தேவையான பொருள்கள்:
தக்காளி - 4 (பெரியது)
பயத்தம் பருப்பு – 1/2 கப் (வேகவைத்தது)
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கார்ன்ஃப்ளோர் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க - கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
- பயத்தம் பருப்பை லேசாக வேகவைத்துக் கொள்ளவும். முழுக்க மசிந்தாற் போல் இல்லாமல் இலை இலையாகத் தனியாகத் தெரிய வேண்டும்.
- ஒரு தக்காளியை அரிந்து அத்துடன் ஒரு பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லித் தழை, தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து அத்துடன் மீதித் தக்காளிகளை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
- இறுதியில் வேகவைத்த பயத்தம் பருப்பு, தண்ணீர் சேர்த்து சற்று தளர இருக்குமாறு கொதிக்கவைத்து இறக்கவும்.
- கொத்சு, சேர்ந்தாற்போல் இருப்பதற்கு கடலைமாவிற்குப் பதில் கார்ன்ஃப்ளோர் 1/2 டீஸ்பூன் கரைத்துவிட்டால் சுவை மாறாமல் இருக்கும்.
- இன்னும் சிறிது நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
