தென்மாநிலங்களைத் தாண்டி இருக்கும் பலருக்கு நமது ஸ்பெஷல் உணவாக இட்லி, தோசை தெரியும் அளவுக்கு அடை பற்றித் தெரிவதில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கும். (அவர்களாகவே நம் ஊர்ப் பக்கம் வரும்போது ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டாலும், அங்கே அவ்வளவு சுவையான மொறுமொறுப்பான அடைகள் கிடைப்பதில்லை என்பது என் எண்ணம்.) தயாரிக்கும்போது எடுக்கும் அதீத நேரம் காரணமாக அதை நாம் பலர் அவர்களுக்கு அறிமுகப் படுத்தவே இல்லையோ என்று நினைப்பேன். 4 பேர் வந்திருக்கிறார்கள் என்கிற பொழுது அவர்களை உட்காரவைத்து நிதானமாக அடை செய்துகொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். பெரிய விருந்துகளில் அடைக்கு இடமே இல்லை. ஆனால் என் தனிப்பட்ட நாள்களில் அடை என் விருப்பமான தேர்வாகவே என்றும் இருந்திருக்கிறது. டிஃபனுக்கு என்ன செய்வது என்று யோசிக்கவே போரடிக்கும் நேரங்களிலோ, தொடர்ந்து வேறுவேலைகள் இருக்கும்போதோ, ஐந்தே நிமிடத்தில் அடைக்கு ஊறவைத்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போகலாம். தயாரிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னால் மிக்ஸியில் அரைத்தால் போதும். பெரிய முன்னேற்பாடுகளோ, தயாரிப்பில் பெரிய நுட்பங்களோ, தவறுகளுக்கோ இடமே இல்லாதது. அடுப்பில் கல்லில் வேகக் காத்திருக்கும் நேரத்தில் கையில் புத்தகத்தோடு இருக்கலாம்; இடை இடையே சமையலறையில் வேறு சின்னச் சின்ன வேலைகளை கவனிக்கலாம்; அலட்டிக்கொள்ளாமல் டிவி பார்க்கலாம், நிதானமாக சண்டை போடலாம்… லாம்.. லாம்..
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிது
உப்பு, எண்ணை – தேவையான அளவு
விரும்பினால்..
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
கொத்தமல்லிக் கட்டு – 1
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- அரிசி, பருப்புகளை தனித்தனியாக ஊறவைக்கவும்.
- அரிசியோடு மிளகாய், காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக ரவை பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- பருப்புகளை ரவை பதத்தை விடப் பெரிதாகவே இருக்குமாறு அரைத்து, அரிசிக் கலவையோடு கலந்துகொள்ளவும்.
- தேங்காய்த் துருவல், மெலிதாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து, மெதுவாக அழுத்தாமல் கலந்துகொள்ளவும். (பொதுவாக காய்கறிகளை, ஏதாவது கலவைகளில் சேர்க்கும்போது கையாலோ, கரண்டியாலோ அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. நறுக்கப்பட்ட காய்களிலிருந்து அதன் சாறு வெளியேறி, மாவில் கலந்து சுவையைப் பெருமளவில் கெடுத்துவிடும்.)
- கெட்டியாக அரைத்த மாவைக் கையால் உருட்டி, அடுப்பில், தோசைக் கல்லில் தட்டவேண்டும்.
- சுற்றிலும் எண்ணை விட்டு, நடுவிலும் துளை செய்து எண்ணை விடவேண்டும்.
- நிதானமான சூட்டில், நன்கு சிவப்பாக வேகும்வரை காத்திருந்து திருப்பிப் போடவும்.
- மீண்டும் சுற்றிலும், நடுவிலும் எண்ணை விட்டு இந்தப் பக்கமும் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
- பின் மொறுமொறுப்பாக மாற இரண்டு பக்கமும் இன்னும் ஒரு முறை திருப்பிப் போட்டு சுடவைத்து எடுக்கவும்.
* அரிசிக்கு புழுங்கலரிசி நனைத்தால் மெத்தென்று இருக்கும். பச்சரிசியில் மொறுமொறுவென்று வரும். எது தேவையோ அந்த அரிசியை அதிகம் சேர்க்கவும்.
