கீரையை அதிகம் படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சமைக்கும் எளிய முறை.
தேவையான பொருள்கள்:
கீரை – 2 கட்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
தாளிக்க – எண்னை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம்.

செய்முறை:
- கீரையை வேரிருந்தால் நீக்கிவிட்டு, நன்றாக அலசி, பொடிப்பொடியாக நறுக்கவும்.
- அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் கீரையை போட்டு, உப்பு, பெருங்காயம், கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பாத்திரத்தை மூடவேண்டாம். எங்காவது அறையை விட்டு வெளியே செல்லவேண்டியிருந்து, திறந்து வைப்பது ரிஸ்க் என்று நினைத்தால், மேலே இருப்பது போல் துளைகள் போட்ட மூடியால் மூடலாம்.
- சிம்மில் வைத்திருந்தால், கீரை சிறுகச் சிறுக குறைந்து, நன்கு வெந்துவிடும். (கீரை வேகும்போது வரும் வாசத்திற்கு ஈடு இணையே இல்லை.)
- இப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு கனமான கரண்டியால் நன்கு மசிக்கவும்.
- அதிக நீர் இருந்தால் மசிக்கும் முன் அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளோர் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.

* முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்… போன்ற கீரைகளை இந்த முறையில் சமைக்கலாம்.
* கீரையை வேகவைக்க, நிறம் மாறாமல் இருக்க, சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் தேவை இல்லை. சத்துக்கள் தான் அழியும். நாம் திறந்தே சமைப்பதால் நிறம் மாறாது.
* கீரை மசியல் மண் சட்டி அல்லது மாக்கல் சட்டியில் சமைப்பது சுவையை அதிகரிக்கும்.
* மிக்சியில் கீரையை மசிப்பது சுவையை பெருமளவு பாதிக்கும். மோர்கடையும் மர மத்து அல்லது கனமான கரண்டியால் மசிப்பதே சரி. இந்த முறையில் கீரை அதிகம் மசியாது என்றாலும், இதுவே சுவையாக இருக்கும்.
* சில சமயம் (அநேகமாக மழைக் காலங்களில்) கீரை, சுவையில் கடுக்கும். எத்தனை வேக வைத்தாலும் சரியாகாது. அந்த நேரத்தில் மட்டும் ஒரு கரண்டி வேகவைத்த துவரம் பருப்பும் சேர்த்து மசிக்கவும்.
* கீரைகளை வாங்கிய உடனே சமைத்துவிட வேண்டும். சமைத்த உடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
எல்லாவகை குழம்பு, ரசம், தயிர் சாதத்திற்கும் ஒத்துப் போகும். ஆனால் வத்தக் குழம்பு, வெந்தயக் குழம்புடன் கூட்டணி சேர்ந்தால் தயிர்சாதத்திற்கு மிக அபாரமாக இருக்கும்.
புதன் கிழமை, April 11, 2007 at 4:05 பிற்பகல்
ஜெயஸ்ரீ, வீட்டிலேயே பண்ற மாதிரி நல்ல ஐஸ்க்ரீம் ரெசிப்பி இருந்தா சொல்லுங்களேன்…. தேடித் தேடி அலுத்துப் போனேன்… நன்றி
புதன் கிழமை, April 11, 2007 at 6:43 பிற்பகல்
கீரை மசியலுக்கெல்லாம் ஒரு பதிவா என்று கேட்க விரும்பவில்லை.
எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாதிரி செய்ய எண்ணமிருக்கிறதோ என்னவோ. படங்களுடன் போடுவது நன்றாக இருக்கிறது. கீரை மசியல் அடர் பச்சை நிறத்தில் இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும். அதுவும் ‘ரசம் சாதத்துடன் கீரை’ காம்பினேஷனே எனக்குப் பிடித்தமானது. (மேட்ச் ஃபிக்ஸிங்: சமையல் இலக்கியம்.
)
புதன் கிழமை, April 11, 2007 at 8:33 பிற்பகல்
Ennai madiri keerai piriyarkaluku ipadi niraiya keerai recipes sollunga.
Thanks and regards, PK Sivakumar
புதன் கிழமை, April 11, 2007 at 8:36 பிற்பகல்
I want to print most of these recipes, but with the images in them etc, its a costly thing (i mean dont want to waste printer ink to print images)
Like yahoo maps has an option to print directions without maps, you should give an option to print recipes in simple text without images. For example, give print link on every post. When clicking it, it should open only the recipe in text in a new window which the user can print. Please consider it.
Thanks and regards, PK Sivakumar
வியாழன், April 12, 2007 at 11:19 பிற்பகல்
சிவா, புல்லரிக்க வைக்கறீங்களேப்பா! WP அண்ணன்களைக் கேட்டு ஆவன செய்றேன்.
கீரை ரெசிபிதானே, அசத்திடலாம்.
வியாழன், April 12, 2007 at 11:26 பிற்பகல்
ப்ரசன்னா,
வாருங்கள் (இங்கயுமா?
)
///கீரை மசியலுக்கெல்லாம் ஒரு பதிவா என்று கேட்க விரும்பவில்லை. எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாதிரி செய்ய எண்ணமிருக்கிறதோ என்னவோ.///
அதே அதே அஃதே!
//படங்களுடன் போடுவது நன்றாக இருக்கிறது.//
அப்படியா, (நம்பவே முடியலையே!)நன்றி.
//கீரை மசியல் அடர் பச்சை நிறத்தில் இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.//
அதானே பார்த்தேன், இதுகூட சொல்லலைன்னா இலக்கியவாதின்னு எப்படி ஆகும்? அதெல்லாம் அடர் பச்சை எல்லாம் முளைக்கீரை, அரைக்கீரைக்கு தான் வரும். இது பாலக்.
//அதுவும் ‘ரசம் சாதத்துடன் கீரை’ காம்பினேஷனே எனக்குப் பிடித்தமானது.//
கீரை மட்டும் இருந்துட்டா, எந்த சாதக் காம்பினேஷனும் எனக்கு ஓக்கேதான்.
//(மேட்ச் ஃபிக்ஸிங்: சமையல் இலக்கியம்.
)//
என்னை மாதிரி பொறவி இலக்கியவாதி எல்லாம் எல்லா இடத்துலயும் ‘இது இலக்கியம்’னு லேபிள் குத்திவைக்க மாட்டாங்க. அதுவாவே இலக்கியமா தன்னைத் தானே எழுதிக்கும். மக்கள் புரிஞ்சுப்பாங்க!
மற்றபடி உங்கள் கருத்துக்கு நன்றிகள்! (கவிதை எழுதினாத்தான் கருத்து வைக்கறாங்கன்னு தலைமறைவா ஓடிவந்தா சமையல் குறிப்புக்குமா?)