுதி இருப்பதை
பொதுவா ஓடைகளை எடுத்து *feedreader இலே* சேர்க்கும் போதே
என்று வாசிக்கவும்.
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 9:44 பிப
bsubra, கண்ணாடிப் பாத்திரங்கள்ல வெச்சு எடுத்தா டல்லா இருக்குன்னு ஒரு நண்பர் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காரு. இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சு, சூட்டோட புகையப் புகைய எடுத்தா சரியா வரதில்லை. அதைவிட முக்கியமா, பால்கோவாவோட உண்மையான கலரே அதுதான். : ) அட்டைப் பெட்டி, வெண்ணைப் பேப்பர் தான் இல்லை. மத்தபடி ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மாதிரியே இருக்குன்னு ரங்கமணி சான்றிதழ். : ) (எப்பயாச்சும் தான் பாராட்டெல்லாம் கிடைக்கும்.) இன்னொரு தடவை செய்யும்போது படத்தை மாத்திடலாம்.
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 9:51 பிப
ஜெயஸ்ரீ, உங்க லாஜிக்ல கரக்டுதான்னாலும்,
ஹி.. ஹி.. As always..
அதாவது, ‘ என் வீட்டிலே வந்துதான் என்னுதைப் படிக்கணும்’ அப்படின்னு கட் அண்ட் ரைட்டா சொல்றது, வலையுல எதிக்ஸ் படி தப்பு.
வலையுலகம் அப்றம் எதிக்ஸ்.. எங்கயோ இடிக்குதே. அப்புறம் அது நானே கற்பனை செஞ்சுகிட்ட காரணம் தான். நண்பர்கள் எதுக்கு சொன்னாங்கன்னு நிஜமாவே எனக்குத் தெரியாது.
பொதுவா ஓடைகளை எடுத்து வலைப்பதிவிலே சேர்க்கும் போதே, அது partial feed மட்டுமே தர பதிவா இருந்தா உடனடியா டெலீட் செஞ்சுடுவாங்க.. நானும் அப்படித்தான் :-).
அதாவது நீங்க செய்யரதால அது சரி. இல்லைன்னா எதிக்ஸை இடிக்கும். என்ன அநியாயம் இது!
என் ரீடர்ல நீங்க இல்லாதாலே,
ம்..ம்..
போன மாசம் முழுக்க , ஜெயஸ்ரீன்னு நம்மாள் ஒர்த்தங்க வலைப்பதிவு எழுதறாங்கங்கறதே மறந்து போய்,
த்சொ! த்சொ! போன மாசம் ஏன் உன் எந்தப் பதிவும் கில்லில வரலை, அங்கயும் சண்டை போட்டுட்டியான்னு ‘நண்பர்கள்’ கேட்டபோதே இதை நான் யோசிச்சிருக்கணும். போகட்டும்.
திடீர்னு ஞாபகம் வந்து பதறி அடிச்சு வந்து பார்க்கிரதுக்குள்ள 15 பதிவு போட்டுட்டீங்க.
இதெல்லாம் ஒரு காரணம். சரி சரியாக்கிடறேன். இனிமேலும் வேல்யூ மட்டும் ஏறாம இருக்கட்டும், அப்புறம் பேசிக்கறேன்.
வெள்ளி, ஜனவரி 7, 2011 at 9:36 பிப
very useful subject