* அடை கரகரப்பாக இருக்க துவரம்பருப்பு அதிகமாகவும், விள்ளல் விள்ளலாக இருக்க கடலைப் பருப்பு அதிகமாகவும், மென்மையாக இருக்க உளுத்தம் பருப்பு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளவும்.
* ரிஃபைண்ட் ஆயில், நெய், தேங்காய் எண்ணை சம அளவில் கலந்துகொண்டு அடைக்கு உபயோகிப்பது, வேறு உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும்.
* அடையை நான்- ஸ்டிக்கில் செய்வதோ, எண்னை குறைவாக விடுவதோ, அடைக்கும், அது பயணிக்கும் நாவிற்கும் நான் செய்யும் உச்சபட்சத் துரோகம். அப்படி எல்லாம் 4 அடை சாப்பிடுவதை விட, ஒரே அடை உருப்படியாக சாப்பிட்டுவிட்டு அந்த திருப்தியிலேயே கொஞ்சம் பட்டினி இருக்கலாம் என்பது என் கோட்பாடு. (அதற்காக ஒரே அடையோடு எழுந்திருக்க முடியுமா?
சும்மா ஒரு வேகத்துக்காக வசனம் பேசறதுதான்.)
* அடை மாவை சற்று மசிய, தளர அரைத்தும் கரண்டியால் நடுவில் வைத்து சுற்றிலும் இழுத்து சுலபமாக வார்க்கலாம்.
* அரை கப் தேங்காய்ப்பாலோ, 4 டீஸ்பூன் நல்லெண்ணணயோ மாவில் சேர்த்துப் பார்க்கவும்.
* எப்பொழுதும் இரண்டு கேரட் சேர்த்து அரைத்துவிடுவேன். நல்ல நிறத்தையும் சுவையையும் கொடுக்கும். (ஆனாலும் கேரட்டின் வாசனை வராது.)
* இளம் முளைக் கீரை அல்லது பாலக், கோஸ், உருளை, சௌசௌ இருந்தால் மெலிதாக அரிந்து சேர்க்கலாம். ஆனால் காய்கறிகள் சேர்ப்பது கொஞ்சம் மொறுமொறுப்பிற்கான சாத்தியங்களைக் குறைக்கும்.
* வாழைப்பூவின் உள்பகுதியோ, முருங்கைக் கீரையோ கிடைத்தால் உடனே அவசியம் அடைக்கு ஊறவைக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அடைக்கு அவியல் என்று கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. அதுவாகவே அமைந்தால் ஒழிய நான் அப்படி மெனக்கெட்டதில்லை. அதன் பங்காளிகளான மோர்க்குழம்பு ஃபாமிலி கூட ஓக்கேதான்.
குழம்பு, சட்னி வகைகளை ஒரு பழக்கதோஷத்தில் சும்மா சொல்லிக் கொள்ளலாம்.
என்னைக் கேட்டால் எதுவும் தொட்டுக்கொள்ளாமலே சாப்பிடலாம் அல்லது மிளகாய்ப் பொடி.
கடைசி அடையின்போது அதன்மேல் தயிரும் விட்டு சாப்பிடலாம்; அதை அடுத்து ஒரு காப்பி சாப்பிடப் போவதில்லை என்ற நிலை இருந்தால்.
என் மாமனார் அடையில் ரச மண்டியை விட்டுச் சாப்பிடுவாராம். என் பெண்ணும் இப்போது அப்படியே ஊறவைத்து சாப்பிடுகிறாள். இதெல்லாம் கூடவா ஜீனிலிருந்து வரும்??
“சே, இப்படி தயிரும் ரச மண்டியும் விட்டுச் சாப்பிடுவீங்கன்னா நான் ஏன் மெனக்கெட்டு அடையை மொறுமொறுப்பாக எடுக்கணும்? பேருக்கு வேகவைச்சுப் போடறேன்!” என்று முனகிக் கொண்டே ஆனால் அடுத்த அடையை அதைவிட சூப்பர் மொறுமொறுப்பாக எடுத்துப் போடுவேன்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2007 at 9:20 பிற்பகல்
ஜெயஸ்ரீ, சூப்பர் அடைம்மா.
இதுக்கு வெல்லமும் வெண்ணையும் தானெ காம்பினேஷன்?
