சிறிய மாங்காய் – 1
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
பச்சை மிளகாய் – 1
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்)
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- துவரம் பருப்பு, கடலைப் பருப்பைக் கழுவி, தண்ணீரில் ஊறவைத்து, உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அதிகம் புளிப்பில்லாத மாங்காயைத் தோல்சீவி, துருவி வைக்கவும்.
- பருப்பு விழுது, மாங்காய்த் துருவல் நறுக்கிய கொத்தமல்லித் தழை, தேங்காய்த் துருவல் சேர்த்து மென்மையாக அழுத்தாமல் கலந்து, இட்லித் தட்டில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
- வாணலில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பட்டாணி, கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த உசிலியைச் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி இறக்கவும்.
* மாங்காய், சோர்ந்து போயிருக்கும் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியையும் உணவின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்துமென்பதால், ஊறுகாயாக இல்லாமல் இந்த முறையிலும் அவ்வப்போது மாங்காயை உணவில் சேர்க்கலாம்.
* இது மற்ற இரண்டு முறைகளை விடச் சுலபமானது. இப்படியே மற்ற காய்களையும் பருப்பு விழுதோடு சேர்த்து இட்லியாக வேகவைத்து ஒரு அவசரத்துக்கு உதிர்த்துக் கொள்ளலாம் என்றாலும், இந்த முறையில் காய்கறி அதிகமாக வெந்து சுவையைக் கெடுத்துவிடும். பொதுவாக மாங்காய்க்கு மட்டுமே இந்த முறை ஏற்றது என்பது என் கருத்து.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், தயிர் சாதம்.
செவ்வாய், ஏப்ரல் 3, 2007 at 6:58 பிப
என் பொண்ணுக்கு பீன்ஸ் கறி என்றால் பருப்பு உசிலிதான். ஆனால் இந்த மாங்காய், கு.மிளகாய் கேள்விப்பட்டதே இல்லை.செஞ்சிட வேண்டியதுதான்.
பருப்பு உசிலி நான் செய்யும் முறை, அரைத்ததை, தண்ணி தெளித்து இரண்டு நிமிடம் மைக்ரோ வேவில்
வைத்து விடுவேன். பின்பு நான் ஸ்டிக்கில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, தாளித்துவிட்டு இதையும் போட்டு நன்கு வறுத்து, பிறகு வெந்த காயைப் போட்டு புரட்டி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டு எடுப்பேன்.
இந்த ப்ரீசரில் வைத்து, மைக்ரோ வேவில் சூடு செய்து சாப்பிடுவது எனக்கு அலர்ஜி.
செவ்வாய், ஏப்ரல் 3, 2007 at 11:11 பிப
உஷா, நாம் வீட்டில் அதிக நேரம் ஒவ்வொரு நாளும் அடுப்படியில் கழிக்க முடிவதால் ஃப்ரீசரின் தேவை இல்லாமல் இருக்கிறது. இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள்/ஆண்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஃப்ரீசரையும் பயன்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் எதையெதை தயாரித்து அங்கே வைக்கிறோம் என்பது முக்கியம். அவற்றை மட்டுமே அவ்வப்போது சொல்ல நினைக்கிறேன். எனக்கும் எல்லாவற்றையும் அங்கே வைப்பதில் விருப்பமில்லை.
குடமிளகாய் பருப்பு உசிலி சுவையில் என் மாமியாரிடம் ‘பரவாயில்லையே..’ என்ற லேசான பின்னூட்டம் பெற்றது.(அப்படித் தான் எனக்கு காதில் விழுந்தது என்று நினைக்கிறேன்.) 😦 திரும்ப தெளிவாகக் கேட்க வெட்கமாக இருந்தது. (தோடாஆஆஆ!)
