ஏனோ தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் என்றெல்லாம் சொல்வதுபோல் மோர் ரசம் என்று சொல்ல வரவில்லை. அதனால் மோர்ச் சாத்தமுது என்றே இருக்கட்டும்.

தேவையான பொருள்கள்:

தயிர் – 1 கப் (அதிகம் புளிக்காதது)
தண்ணீர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1
மிளகு – 10
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  எண்ணை, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம்.
உப்பு –  தேவையான அளவு
கொத்தமல்லித் தழை.

mor saaththamuthu

செய்முறை:

  • தயிரை தண்ணீருடன் கலந்து நன்கு கடைந்து, [அட, மோர் தாங்க! :)] தேவையான உப்பு சேர்க்கவும்.
  • வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து, மோரில் கலக்கவும்.
  • எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

* விரும்பினால், பரிமாறும் சமயத்தில் எண்ணையில் 1 டீஸ்பூன் வேப்பம்பூவை வறுத்துச் சேர்க்கலாம். முன்னாலேயே சேர்த்தால் கசந்துவிடும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், கறிகள் (கூட்டு அல்ல).

என்னைப் பொருத்த வரை எதோடு சமைப்பது என்பதைவிட எந்த நாளில் சமைப்பது என்பதுதான் முக்கியம். பெண்ணுக்குப் பிடிக்கும் என்பதால் அநேகமாக விரத நாளில் செய்துகொடுப்பேன். விரத நாள் –  எனக்குப் பிடிக்காத மெனு. 🙂 சிம்ப்பிள்!