இல்லேன்னால் இருக்கவே இருக்கு மிளகாய்ச் சட்டினி,
கோமளாப் பாட்டியின் ஃபேமஸ் சட்டினி.
————————————-
உருட்டின புளி,
ஐந்து பச்சைமிளகாய்
5 சிவப்பு மிளகாய்
கட்டு கொத்தமல்லி
பெருங்காயம்
துளி வெல்லம்
சேர்த்து அம்மியில்(மட்டுமே)
ஓட்டினால்
அமிர்தமான துகையல் ரெடி.
வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2007 at 10:01 பிற்பகல்
ரேவதி நரசிம்மன், நல்லவேளை நியாபகப் படுத்தினீங்க. எங்க ரங்கமணியோட கடைசி அடைக்கு வெல்லமே துணை. என்ன காம்பினேஷனோ, எனக்கு இந்த மாதிரி காரத்தையும் இனிப்பையும் கலந்து சாப்பிடறதுல எப்பவுமே உடன்பாடில்லை. பேல் பூரி, பானி பூரி வகையறா வாங்கிச் சாப்பிட்டாலே ‘மீடா சட்னி நஹி’ நியாபகமா முதல்லயே சொல்லிடுவேன்.
உங்க சட்னியை கொத்தமல்லிச் சட்னி பதிவுக்குக் கடத்தறேன். நன்றி உங்களுக்கும் கோமளாப் பாட்டிக்கும்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2007 at 10:20 பிற்பகல்
அதானே.. அடைக்கும் அவியலுக்கும் என்ன சம்மந்தம்? வெல்லம், வெண்ணெயை அடிச்சுக்க முடியாது…
திங்கட் கிழமை, மார்ச் 26, 2007 at 6:20 மு.பகல்
அடை பிடிக்காத ஆளும் உண்டோ ?!!
அடை+வெல்லம், பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிகம் பிடிக்கிறது போலும்! எங்க வீட்டிலயும் அப்படியே!
திங்கட் கிழமை, மார்ச் 26, 2007 at 10:41 மு.பகல்
சொக்காயி,
பொதுவாவே பெண்களுக்கு கொஞ்சம் நல்ல ரசனை உண்டில்ல, அதனால இருக்கும். அடை வெல்லம் சரி. ஆனா ரேவதி நரசிம்மனும் பிரகாஷும் வெண்ணை வேற சொல்றாங்க. ஏற்கனவே அடைல அவ்ளோ எண்ணை. இதுல வெண்ணையை எப்படி? :-SS
புதன் கிழமை, ஜூலை 25, 2007 at 3:07 மு.பகல்
//கடைசி அடையின்போது அதன்மேல் தயிரும் விட்டு சாப்பிடலாம//
Me too!
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2007 at 5:11 பிற்பகல்
//வெல்லம், வெண்ணெயை அடிச்சுக்க முடியாது…//
அதுவே என் கட்சி, இல்லைனா
//என்னைக் கேட்டால் எதுவும் தொட்டுக்கொள்ளாமலே சாப்பிடலாம்//.
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 9, 2007 at 2:15 மு.பகல்
enakku adai enraal romba pidikkum; Adhuvum vellam,nei yudan saapida innamum pidikkum. Ennal pacchirisi arrange seiya mudiyaadhadaal, basmati rice vaithu seiyalaam enru irukkiraen. Ozhungaaga vandaal therivikkiraen..illaiendraal……………………….
hihihi
திங்கட் கிழமை, செப்டம்பர் 10, 2007 at 12:13 பிற்பகல்
ramya,
நாங்க ப்ரான்ஸ்ல பாரிஸ்லயே இருந்தோம். அதனால எல்லாப் பொருள்களுமே Gard e Nordல கிடைக்கும். மிகப் பெரிய கடைத் தெரு. தமிழ்நாட்டுக்குள்ள இருக்கற மாதிரி உணர்வு வரும். பொங்கலுக்கு மஞ்சள் கொத்து அவ்ளோ செழுமையா (export quality) ஸ்ரீரங்கத்துலயோ சென்னை ரெங்கநாதன் தெருவுலயே கூட கிடைச்சதில்லை. அப்படி எப்பவாவது போகும்போது அல்லது போறவங்ககிட்ட சொல்லி முக்கிய பொருள்களை வரவழைக்கலாம்.