மாமியாரிடம் பரவாயில்லையே = “பாரத் ரத்னா” 🙂
வியாழன், ஏப்ரல் 5, 2007 at 8:16 முப
I love the Mangai Parapu usali idea,(have my victims all ready in my “test” kitchen.) By the way, I always make more than what i will need Parapu usali (prepare it like you have mentioned it in your recipe)and freez it in ziplocks) they come in very handy! I also make Brocolli & Avrakai Parapu usali… Love your blog 🙂 keep up the good work Jayshree, we are so proud of you!
fondly,
Amrita Srinivasan
வெள்ளி, ஏப்ரல் 6, 2007 at 10:12 முப
அரைச்சுக் கிளறலுக்கும் உசிலிக்கும் என்ன வித்தியாசம். உசிலி ஐயங்கார் பாஷையா அல்லது ஸ்மார்த்தா ( ஐயர் ) பாஷையா ? என்று விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
வெள்ளி, ஏப்ரல் 6, 2007 at 6:32 பிப
Amritha, Thanks 🙂
இட்லிவடையாரே.. இன்னிக்கு போணி நான் தான் கிடைச்சேனா? :(((
இருந்தாலும் உங்க சந்தேகத்தை எடுத்துகிட்டுப் போய் யார் வீட்டுத் திருமண விருந்துன்னு நல்லா யோசிச்சு(அது ஆச்சு 10 வருஷம்) போன் செஞ்சு கேட்டேன்.
“ஆமாம். அரைச்சுக் கிளறல்ன்றது நம்ப பக்கத்துல செய்றது தானே?” (நான் எந்தப் பக்கம்னு எனக்கு சத்தியமா தெரியலை.)
“நான் கேள்விப்பட்டதில்லை. ஏதாவது வைணவ பாஷையா”
“நீ ஸ்ரீரங்கம் தானே?”
“ஆமாம்”
“வாக்கப்பட்டது?” (நல்லவேளை இந்த வார்த்தை பாரதிராஜா புண்ணியத்துல டக்குனு புரிஞ்சுது”)
“கோவி(ஐயோ!)…. எங்க ஆத்துக்காரரும் ஸ்ரீரங்கம் தான்”
“பின்ன தரைல நடக்காம வளந்தியாக்கும்?”
“…..”
“அரைச்சுக் கிளறல்ங்கறது வீர வைணவ ஐயங்கார் பரிபாஷை. உசிலி குசிலின்னுண்டு..”
இட்லிவடை, இத்தனை குத்துக்கு அப்புறம் வடகலையா தென்கலையான்னு கேக்க திராணியில்லை மவனே. நான் எஸ்கேப்.
இருந்தாலும் இம்மட்டில் உங்க சந்தேகம் தீர்த்த தருமியானதில் தன்யனானேன்.
நன்றி. வணக்கம்.
செவ்வாய், ஏப்ரல் 10, 2007 at 1:53 முப
//அரைச்சுக் கிளறலுக்கும் உசிலிக்கும் என்ன வித்தியாசம். உசிலி ஐயங்கார் பாஷையா அல்லது ஸ்மார்த்தா ( ஐயர் ) பாஷையா ? என்று விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.//
இதில் ஐயர், ஐயங்கார் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. ஊர் வித்தியாசம் தான் இருப்பதாகத் தெரிகிறது. கல்யாணத்துக்கு முன்னாடி அரைச்சுக்கிளறல் தான். அப்புறம் தான் (மாயவரம்) பருப்புசிலி.
செவ்வாய், ஏப்ரல் 10, 2007 at 1:32 பிப
நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஸ்ரீரங்கத்துல அப்படி யார் சொல்லியும் கேள்விப்பட்டதில்லை. அவங்க காஞ்சிபுரத்துக் காரங்க. ஆனா இல்லைன்றாங்களே. ஆமா, நீங்க மாயவரம் மருமகளா? அதுக்கு முன்னாடி இருந்த அரைச்சுக் கிளறல் ஊர் எதுன்னு சொல்லலையே.. 🙂