தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வெண்ணை
தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- அரிசியைச் சூடு வர சற்று வறுத்துக் கொண்டு, சூடு ஆறியபின் நன்றாகக் களைந்து, நீரை வடியவைத்து பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும். (வறுத்த அரிசி அதிகமாக ஊறக் கூடாது.)
- உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.
- காயம், உப்பு, இவைகளைக் கரைத்துவிட்டு, வெண்ணை, சீரகத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும்.
- கையில் சிறு உருண்டையாக எடுத்து மெதுவாக முறுக்குகளாகச் சுற்றி(ஞே!), எண்ணெயில் நிதானமான சூட்டில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.
* தண்ணீர் விட்டுப் பிசைந்த மாவு அதிக நேரம் இருந்தால் மாவு புளித்து, முறுக்கு சிவக்க ஆரம்பித்துவிடும். எனவே 2 கப் மாவிற்கு மேல் முறுக்கு தேவைப்பட்டால் 2, 3 தடவையாகப் பிசைந்து கொள்ளவும்.
* சீரகத்திற்குப் பதில் கருப்பு எள்ளைத் தேய்த்தோ அல்லது வெள்ளை எள்ளோ சேர்க்கலாம்.
* பச்சரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி ஊறவைத்து, நீரை வடித்து, அதிகம் தண்ணீர் விடாமல் கிரைண்டரில் கெட்டியாக ஆனால் நைசாக அரைத்து, அத்துடன் உளுத்தம் மாவு, சீரகம் எள், வெண்ணை சேர்த்துப் பிசைந்தும் முறுக்குச் சுற்றலாம்.
* வேறு எண்ணெயில் பொரித்தாலும் பிசையும்போது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்தால், தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே மணமாக இருக்கும்.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 4, 2007 at 12:08 பிற்பகல்
Dear Jai
Evvalvu methuva suthinalum varalapa. (idhukkuthan sollrathu katthu kuttinu) ippo thitta mattingale.
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 3:40 பிற்பகல்
srilatha, நானெல்லாம் கத்துக்கவே ஆரம்பிக்கலை. எங்க மாமியார் என்னை முறுக்கு சுத்த, ஜிலேபி சுத்த எத்தனையோ தடவை முயற்சி செய்யச் சொல்லிட்டாங்க. அப்படியே மிதமா இருக்கேன். இதுக்கெல்லாம் மிஷின் வராமயா போயிடும்? வெயிட்.
நான் அந்த மாவை மட்டும் தயார் செஞ்சு வேற நாழில பிழிஞ்சுடுவேன். டேஸ்ட் வருதா இல்லையான்னு ரங்கமணியை விரல் சொடுக்கி மிரட்டுவேன்.
வயலின்ல குன்னக்குடி வீணை வாசிச்சா சிலாகிப்பாங்களாம். தேன்குழல்ல கைமுறுக்கு வந்தா ஒத்துக்க மாட்டாங்களாமா?
வியாழன், செப்டம்பர் 6, 2007 at 10:00 மு.பகல்
Hai jai
100% agreed. Appo thenkuzhal achile pzhinchiduran (endha varthaya thanglishla ezhuthrate kaimurukku suthina mathiri iruukku) enavo ponga.