அல்லது பொதுவா தூதரகத்து ஊழியர்கள் எல்லாரும் சில மளிகைப் பொருள்களை இந்தியாவிலேருந்து எடுத்துவருவாங்க. (இதை நான் கடுமையா எதிர்ப்பேன்.) கடைகள்ல சொன்னா அவங்களே மாத்திரை எல்லாம் போட்டு பேக் பண்ணித் தருவாங்களாம். நீங்க அப்படிக் கூட கொஞ்சமா கொண்டுவந்து தவிர்க்கமுடியாத உணவுகளுக்கு மட்டும் உபயோகிக்கலாமே.
திங்கட் கிழமை, செப்டம்பர் 10, 2007 at 2:16 பிற்பகல்
I have been to gare du nord and wished I had stayed there forever. Actually if we need, we will only have to go which is very expensive. And there is no one we know who could get it for us. Anyway matter of few more months. I am just waiting to get back to India to eat whatever I want to.
happy news isn’t it?
And thats nice to know that you stayed in Paris. Thats great! Paris is one different place with so many Indians around..anyway hubby is planning to go next week for some issue, so I might get some raw-rice soon..
வியாழன், பெப்ரவரி 21, 2008 at 4:00 மு.பகல்
could you tell me how long paruppu and arisi should be soaked in water??
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 22, 2008 at 11:43 மு.பகல்
dtambika, புழுங்கல் அரிசி இருக்கறதால குறைந்தது மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் ஊறவைக்கலாம்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 28, 2008 at 11:55 பிற்பகல்
adaiyum rasa mandiyum… aahaaa enakkum piditha combination. vellam irandaam idamthaan:( vazhaipoo eppadi adaiyil serpathu… konjam explanation please:)
செவ்வாய்க் கிழமை, ஏப்ரல் 1, 2008 at 11:01 மு.பகல்
Latha, வாழைப்பூ மேலாக எடுக்காமல் உள்பூவா எடுத்துக்குங்க. அதிகம் துவர்க்காம இருக்கும். அப்படியே பொடிப்பொடியா நறுக்கி, கையால அழுத்திடாம, மாவுல விரலால கலந்துக்கங்க. அல்லது ஒரு டீஸ்பூன் எண்ணெய்ல லேசா வதக்கிட்டு சேர்த்தா பிரச்சினையே இல்லை.
வியாழன், ஏப்ரல் 3, 2008 at 5:49 பிற்பகல்
ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சிட்டிருந்தேன் .வாரம் ஒரு தடவையாவது செய்துவிடுவேன்,சூப்பரா வருது.அடை மட்டுமில்ல நிறைய குறிப்புகள் செய்து பார்த்திருக்கிறேன்.. உங்களோட பின் கதைகள் இன்னும் சூப்பர்..ஆங் சொல்ல மறந்துட்டேனே… தேங்க்ஸ்!
செவ்வாய்க் கிழமை, ஏப்ரல் 21, 2009 at 9:49 பிற்பகல்
Hi jayshree ma’am
Thanx for the wonderful recipe!!I followed u’r recipe and my adai turned out to be crispy and tasty..
Enakku adai maavu pulicha dhaan pidikkum..So i always grind the batter and leave it overnight.So next day,super pulicha adai will be ready.
சனிக்கிழமை, மே 2, 2009 at 11:04 பிற்பகல்
Idhu Ramyavukku ennudan paditha Ramyava nee? Naan tiruchiyil padithen, mookambikai
naan ippo singapooril irukkiren naan jayashree akkavin samayalaal than inkey pilaikiren illaiyel all out.
Thanks jayashree madam
வெள்ளிக்கிழமை, மே 22, 2009 at 7:32 மு.பகல்
Dear Jayshree,
I enjoyed reading your recipes. i like to have adai with butter home made and gur ( vellam) The measurement I put for Adai is 2 1/2 cup raw rice, 1 cup tur dal 1 cup chana dal 1/4 cup udad dal. soak all together for 1 hr coarse grind this with red chilly, green chilly, karuveppilai, inji perungayam. i add plenty of karuveppilai. then after grinding i add finely cut coriander and i make adai with kuzhi karandi, it turns out well crispy. hope u like my comments and my recipe for Adai.